Thursday, August 16, 2007

26ம் தேதி தென்காசியில் வைகோ உண்ணாவிரதம்

26ம் தேதி தென்காசியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்


6 பேர் படுகொலை செய்யப்பட்ட தென்காசியில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், வருகிற 26ம் தேதி தனது தலைமையில் மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென்காசியில் நடந்துள்ள இந்த படு பாதகச் செயலால் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் திகிலும், பீதியும் நிலவுகிறது. அவர்கள் மனதில் பழிவாங்கும் உணர்ச்சி உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பகையை மறந்து அனைத்துத் தரப்பினரும் இணக்கத்துடன் இருக்க முன்வர வேண்டும். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனது தலைமையில் மதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் வைகோ.

No comments: