Saturday, October 27, 2007

நாஞ்சில் சம்பத் மதுரையில் சிறையில் திமுக ரௌடிகளால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்

MADURAI: Marumalarchi Dravida Munnetra Kazhagam propaganda secretary Nanjil Sampath was allegedly assaulted in the Madurai central prison on Friday.

A few inmates accused in the Dinakaran newspaper attack case allegedly roughed him up around noon. Mr. Sampath was reportedly rescued by jail warders and moved to safety.

On the directions of the Madurai Bench of the Madras High Court, he was shifted to the Tiruchi central prison in the evening.

The issue was brought to the notice of the Madurai Bench at 4.30 pm on Friday. M. Ajmal Khan, counsel for Mr. Sampath, told a Division Bench comprising Justices F.M. Ibrahim Kalifulla and S. Palanivelu that a gang led by ‘Attack’ Pandi, prime accused in the Dinakaran newspaper attack case, had brutally attacked his client.

Stating that he would file a habeas corpus petition by Monday, counsel apprehended that Mr. Sampath’s life would be at peril during the weekend. Hence, he urged the court to issue suitable directions.

The Judges called for one of the Government Advocates and orally directed him to instruct prison officials to provide sufficient protection to the MDMK leader.

Mr. Sampath was arrested on charges of making derogatory remarks against Chief Minister M. Karunanidhi at a public meeting held in Batlagundu on Wednesday.

http://www.hindu.com/2007/10/27/stories/2007102757310100.htm

Friday, October 26, 2007

அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை, அக். 25: மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதற்கு கட்சியின் பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ம் தேதி இரவு நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது திமுக குண்டர்கள் உருட்டுக் கட்டைகள், இரும்புக் குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே நுழைந்து கூட்டத்தில் இருந்தவர்களை அடித்து, விரட்டி மேடையில் பேசிக் கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த மதிமுக நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.

ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் 45 நிமிஷம் நடத்திய இந்தத் தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை. வன்முறையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்தத் தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும் மாவட்டச் செயலர் செல்வராகவனும் காயமடைந்தனர். மாவட்ட அவைத் தலைவர் அருள்சாமி பலத்த காயமடைந்தார்.

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, ஊழல்களை, காவல்துறையினரின் அராஜகத்தை நாஞ்சில் சம்பத் விமர்சித்து வருவதால் இந்தத் தாக்குதலை திமுகவினர் திட்டமிட்டு நடத்தி உள்ளனர்.

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல, நாஞ்சில் சம்பத் மீது பொய் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல்லில் அவர் இருந்த இடத்துக்கு வந்து நள்ளிரவு இரண்டு மணி அளவில் கைது செய்து நிலக்கோட்டை நீதிபதி வீட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தி பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபோல் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் வன்முறைத் தாக்குதல் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டு மதிமுக துளியும் அஞ்சாது.

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்ட நாஞ்சில் சம்பத் மற்றும் பிற நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

-------------------------------------------
தினமணி செய்தி (26.10.2007)

-------------------------------------------

விகடன் தினசரி செய்தியில் 26.10.2007 அன்று வெளிவந்த வைகோ-வின் அறிக்கை:

அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது: வைகோ அறிக்கை

வத்தலக்குண்டு, அக். 26-: அமைச்சர்களை அவதூறாக பேசியதாக ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நேற்று முன்தினம் இரவு ம.தி.மு.க.வின் 14-ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது தி.மு.க. அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. சோடா பாட்டில்கள்,சேர்கள் வீசப்பட்டன. இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த சம்பவத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் காயம் அடைந்தனர்.


இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கணேசன் வத்தலக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதில் வத்தலக்குண்டு ம.தி.மு.க. பொது கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அமைச்சர்கள் மு.க.ஸ்டாலினையும், இ.பெரியசாமியையும் தரக்குறைவாக பேசினார். அப்போது டீ குடித்துக்கொண்டு இருந்த எங்கள் மீது ம.தி.மு.க.வினர் சேரை எடுத்து வீசியதில் நானும், பாண்டி, கண்ணன், சரவணன், தினேஷ் ஆகியோர் காயம் அடைந்துள்ளோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் செய்தார்.

அதன்பேரில் வத்தலக்குண்டு போலீசார் நாஞ்சில் சம்பத் மீது அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல்லில் தங்கி இருந்த நாஞ்சில் சம்பத்தை அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ந் தேதி நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்த போது தி.மு.க.வின் குண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக்குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே தழைந்து, நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவனும் காயம் அடைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் அருள்சாமி நெற்றியில் பலத்த காயமுற்று மயக்கம் அடைந்து மேடையில் விழுந்து இருக்கிறார். அவரது காயத்துக்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலையிலும் பலத்த காயம் அடைந்து தையல்போடப்பட்டுள்ளது.

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.வினர் கொடுத்த புகாரையும், பதிவு செய்ய மறுத்து விட்டனர். நாஞ்சில் சம்பத் வன்முறையை தூண்டியதாக அபாண்டமாக குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபோன்ற வன்முறை, போலீசாரின் அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, சிங்கம் என களத்தில் நிற்கும்.

எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி குண்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மதிமுக கூட்டத்தில் திமுக பயங்கர வன்முறை: தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நேற்று இரவு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது பொதுக்கூட்ட மேடையில் கல் மற்றும் பெட்‌ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் தாக்குதலுக்கு உள்ளான நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தட்ஸ்தமிழ் செய்தி (25.10.2007):

வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2007

வத்தலக்குண்டு: வந்தலகுண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குறித்து நாஞ்சில் சம்பத் கீழ்த்தரமாக பேசியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். மேடையில் இருந்த மதிமுக பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்நிலையில் கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாக மதிமுக மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற மதிமுக பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பல்வேறு குட்டித் தலைவர்கள் பேசி முடித்த நிலையில் இரவு 10 மணிக்கு மைக்கைப் பிடித்தார் நாஞ்சில் சம்பத்.திமுக அரசை தனது வழக்கமான தீப்பொறிப் பேச்சால் தாக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் கருணாநிதி குறித்து மிக மட்டமாக பேச ஆரம்பித்தார்.

இந் நிலையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கற்களை வீசியபடி கூட்டத்துக்குள் புகுந்தது. அவர்களை தடுக்க மதிமுகவினரும் அதிமுகவினரும் முயன்ற நிலையில் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்துக்குள் பெட்ரோல் நிரப்பட்ட பாட்டில்கள் எரிந்தபடியே வந்து விழுந்து வெடிக்கவே மதிமுகவினரும் அதிமுகவினரும் கலைந்து ஓடினர்.

அடுத்தபடியாக அங்கு கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்து எரிந்த அந்த கும்பல், நாற்காலிகளையும் தூக்கி வீசியது. கூட்டம் அலறியடித்துக் கொண்டு கலைந்து ஓடிய நிலையில் மேடையில் ஏறிய அடாவடிக் கும்பல் மாவட்ட அவைத் தலைவர் அருள் சாமியை தலையில் அரிவாளால் வெட்டியது.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் சரிந்தார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டு, அனைவருக்கும் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதில் நாஞ்சில் சம்பத், மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர்.

இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர்களையும் தரக்குறைவாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தலகுண்டு திமுகவினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் லாட்ஜில் தங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இரவோடு இரவாக ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2007/10/25/tn-mdmk-leader-nanjil-sampath-arrested-dindigul.html

--------------------------

மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது பின் வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன:
நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்)...
திமுக தலைவர் மு. கருணாநிதி சுப்ரீம் கோர்ட் தடையையும் மீறி சட்ட விரோதமாக பந்த் நடத்தினார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிமன்ற தடையையும் மீறி சட்டத்திற்க்கு உட்பட்ட 'சனநாயக(?!)' கடமையாம், ஆனால் பிற கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுவதாகுமாம். அப்பாவி மக்களுக்கு அமைதியாக அவர்களின் பிரச்சனையை விளக்கினால் சட்டவிரோதமா? வாழ்க சனநாயகம்.

148 (தாக்குதல் நடத்த சதி)...
தாக்குதல் நடத்த சதி செய்தார்களா? அதற்கு என்ன ஆதாரம்? தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

324 (காயம் ஏற்படுத்துதல்)...
மதிமுக-வினரை அரிவாளால் வெட்டியும், கற்களையும், பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியும் அட்டூழியம் செய்த திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்)...
கருணாநிதியும் திமுகவில் உள்ள இன்னபிற தலைவர்களை(?!) விடவா ஆபாசமாக பேசாததைவிடவா இவர் பேசிவிடப் போகிறார்?

506 (கொலை மிரட்டல்)...
யாருக்கு கொலை மிரட்டல் விட்டார்? சத்தமில்லாம காரியத்தையே முடிக்கின்ற இந்த காலத்தில் இப்படி எல்லாம் மேடை போட்டு பேசினாலும் சனநாயக முறையில் மேடையிட்டு சவால் விட்டால் அது மிகப்பெரிய தவறுதானே!

மதுரையில் 3 அப்பாவிககளைக் கொன்ற அழகிரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சிபிஐ விசாரணை என்ன ஆயிற்று? தா. கிருட்டிணனைக் கொன்ற கொடும்பாவி அழகிரியைக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? தனது பொருப்பற்ற பேச்சால் ஓசூரில் 2 அப்பாவித் தமிழர்கள் உயிருடன் எரிக்கப்படக் காரணமாக இருந்த கருணாநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இவர் பேசிய பேச்சால்தானே இரு தமிழ் உயிர்களை நாம் இழந்தோம். அவரின் பொருப்பற்ற பேச்சுக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? கண்துடைப்புக்காக அமைக்கப்படும் விசாரணைக் கமிசன்கூட அமைக்கப்படவில்லையே!

திமுகவினர் ஆட்சியில் இல்லாதபோதே இதுபோன்ற அநியாங்களைச் செய்வார்கள். இப்பொழுது கேட்கவும் வேண்டுமா?? என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வார்கள். வாழ்க ஜனநாயகம்...

ஞாநி பத்திரிக்கை சுதந்திரத்தின் அடிப்படையில் கருணாநிதியை விமர்சித்து எழுதினால், இவர்களின் முகமூடியை கிழித்து வீசினால்... கண்டனக் கூட்டமொன்றைக் கூட்டி ஞாநி பார்ப்பான், முற்போக்கு முகமூடியணிந்து எழுதும் பார்பன பரதேசி என்றும், ஞாநிக்குப் பார்ர்பனத் திமிர் அதிகம் என்றும், பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியான் என்றும் எனச் சாடுவர். அதனால் ஞாநி மனதளவில் பாதிக்கப்படுவார்.

ஆனால் நாஞ்சில் சம்பத்தை பபர்ப்பன பரதேசி என்று திட்ட முடியாதல்லவா! வெறுமனே பரதேசி எனத் திட்டினால் நாஞ்சில் சம்பத் அல்லது பிற மதிமுகவினர் அப்படி மனதளவில் பாதிக்கப்படுவார்களா? மாட்டார்களல்லவா!! அதனாலதான் இப்படித்தாக்குதல் நடத்துகின்றனர்.

இது இன்று நேற்றல்ல... மதிமுக ஆரம்பித்த காலம் முதல் பல இன்னல்கள் திமுகவிடமிருந்து வந்த வண்ணம்தான் உள்ளன.

அது என்னவோ வைகோ, மதிமுக, சங்கு (சங்கொலி) என்றாலே கலைஞருக்கும் திமுகவுக்கும் பயம் வந்து விடுகிறது. நிதானத்தை இழந்துவிடுகிறார்கள். 'ராமரை'க் கூட அனாயசமாக சமாளிக்கும் அவர்களுக்கு மதிமுகவினரைக் கண்டால் உள்ளூர ஒரு உதறல் இருக்கிறது. ஒரு வேளை கலைஞருக்காவே கூட இருந்த உழைத்ததால், கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதாலோ?

நான் முன்பு குறிப்பிட்டதப்போல ஞாநி கருணாநிதியை விமர்சனம் செய்து எழுதினால் "ஆரிய ஞாநி", "பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியார்" என கண்டனக் கூட்டம் நடத்துவார்கள். பாவம் அவர்களால் நாஞ்சில் சம்பத்தை பார்ப்பான் என சொல்லி திட்ட இயலாது. அவர்கள் இயலாமையைக் காட்ட இப்படித்தான் எதாவது செய்து தாக்குதல் நடத்துகிறார்கள். நடத்தட்டும்... நடத்தட்டும்... இது இவர்களுக்கு மதிமுக-வின் வளர்ச்சிமேல் உள்ள பய உணர்வையே காட்டுகின்றது.

இது குறித்து இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tuesday, October 23, 2007

ம.தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு

தி.மு.க.,வில் இருந்து 94ம் ஆண்டு வெளியேற்றப்பட்டதும் ம.தி.மு.க., என்ற கட்சியை துவக்கி தொடர்ந்து கட்சியை நடத்தி வரும் வைகோ, 14 ஆண்டுகளாக பல்வேறு தோல்விகளை தாங்கிக் கொண்டு தன்னுடன் இருக்கும் தொண்டர்களை புகழ்ந்து தள்ளுகிறார். இத்தனை ஆண்டுகளாக நிறைய துன்பங்களை அனுபவித் துள்ள ம.தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். "தமிழக அரசியலில் எங்களுக்கும் ஒரு "இன்னிங்ஸ்' கண்டிப்பாக உண்டு' என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

அ.தி.மு.க.,வுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் கொண்டுள்ள கூட்டணி எப்படி உள்ளது?
இரண்டு கட்சியினரிடமும் பரஸ்பரம் மதிப் பும், மரியாதையும், நல்லெண்ணமும் உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா முதல் தொண்டர்கள் வரை எல்லா மட்டத்திலும் நெருக்கம் உள்ளது. பரஸ்பர அன்பும் மதிப்பும் கட்சிக்கு வலுவூட்டுகிறது. எங்களது கட்சியின் தனித்தன்மையை சமரசம் செய்து கொள்ளாமல் கூட்டணி நீடித்து வருகிறது.

நீங்கள் இடம்பெற்றுள்ள மூன்றாவது அணி எந்த நிலையில் உள்ளது?
மூன்றாவது அணியில் தற்போது செயல்பாடுகள் இல்லை. இந்த அணியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.,வின் நிலை தான் ம.தி.மு.க.,வின் நிலை.

காங்கிரஸ் அல்லது பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எப்படி பார்லிமென்ட் தேர்தலை சந்திப்பீர்கள்?
மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்ற நிலை இனிமேல் எந்தக் காலத்திலும் இருக்காது. மாநிலக் கட்சிகளின் ஆட்சி தான் அமையும். அல்லது மாநிலக் கட்சிகளின் தயவில் தான் மத்தியில் ஆட்சி அமையும். நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற தேசிய கட்சி எதுவுமே இல்லை. தேசிய கட்சிகளின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, தேசிய கட்சிகளை சார்ந்து தான் அரசியல் உத்தியை வகுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மத்திய அரசு கவிழும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?
இப்போதும் சொல்கிறேன். அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் வரும். குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்காக மத்திய அரசு கவிழாது என்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். காங்கிரசுக்கு ஐந்தாண்டுகள் ஆதரவு அளித்துவிட்டு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தேர்தலை சந்திக்க முடியாது. எனவே, இடையிலேயே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவது குறித்து?
ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வி அடைந் தார்கள். இப்போது கட்சியில் ராகுலை முன்னிலைப்படுத்துவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து?
சுனாமி நிவாரணப் பொருட்களை அவர் அனுப்பியுள்ளார். அவர் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் பிணையில் விடுதலை ஆவதற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்தது மகிழ்ச்சி. ஆனால், இதே நிலைப்பாட்டை ம.தி.மு.க., அமைப்புச் செயலர் கைது செய்யப்பட்ட போது போலீசார் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தது பழிவாங்கும் போக்கு.

இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர் களுக்கு இரண்டு மாநிலங்கள் ஒதுக்கி இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்து உள்ளதே?
இது வெறும் கானல் நீர். தமிழர்களுக்கு உரிய உரிமைகளை 50 ஆண்டுகளாக கொடுக்காமல் இலங்கை அரசு மறுத்து வருகிறது. எனவே, இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியம் இல்லை. தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை இனவாத அரசு ஈடுபட்டு வருகிறது. ஐ.நா., மனித உரிமைக் குழு அலுவலகம் அமைக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இந்த துரோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை ஏன்?
எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஆடம் பரத்தில் விருப்பம் இல்லை. கட்சியின் பிறந்த நாள் தான் கொண்டாடப்பட வேண்டியது. கட்சி தான் நிரந்தரம். நான் நிரந்தரம் இல்லை.

பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்குவது ஏன்?
பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு கட்சி எல்லைகளை மறந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி உள்ளேன். அனைவரும் மெச்சுகிற அளவுக்கு என்னால் பணியாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளேன். பார்லிமென்ட் தேர்தலில் குறைந்த இடங்கள் கிடைத்ததால் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் வெளியில் இருந்தே பணியாற்றலாம் என்ற எண்ணத்தில் போட்டியிடவில்லை. நான் போட்டியிடாதது அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக பதவிக்கே வர மாட்டேன் என்று சொல்லவில்லை. மக்கள் எனக்கு கொடுக்கும் கடமையை செய்வேன். அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்துப்படி முடிவெடுக்கப்படும். இவ்வாறு வைகோ பதிலளித்தார்.

இந்திய அரசின் துரோகத்துக்கு கருணாநிதியே பொறுப்பு

* இலங்கைக்கான ஆயுத உதவியை சாடுகிறார் வைகோ

இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி ஈழத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு செய்யும் துரோகத் தனத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியே பொறுப்பேற்க வேண்டுமென ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர்த் தளபாடங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது குறித்து வைகோ மேலும் தெரிவித்துள்ளதாவது;

"இலங்கையரசுக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இத்துரோகத்தனத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர்களுக்கு இரண்டு மாநிலங்களை ஒதுக்கி இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனக் கூறப்படுவதெல்லாம் வெறும் கானல் நீர். தமிழர்களின் உரிமைகளை கொடுக்க முடியாதென 50 ஆண்டுகளாக இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியமானதல்ல.

தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கக் கூட அந்த அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் கூட இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களை படுகொலை செய்யவே பயன்படப் போகின்றன.

எனவே இந்திய மத்திய அரசின் இவ்வாறான துரோகத்தன செயல்களை தட்டிக் கேட்காது, தடுக்காது மௌனம் காக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளே குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும்" தெரிவித்துள்ளார்.

Tuesday, October 16, 2007

என் சவாலுக்கு என்ன பதில்? - வைகோ

அறைகூவல் விடுவது, அதனை நிருபிக்காவிட்டால் அரசியலை விட்டே விலகுகிறேன் எனச் சவால் விடுவது எனக்கு வழக்கம் அல்ல. வாடிக்கையும் அல்ல. அப்படிச் சவால் விடுவதெல்லாம் கலைஞர் கருணாநிதி அவர்களுக்குக் கைவரப் பெற்ற கலை என்பதை நாடு அறியும். அப்படியானால், ஏன் இப்போது அறைகூவல் விடுத்தேன்? முதல் அமைச்சருக்குச் சவால் விடுத்தேன்? வரலாற்று ஏடுகளில், காலப் பெட்டகத்தில், இந்நாள் முதல்வர் கலைஞர் அப்பட்டமான பொய்களைத் திட்டமிட்டுப் பதிவு செய்வதும், தான் பாடுபடாத, பணி ஆற்றாத ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடி, பொய்யான புகழைச் சூடிக்கொள்ள முனைவதும், வருங்காலத் தலைமுறையினருக்குப் பொய்களே உண்மை ஆகும் விபரீதம் நேரும்: ஆதலால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்த உண்மைகளை நிலைநாட்டவே, நான் அறைகூவல் விட நேர்ந்தது.

செப்டெம்பர் 30 ஆம் நாள் சென்னையில் நாம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பேசியது இதுதான்: “சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அண்ணாவின் கனவுத் திட்டம். அது இந்த நாட்டுக்குத்தேவை என்று, அந்தத் திட்டத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களை அறிவிக்க வைத்த இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். நான் கேட்கிறேன்: ஏதோ இதற்காகவே அவதரித்ததைப்போல் ஊர் மக்களிடம் பேசுகிற முதல்வர் அவர்களே, நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது, இந்த சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்று நீங்கள் தில்லிக்குப் போடீநு எந்தப் பிரதமரிடமாவது பேசியது உண்டா? கோரிக்கை வைத்தது உண்டா? நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவில்தான் அரசு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தி.மு.கழகத்தின் 25 எம்.பி.க்களின் தயவில்தான் பிரதமர் இந்திரா அரசு நடந்தபோது, அண்ணாவின் கனவு என்று இப்போது சொல்கிறீர்களே, அதைப் பற்றி பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் சொன்னீர்களா? வற்புறுத்தினீர்களா?

1971 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடன் இருந்து தேடிக்கொடுத்த வெற்றியின்
காரணமாக, மீண்டும் முதல்வர் ஆனீர்களே, அப்போது பிரதமரைச் சந்தித்துக் கேட்டீர்களா? ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரிடத்தில் பேசினீர்களா? அதற்குப்பிறகு வி.பி.சிங் பிரதமரானபோது திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அமைச்சர் அவையில் பங்கு ஏற்றதே, அந்தக் காலகட்டத்தில், அவரைச் சந்தித்து இந்தத் திட்டம் வேண்டும் என்று கேட்டீர்களா? நரசிம்மராவ் அவர்களிடம் பேசினீர்களா? தேவே கௌடா பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அதிலும் பங்கு ஏற்றீர்களே, அவரிடத்தில் பேசினீர்களா? ஐ.கே. குஜ்ரால் பிரதமராக ஆனாரே, அவரிடத்தில் பேசினீர்களா?

நீங்கள் எந்தப் பிரதம மந்திரியிடமாவது தில்லியில் சேது சமுத்திரக் கால்வாடீநுத் திட்டம் தமிடிநநாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசினீர்களா? நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது கேட்டு இருக்கிறீர்களா?

மறுமலர்ச்சிப் பேரணியில் வாஜ்பாய் அறிவிக்கப் போகிறார் என்று உங்களுக்கு ரகசியத் தகவல் தெரிந்தபிறகு, மாலை 5 மணிக்கு விழுந்து அடித்து ஓடி, ராஜ் பவனுக்குச் சென்று ஒரு மனு கொடுத்தீர்கள். அதற்கு முன்பு, மூன்று மாத காலமாக நான் இதே வேலையாக இருக்கிறேன், எப்படியாவது அறிவிக்க வைக்க வேண்டும் என்று. அதற்கு முன்பு நீங்கள் இந்தத் திட்டத்திற்காக வாதாடி இருப்பதாக நிருபித்து விட்டால் அரசியலை விட்டு விலகிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

ஒரு பயங்கரமான பொய்யை, நேற்றைக்கு முன்தினம் புதுக்கோட்டையில் அவிடிநத்துவிட்டு இருக்கிறார் பாருங்கள், உலகத்தில் வேறு எவனும் இவரிடம் கிட்டே வர முடியாது பொடீநு சொல்வதில். கோயபல்சாவது, ஒன்றாவது? நேற்றைக்கு முன்தினம் சொல்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றது, மன்மோகன்சிங் பொறுப்பு ஏற்றார். இரண்டே இரண்டு கோரிக்கைகளைத்தான் வைத்தேன். ஒன்று தமிடிந உணர்வுப்பூர்வமானது. இன்னொன்று தமிழர் வாxவு ஆதாரப்பூர்வமான சேதுக் கால்வாடீநுத் திட்டம்’ என்கிறார்.

நான் கேட்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அரசு அமைந்த அந்தக் காலகட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதற்கு, டாக்டர் மன்மோகன் சிங்குக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டு இருந்த அந்த நேரத்தில், அவர்கள் அதற்காக வேலையில் ஈடுபட்டு இருந்த வேளையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் நிறைவேற்றப்பட தயாரிக்கப்பட்ட நேரத்தில், அவர்களிடத்தில் சேதுக்கால்வாய்த் திட்டத்தைப் பற்றி நீங்கள் பேசியது உண்டா? புதுக்கோட்டையில் போய்ப் பொய் சொல்கிறீர்களே? இது உண்மை என்று நிருபித்து விட்டால், மீண்டும் சொல்கிறேன், ‘பொதுவாழ்வில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன்.’’ இதைத்தான்,அக்டோபர் ஒன்றாம் நாள் கடலூரில் வந்தியத்தேவன் இல்ல மணவிழாவிலும், அக்டோபர் நான்காம் நாள், கருரில் செய்தியாளர்களிடமும் நான் வலியுறுத்தினேன்.

என் குற்றச்சாட்டை மறுப்பதற்கு அவரிடம் ஆதாரம் இல்லை. என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், அவருக்கே உரிய அகட விகட சாமர்த்தியத்தால், முற்றிலும் திசைதிருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.

என் கேள்வி இதுதான். அறிஞர் அண்ணா மறைந்தபின்பு, 1969 முதல் 1998 செப்டெம்பர் வரை பல காலங்களில், கலைஞர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலங்களில், எந்தப் பிரதமரிடமாவது தில்லியில் சேதுக்கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று, எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசி இருக்கிறாரா?

1969 இல், 1971 இல், 1989 இல், 1996 இல் நான்கு முறை முதல்வரானபோது, இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை. தமிழர்களின் நுhற்றாண்டு காலக் கோரிக்கை யான அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டத்தை, நிறைவேற்ற வேண்டும் என்று, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. ‘அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிருபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’ என அறிவித்தேன்.

தமிழக முதல்வர் ஏழாம் தேதி அன்று விடுத்து உள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, ‘சேதுத் திட்டத்துக்காகக் கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாகக் கோரிக்கை வைத்ததை நிருபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்’ என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார். 2002 மே 8 ஆம் நாள், அவர் பிரதமர் வாஜ்பாடீநுக்கு எழுதிய கடிதத்தையும், 2002 அக்டோபர் 15 இல் எழுதிய கடிதத்தையும், சாட்சிக்கு
அழைத்து உள்ளார்.

இதனால், ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான், 1998 இல், பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002 இல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார். ஆனால், அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில்கூட, 98 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 15 இல், மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய அண்ணா-பெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில், பிரதமர் வாஜ்பாய், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும்’ என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.

இவரது அரசியல் வக்கிரப்போக்கை நான் குறிப்பிட்டதால், அவருக்கே உரித்தான புரட்டு வார்த்தைகளில், தற்போது அக்டோபர் 8 ஆம் தேதி அவர் விடுத்த அறிக்கையில், ‘பிரதமர் வாஜ்பாய், வைகோவின் நிகழ்ச்சியில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை அறிவித்ததாகச் சொல்லி உள்ளேனே? அதைக்கூட உணராமல், நுனிப்புல் மேய்ந்து உள்ளதாகச் சாடி உள்ளார்.

நான் கேட்டதெல்லாம், பிரதமர் வாஜ்பாய்க்கு 2002 இல் இவர் எழுதிய கடிதத்தில், பிரதமர் 98 ஆம் ஆண்டு அறிவித்த வாக்குறுதியைக் குறிப்பிட ஏன் மனம் இல்லை? என்பதுதான்.

ஆனால், சங்கொலியில், 2005 ஜூலை 8 ஆம் நாள், கழகக் கண்மணிகளுக்கு நான் எழுதிய கடிதத்தில், 1958 இல், தமிழகச் சட்டமன்றத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்துப் பேசியதை வரிவிடாமல் பதிவு செய்து இருக்கிறேன்.

1960 அக்டோபர் 9 இல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்துக்காக உரை ஆற்றிய அறிஞர் அண்ணா அவர்கள், 67 இல் முதல்வர் ஆனவுடன், இதற்காக மத்திய அரசை வலியுறுத்த, தமிழகம் முழுவதும் ‘எழுச்சி நாள்’ கொண்டாடினார். அண்ணாவின் கனவை நனவாக்க, எளியவனான நான், எடுத்த முயற்சிகள் எண்ணில் அடங்கா. எண்பதுகளில் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். கேள்விகள் தொடுத்து இருக்கிறேன்.

1998 ஜூலை 6 இல், நாடாளுமன்ற மக்கள் அவையில், இத்திட்டத்துக்காக உரை ஆற்றினேன். சேதுக் கால்வாடீநுத் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் என்று, பிரதமர் வாஜ்பாடீநு அவர்களை அறிவிக்கச் செடீநுவதற்காகவே, 1998 செப்டெம்பர் 15 இல், சென்னையில் மறுமலர்சசிப் பேரணி நடத்தினோம். நிகடிநச்சிக்குப் பிரதமரிடம் ஒப்புதல் பெற்ற நாள் முதல், நான்கு மாத காலத்தில் பலமுறை வாஜ்பாடீநு அவர்களைச் சந்தித்து, திட்டத்துக்காக வற்புறுத்தினேன். தொலைநோக்கும், உயர் பண்பும் கொண்ட வாஜ்பாய் அவர்கள், அறிவிப்பதாக உறுதி அளித்தார். அப்படியே அறிவிக்கவும் செய்தார்.

செப்டெம்பர் 15 இல் பிரதமர் இதை அறிவிக்கப் போவதாக நான் பலரிடமும் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், அதனை அறிந்துகொண்ட அந்நாள் முதல்வர் கலைஞர், அன்று மாலை, ஐந்து மணிக்கெல்லாம் ராஜ் பவனுக்குச் சென்று, இத்திட்டத்துக்காக மனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்து வைத்தார்.

தி.மு.க. மாநாடுகளிலும், பொதுக்குழு, செயற்குழுவிலும் இத்திட்டத்துக்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரிடத்தில் வலியுறுத்தும் கடமையில், முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி தவறினார்.

தொடக்கத்தில், ‘நாம் தமிழர் இயக்கத்’ தலைவர் சி.பா. ஆதித்தனார், காங்கிரசின் கே.டி. கோசல்ராம் குரல் கொடுத்த இத்திட்டத்தை நிறைவேற்ற, அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் வற்புறுத்தலால், அந்நாள் பிரதமர் பண்டித நேருவின் அமைச்சரவை, 1963 இல், இத்திட்டத்துக்கு ஒப்புதல் தந்து, பின்னர் இலங்கையின் எதிர்ப்பால் கிடப்பில் போட்டது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, 1986 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்கள் அவையில் கோரிக்கை விடுத்து உள்ளார். நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 இல் அமைந்தபோது, அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை, டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் தயாரித்தபோது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வற்புறுத்தி, எழுத்து மூலமாகக் கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செடீநுதேன்.

அசோகா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடந்தபோது, பிரணாப் முகர்ஜி அவர்கள் என்னிடம், ‘உங்கள் சேதுக்கால்வாய்த் திட்டம், அரசின் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது’ என்றார். இதனை நினைவில் வைத்துத்தான், 2005 செப்டெம்பர் 3 ஆம் நாள், எனது நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், ‘வைகோவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம்’ எனக் குறிப்பிட்டார்.

‘மத்திய அமைச்சரவையில் சேரப் போவது இல்லை’ என்று சென்னையில் அறிவித்த கலைஞர் கருணாநிதி, தில்லியில் ஒரு வாரம் முகாமிட்டதே, அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காகத்தான்.

ஆனால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இவர் சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை, இதுகுறித்து டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் பேசவும் இல்லை. ஆனால், மத்திய அரசு நிறைவேற்றப் போகிறது என்று கலைஞரிடம் நான் சொல்லவும் செய்தேன். இதற்குப் பின்னரே, கப்பல் போக்குவரத்துத் துறையைத் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கினார்.

ஆனால், அண்மையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நா கூசாமல், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாடீநுத் திட்டத்தை வற்புறுத்தியதாக, ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை, அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி, அவ்வாறு மன்மோகன்சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிருபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதல் அமைச்சர் கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில், இதற்குப் பதிலே இல்லை.

ஒருவர் உழைக்க, வேறு ஒருவர் அறுவடை செய்வது சுரண்டல் என்பதால், சேதுக் கால்வாய்த் திட்டத்திலும், முதல் அமைச்சர் கலைஞர் செய்த அரசியல் சுரண்டலை, பித்தலாட்டத்தை, வெளிப்படுத்தி, நடந்த உண்மை என்ன என்பதை வரலாற்றில் பதிவு செய்யவே நான் சவால் விடுத்தேன்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல, வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில், ஈடு இணையற்ற வல்லவர் கலைஞர் ஆவார். அதனால்தான், 2002 மே மாதம் 8 ஆம் நாள், பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக்குறித்து வலியுறுத்தி உள்ளேன்’ என்று, அப்பட்டமான ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.

--------------------------------
சங்கொலி (19.10.2007)