Tuesday, August 28, 2007

மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்

திருநெல்வேலி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது.
(http://thatstamil.oneindia.in/news/2007/08/17/vaiko.html). அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


"உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல" என நெல்லையில் வைகோ பேசினார். தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர. இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.
உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம் அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.

உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,தூரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான்.

எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது. இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.

செய்தி:
http://dinamalar.com/2007aug27/political_tn1.asp

Tuesday, August 21, 2007

'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்!

வைகோவின் ‘தேன் மலர்கள்’ வெளியீடு சென்னையில் எழுச்சிமிகு விழா!

வைகோ ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ‘தேன் மலர்கள்’ என்ற நூல் வடிவில் இராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான விழா 14.8.2007 செவ்வாய் அன்று சென்னை ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகர் அரங்கில் நடைபெற்றது. நாஞ்சில் சம்பத் விழாவுக்கு தலைமை ஏற்க, கலைப்புலி எஸ்.தாணு வரவேற்புரை ஆற்றினார். நூலை அருட்செல்வர் ந.மகாலிங்கம் வெளியிட, ‘கல்கி’ ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அப்துல்காதர், சுதா சேஷ்ய்யன், திரைப்படக் கலைஞர் பிரகாஷ்ராஜ், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளச்சேரி மணிமாறன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அபிதாசபாபதி அழகுத் தமிழில் தொகுத்து வழங்கினார்.

'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்:

‘தேன்மலர்கள்’ என்னும் இலக்கியச் செறிவுமிக்க நூலைப்படைத்துள்ள தலைவர் வைகோ அவர்களை தமிழ்த்தாய் வாடிநத்துகிறாள். தமிழ் ஈழம் வாழும்காலம் வரை வைகோ வாழவேண்டும். வைகோ ஆயுள் வளரட்டும். தமிழ் உலகு மீளட்டும்.
- பேராசிரியர் அப்துல் காதர்


தமிழ் காலத்தால் மூத்தது. உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. அத்தகைய தமிழுக்கு உரமூட்டக்கூடியவகையில் இலக்கியச் செறிவு மிகுந்த ‘தேன்மலர்கள்’ என்னும் இந்நூல் மணம் வீசுகிறது.
- அருட்செல்வர் ந. மகாலிங்கம்


கம்பனுக்கு ஒரு டி.கே.சி. கிடைத்ததைப்போல, அமரர் கல்கிக்கு வைகோ கிடைத்திருக்கிறார். ‘தேன்மலர்கள்’ படைத்த வைகோ நடமாடும் இலக்கியச் சுரங்கமாகத் திகழ்கிறார்.
- கல்கி ராஜேந்திரன்


இராகவ அய்யங்கார் அவர்களது ‘தமிழ் வரலாறு’ என்கிற நூல் கிடைக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த பலருக்கு உண்டு. டாக்டர் மு.வ.அவர்களது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்கின்ற நூல்கூட பல இடங்களில் கிடைப்பது இல்லை. ஆனால், வைகோ அவர்களது ‘தேன்மலர்கள்’ என்கிற நூல் அந்த ஏக்கங்களைத் தீர்த்துவிட்டது.
- டாக்டர் சுதா சேஷய்யன்


நல்ல குழந்தையைப் பெற்றவர்களை ஒருதலைமுறை பேசும்; கலைநயத்தோடு கட்டப்படும் ஒரு வீடு இரண்டு தலைமுறைகளுக்குப் பேசப்படும். நல்ல புத்தகத்தைப் படைத்தவரை மூன்று தலைமுறை பேசும். இந்தத்´ ‘தேன்மலர்கள்’ என்கின்ற புத்தகத்தைப் படைத்த வைகோ அய்யா அவர்களை எல்லாத் தலைமுறையும் பேசும்.
- நடிகர் பிரகாஷ்ராஜ்

Monday, August 20, 2007

கல்கி புகழ் விழா! வைகோ

தேனில் தோய்த்த பலாவாக, ஆகஸ்ட் 11, தலைநகர் சென்னையில், அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஏற்பாடு செய்த, கல்கி புகழ் விழா அமைந்தது. தியாகராய நகரில் விஜய மகாலில், மாலை சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது. கல்கி அவர்களின் புதல்வர் கி.இராஜேந்திரன் அவர்களும், கல்கி குடும்பத்தினரும் வந்து இருந்தனர். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாகக் கலந்துகொண்டனர். எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு, கல்கி விருது வழங்கினேன்.

எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள், கல்கியின் ‘தியாகபூமி’ நாவல் குறித்தும், பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள் கல்கியின் ‘அலை ஓசை’ நாவல் குறித்தும் உரையாற்றியபின்பு, கல்கியின் 'சிவகாமியின் சபதம்’ எனும்தலைப்பில் என் உரை அமைந்தது.

விழாத் தலைவர் விக்கிரமன் அவர்களின் பெருமுயற்சியில் நடந்தது இந்த விழா. இதற்கு உறுதுணையாக உழைத்தவர், ஆருயிர் இளவல் தஞ்சை உதயகுமார் ஆவார். தமிழ் சரித்திரநாவல்களைத் தீட்டியவர்களின் வரிசையில், முதல் இடம் பெறும். ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நாவலை எழுதிய வடலூர் வள்ளலார் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியோர் பெயர்கள் அனைத்தையும், இங்கிலாந்தின் வால்டர் ஸ்காட் உள்ளிட்ட மேலைநாட்டுச் சரித்திர நாவல் ஆசிரியர்கள் குறித்தும் முகப்பு உரையாகச் சொல்லி, விடுதலைப் போரில் மூன்று முறை சிறை சென்ற கல்கி அவர்கள், கால்களில் விலங்குக் காப்பும், சங்கிலியும் கட்டப்பட்டு, 14 நாள்கள் சிறையில் அடைபட்ட கொடுமையையும் சொன்னேன்.

கதர் இயக்கத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் மிக்கஈடுபாடு கொண்டு இருந்த கல்கி அவர்கள், 1947 இல் அன்றைய காலகட்டத்தில் அரசியலில், சமயங்களில் அவரது கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டு இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் படைப்பைக் குறித்து எவ்வளவு உயர்ந்த மதிப்புக் கொண்டு இருந்தார் என்பது, கல்கிக்குப் புகழ் மகுடம் சூட்டுவது ஆகும். இதோ, அண்ணா அவர்களைப் பற்றிக் கல்கி 1947 டிசம்பரில் கல்கி இதழில் கீழ்கண்டவாறு எழுதினார்.

‘தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட்ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒருகுரல் அழுவது வழக்கம். ‘நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு பெர்னார்ட்ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கேபோவது? திருடப் போக வேண்டியதுதான்’ என்றுசொல்வார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம். தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ஓர் இரவு எனும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. (திருச்சி இரத்தினவேல் தேவர் மண்டபத்தில், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி நாடகக்குழுவினர், அறிஞர் அண்ணாவின் ஓர் இரவுநாடகத்தை நடத்தினர். 15.11.1947 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குக் கல்கி தலைமைஏற்றார்.) பார்த்ததன் பயனாக, இதோ ஒரு பெர்னார்ட்ஷா தமிடிநநாட்டில் இருக்கிறார். கிப்சனும் இருக்கிறார். இன்னும் கால்ஸ் வொர்த்தியும்கூட இருக்கிறார் என்று தோன்றியது. நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிகவும் அரியது. அந்த ஆற்றல், திரு. அண்ணாத்துரையிடம் பூரணமாக அமைந்து இருக்கிறது என்பதை ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்.’’ என்று எழுதினார்.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ எனக்கூறிய அண்ணா அவர்கள், கல்கி அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'சரித்திர நவீனங்களின்பால், சமையல்கட்டுகளும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்’ என்றார்.

1932 ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை நேரத்தில் மாமல்லபுரத்துக் கடற்கரையில், அமர்ந்து இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி. அவர்கள், ‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்ட குறை வந்து தொட்டாச்சு’ எனக் கூறிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் கவிதை வரிகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 1300 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மாமல்லபுரத்தில், அற்புதமான சிலைகள் வடிக்கப்பட்ட காலமும், மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் பற்றிய எண்ணமும், அதனால் என் மனதில் எழுந்தகனவுகளும், 12 ஆண்டுகள் கழித்து ‘சிவகாமியின் சபத’மாக உருப்பெற்றது எனத் தெரிவித்த கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம், காதலும் வீரமும் தமிழர் மானமும், கலையும், சிகரத்தின் உச்சியில் ஒளிதந்த காட்சிகளின் உயிர் ஓவியம்தான் என்பதை இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சிக்கு வந்தோரில் பெரும்பாலோர், நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள். கடைசிவரை ஒருவர்கூட அசையவில்லை. ஈடுபாட்டுடன் கேட்டனர் என்பது பெருமிதம் அளிக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ உரையையும், ‘சிவகாமியின்சபதம்’ உரையையும் ஒரு நூலாக ஆக்கிட எண்ணிஉள்ளேன்.

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள்வளரட்டும்!

பாசமுடன்

வைகோ

இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி ஈழம் மலர்ந்திருக்கும்: வைகோ

செஞ்சி, ஆக.21: இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வைகோ பேசியது:

18 ஆண்டுகளுக்கு முன் வவுனியா காட்டில் கரும்புலிகளின் பயிற்சிக் கூடத்தில் மத்தியில் அமர்ந்திருந்தேன். இப்போது இங்கே கருப்புச் சட்டை அணிந்திருக்கும் பகுத்தறிவு இளைஞர்களின் மத்தியிலே அமர்ந்திருப்பது பழைய நினைவை எனக்கு ஏற்படுத்துகிறது.

30 ஆண்டுகளாக திமுகவை காத்து வளர்த்து வந்தேன். என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டது. இச்செய்தி அறிந்ததும் ஆயிரம் பாம்பு கடித்தது போலவும், ஒரு லட்சம் தேள் கொட்டியது போலவும் துடித்தேன்.

ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயுதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு முயல்கிறது.

தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன் சிங் அரசு. தமிழ் ஈழம் மலர்வதை உலகில் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தமிழர்களுக்கு தனி நாடு தர முடியுமா? என்று ஆலோசனை செய்து வருகிறேன் என்று இந்திரா பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது நமக்கு துரதிர்ஷ்டமாகப் போய் விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்நதால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்றார் வைகோ.

விழாவுக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மா.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர் மு.சுப்பிரமணி வரவேற்றார். தலைமைத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார்.

மாவட்டப் பொருளர் மா.சுப்பிரமணி, மாநிலக் கொள்கை விளக்கச் செயலர் மு.குமார், பேராசிரியர் அ.பெரியார், பாடகர் நா.காத்தவராயன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.ஏழுமலை உள்ளிட்ட மதிமுகவினர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டச் செயலர் டாக்டர்.இரா.மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.
---------------------------------------------------------------
நன்றி: தினமணி நாளிதழ் (21.08.2007)

MDMK to boycott local body polls

CHENNAI: The Marumalarchi Dravida Munnetra Kazhagam will boycott byelections to vacancies in various local bodies in the State, scheduled for September 5.

MDMK general secretary Vaiko, in a statement here on Saturday, said in the recently-concluded local body elections, the State Election Commission had failed to control violence in the State, especially in Chennai Corporation.

As the party felt that there would not be free and fair byelections as long as the present State Election Commissioner remained in the post, it decided to boycott the elections.

Sunday, August 19, 2007

MDMK says survival of UPA Govt a question mark


Tindivanam, Tamil Nadu, Aug 19 : Marumalarchi DMK (MDMK) General Secretary Vaiko today said the survival of the UPA Government at the Centre was a question mark in the context of the differences with the Left on the Indo-US nuclear deal.

Speaking to the press here, Mr Vaiko said ''the government had mortgaged India's sovereignty and self-respect on the 123 agreement with the US.

''Now, the Left, which supports the UPA Government at the Centre from outside, says its (UPA Government's) survial is its hands. We can now only wait and watch.'' Referring to charges being hurled frequently at the DMK Government in Tamil Nadu by its (DMK's) allies, particulary the PMK, Mr Vaiko said never in history had such things happened.

PMK Founder-Leader S Ramadoss' charges on exorbitant fee charged by higher educational institutions and illegal sandmining, though justified, remain unanswered by the government.

''Dr Ramadoss is right in making the charges for which the government has no answer,'' Mr Vaiko said.

இலக்கியங்களில் மனித உரிமைகள்: வைகோ

நண்பர்களே! ‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரியில் ஆற்றிய உரை பற்றி சங்கொலி 24.08.2007 இதழில் வைகோ எழுதிய கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வைகோவின் கடிதத்திலிருந்து.....
இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் நான் உரை ஆற்ற வேண்டும் என பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் என்.ராஜகுமார் அழைப்பு விடுத்து இருந்தார். ‘நடை பயிலும் முன்பே கொடை பயிலும் கொங்கு நாடு’ என்ற பெருமைக்கு உரிய அப்பகுதியின் சீர்மிகு நல்லமுத்துக் கவுண்டர்அவர்களும், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் தந்தையார் திரு.நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் அருந்துணையுடன், 1957 இல் தொடங்கிய இக்கல்லூரியின் பொன்விழாவின் நுழைவாயில்நிகழ்வாகக் கல்லூரித்தமிழ்த் துறையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் நான் பங்கு ஏற்றதாகும்.

ஆகஸ்ட் 7 ஆம் நாள் அன்று, காலையில் கோவை சென்ற நான், கோவை மருத்துவ மையம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வருகின்ற கழகப் பொருளாளர் ஆருயிர் அண்ணன் கண்ணப்பன் அவர்களைச் சந்தித்து அளவளாவிவிட்டு, பொள்ளாச்சி சென்றேன்

இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் பயிலும் இக்கல்லூரியில், அன்பு காட்டி ஆர்வத்துடன் கல்லூரிச் செயலர் எஸ்.கே.கல்யாணசுந்தரம் அவர்களும், முதல்வர் என்.ராஜகுமார் அவர்களும், பேராசிரியர்களும் என்னை வரவேற்க, நிகழ்ச்சி சரியாக பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியது. சிந்தனைக்குக் கிளர்ச்சி ஊட்டும் தலைப்பு. உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவதற்கு இடமும், அடிப்படை உரிமைகளாக உத்தரவாதம் ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படைக் கோட்பாடு அமைத்தவன் தமிழன். அதனால்தான்,
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்
என மிக அழுத்தமாகச் சொன்ன திருவள்ளுவரைச் சுட்டிக்காட்டி, காணார், கேளார், கால் முடமானோர், பேணா மாக்கள், பேசார், பிணித்தோர், பசி நோய் உற்றோர் அனைவரும் வருக’ என, துன்புறும் மக்களுக்கு அருமருந்தாக அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையை நினைவூட்டி, மணிமுடிவேந்தனை நோக்கி, ‘தேரா மன்னா’ என எரிமலையாய்ச் சீறி நீதி கேட்ட தென்தமிழ்ப் பாவை கண்ணகியின் புகழ் விளித்து, ‘நமனையும் அஞ்சேன்’ என்ற நாவுக்கரசரின் உரிமை முழக்கத்தை, எடுத்து இயம்பினேன்.

மனித உரிமைகளை நிலைநாட்ட எழுந்தவைதான், வரலாற்றின் மைல் கற்களான புரட்சிகள். ஒவ்வொரு புரட்சிக்கும், அந்த எரிமலையின் நெருப்புக் கர்ப்பத்தில் கனன்றவை இலக்கியங்கள்தாம்.

பிரெஞ்சுப் புரட்சி 1789:
கிரேக்கத்தில் சிந்தனைப் புரட்சியைத் தொடுத்தசாக்ரடீசின் வாழ்க்கையை அரியதோர் நாடகம் ஆக்கினான் வால்டேர்.

‘மனிதன் சுதந்திரமாகவே பிறக்கிறான். ஆனால், எங்கும் அவன் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான்’ என்ற ரூசோவும், வால்டேரும் தீட்டிய இலக்கியங்களான கதைகளில், நாடகங்களில் மனித உரிமைகளை நிலைநாட்ட ஊட்டப்பட்ட உணர்ச்சியைப் பட்டியல் இட்டேன். அந்தப் பிரெஞ்சுப் புரட்சியை ஓர் சரித்திர நாவல் இலக்கியமாகத் தந்தவன், இங்கிலாந்தின் கார்லைல்.

முதல் மனித உரிமைப் பிரகடனம் 1812:

அடக்குமுறைக்கு ஆளாகி, இரத்தம் சிந்தி உயிர்ப்பலியான, தொழிலாளர்களுக்காக, ஆவேசம்கொண்டு கவிஞன் ஷெல்லி தீட்டிய நெருப்புக்கவிதைதான் ‘அராஜகத்தின் முகமூடி’ (Mask of anarchy). நீங்கள் விதைக்கிறீர்கள்; எவனோ அறுக்கிறான், நீங்கள் செல்வத்தைத் தேடுகிறீர்கள்; எவனோ குவிக்கிறான், நீங்கள் நெய்கிறீர்கள்; எவனோ அணிகிறான். நீங்கள் வார்ப்பிக்கிறீர்கள்; அந்த ஆயுதங்களை எவனோ ஏந்துகிறான்.

இனிமேல், நீங்கள் விதையுங்கள்; எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள். செல்வத்தைத் தேடுங்கள்; எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்கவிடாதீர்கள், ஆடைகளை நெய்யுங்கள்; எந்தச் சோம்பேறியையும் உடுத்த விடாதீர்கள்.ஆயுதங்களை வார்ப்பியுங்கள்; நீங்களே ஏந்துவதற்காக! கவிஞன் ஷெல்லி, 1812 இல் எழுதியதுதான் ‘மனித உரிமைப் பிரகடனம்’ நீட்டியவாள் முனைக்கு அஞ்சி, மன்னன் ஜான் கையெழுத்து இட்ட மேக்னா கார்ட்டா (Magna Carta) மனித உரிமைச் சாசனம் வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உதித்ததுதான் ஷெல்லியின் பிரகடனம். அப்பிரகடனத்தை எழுதியதாள்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நீரோடைகளிலும், நதிகளிலும் வீசப்பட்டன. பலூன்களில் கட்டி அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் வெளியான பிரகடனம்தான், 1948 டிசம்பர் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம்.

ஷெல்லியின் பிரகடனத்தின் உட்பிரிவுகள் 31. ஐ.நா. பிரகடனத்தின் உட்பிரிவுகள் 30. இக்கவிஞனின்குரல் பட்டுத் தெறித்த இன்னொரு பிரகடனம்தான், மார்க்சும், எங்கெல்சும், 1848 இல் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’. ‘உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழக்கப் போவது எதுவும் இல்லை, விலங்குகளைத் தவிர’ என்று எழுந்தது அந்த முழக்கம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அமெரிக்க நாட்டில், அடிமை காரிருளில் தவித்த கருப்பு இன நீக்ரோக்கள், மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்ட காலம் அது. சகிக்கவே முடியாத இக்கொடுமையைக் கண்டு மனம் குமுறிய பெண்மணிதான் உலகப் பிரசித்திபெற்ற,
Uncle Tom’s Cabin எனும் அற்புதமான கண்ணீர்க்காவியம் தீட்டிய ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ இந்த நூலை எழுதிய ஆண்டு 1852. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1862 இல், அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், இந்த மனித உரிமை இலக்கியப்படைப்பாளியைப் பார்த்து, ‘நீங்கள்தானா அந்தப்பெண்மணி? இப்பொழுது நடக்கின்ற அமெரிக்க உள்நாட்டுப் போரே உங்களால்தானே’ என்றாராம். ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு செய்தி என்னதெரியுமா? அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இந்தப் புத்தகம், இங்கிலாந்துநாட்டில் அதிகப் பிரதிகள் விற்பனையான இந்தப் புத்தகம், இதைப்படிக்க நேர்ந்த வாசகர்களின் கண்களை அருவியாக ஆக்கிய இந்தப் புத்தகம், ‘நீக்ரோக்களின் அடிமை விலங்கை உடைப்பேன்’ என ஆபிரகாம் லிங்கன் சபதம் செய்யக் காரணமான இந்தப் புத்தகம், வழக்கமான எழுத்தாளர்கள் எழுதும் முறையில், முதல் அத்தியாயத்தில் தொடங்கி எழுதப்படவில்லை. இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைத்தான் ஹேரியட் அம்மையார் முதன் முதலில் எழுதினார். எழுதிவிட்டுத் தன்பிள்ளைகளிடம் வாசித்துக் காண்பித்தார். அதைக் கேட்டுப் பிள்ளைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.


ருஷ்யப் புரட்சி:
மாமேதை லெனினை மிகவும் கவர்ந்தது, ‘26 பேரும்அந்த இள நங்கையும்’ என்ற மாக்சிம் கார்க்கியின் நூல் ஆகும் என்று லெனினின் துணைவியார் குருப்ஸ்காயா குறிப்பிட்டு உள்ளார். ஈர நிலவறையில் நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய 26தொழிலாளர்களின் அவலத்தில் பங்கு ஏற்ற 16 வயது நங்கை தானியா கதைதான் அது. ருஷ்யப் புரட்சிக்குக் கருவாக அமைந்த இலக்கியங்களை விவரித்தேன்.

சீனப்புரட்சி:

‘நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முகிழ்க்கட்டும்’ என்ற கவிஞன் மாவோ, நடத்திய சீனப் புரட்சிக்குத் துணை நின்ற படைப்புகளைச் சுட்டிக்காட்டிய நான், நிகழ்கால அதிசயமாய் இன்னும் தலை தாழாமல் கம்பீரக் குரல் கொடுக்கும் ஃபிடல்காஸ்ட்ரோவின் மனம் கவர்ந்த இலக்கியங்களைச் சொன்னேன். அமெரிக்க ஏகாதிபத்தியக் கழுகை விரட்டிய வியட்நாம் விடுதலை வேந்தன், ஹோ-சிமின் காலத்துப் படைப்புகளைச் சொன்ன நான், மனித உரிமைகளுக்காக 27 ஆண்டுகள் ரோபென் தீவுச் சிறையில் வாடிய நெல்சன் மாண்டேலாவுக்கு உணர்ச்சி ஊட்டிய நூல்தான் ரஸ்கின் எழுதிய ‘Unto this last’ (கடையனின் கடைத்தேற்றம்) என்பதைக் கூறியதற்குக் காரணமே, இதே புத்தகம்தான் என்வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்று, 1942 இல் அண்ணல் காந்தியார் கூறியது, சிந்தனைக்கு விருந்து அன்றோ?
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட இந்தியாவில், வடபுலத்தில் எழுந்த இலக்கியங்களில், நாவல் ஆசிரியர் பிரேம்சந்தின் ‘ரங்கபூமி’யைக் குறிப்பிட்டேன். ஏழை, எளியோரின், சிறிது அளவுநிலங்களையும், பண முதலைகள் கபளீகரம் செய்வதும், நிராதரவாக ஆக்கப்பட்ட அந்த ஏழைகள் செத்து மடிவதும் இன்றுவரை நீடிக்கிறதே, அதனைத்தான் பிரேம்சந்த் படம்பிடித்து உள்ளார்.
எங்கே அச்சம் என்பது இல்லையோ, எங்கே அறிவுதலை நிமிர்ந்து நிற்கிறதோ, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில் என் தாயகம் விழித்து எழட்டும் எனும் உயிர்க் கவிதைகளைத் தந்த கவியரசர் தாகூரின் கவிதைகள், மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் நாவல்கள், ‘பாகிஸ்தான்’ எனும் பிரிவினைக் குரல்எழுவதற்கு முன்னர், கவிஞன் அல்லாமா இக்பால் தீட்டிய கவிதைகள் என வரிசைப்படுத்திய நான், தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமைக் கொடுமைபோல், அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபோல், நம் நாட்டில், மனு தர்மத்தால், வருணாசிரமத்தால், வைதீகக் கொடுமையால் உருவாக்கப்பட்ட அக்கிரமமான அநீதியை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்ட திராவிட இயக்கத்தில், மனித உரிமைகளுக்காக அறிஞர் அண்ணா தீட்டிய எழுத்து ஓவியங்களைச் சொன்னேன்.
வாள் பிடித்துப் பகைக் கூட்டங்களை வென்ற மாவீரன் சிவாஜி, காகபட்டரின் தாள்பிடிக்கும் இழிநிலையா? என்ற கேள்வி எழுப்பிய அவரது ‘சந்திரமோகன்’ நாடகம் உள்ளிட்ட புரட்சி இலக்கியங்களைச் சொன்னேன். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என்று குமுறிய பாரதியை, ‘கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல்அறவே’ எனும் போர்க்குரல் எழுப்பிய பாவேந்தர் தந்தகவிதை இலக்கியங்களை என் உரையில் வைத்தேன்.
என் உரையின் உச்சகட்டமாக அமைந்ததுதான், தமிழ்ஈழத்தில் மனித உரிமைகளுக்காகத் தணலாக எழுந்த கவிதைகள் ஆகும். தமிழ் ஈழத்தில் உரிமை உள்ள மனிதர்களாக வாழ்வதற்காக மரண பூமியில் போராடும் தமிழ் மக்களின் உரிமைப்போரை விவரித்தது ஆகும். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்ததையும், கண்கலங்கியதையும் கண்டபோது, தமிழ் இனம்காக்கும் உணர்வு, நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இந்த நெருப்பை எந்தச் சக்தியாலும் அணைக்க முடியாது என்ற உறுதி எற்பட்டது.
நான் பேசி முடித்தவுடன், அந்த அரங்கத்தில் இருந்த மாணவ மாணவியரும் பேராசியர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கையொலி எழுப்பிப் பாராட்டியபோது, எனக்கே கூச்சம் ஏற்பட்டது.

Saturday, August 18, 2007

இலக்கியத்தில் இளைப்பாறி...

‘‘தாவி வரும் கடல் அலைகளை எண்ணிவிடலாம்; நட்சத்திரங்களை எண்ணிவிடலாம்; கடற்கரை மணலைக்கூட எண்ணிவிடலாம்; கடலுக்குள் துள்ளிக் குதிக்கும் மீன்களின் எண்ணிக்கையைக்கூடச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த திருத்தொண்டர் புராணத்தின் பெருமையை சேக்கிழார் தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது!’’

அக்னி வெயிலாகத் தகிக்கும் அரசியலுக்கு நடுவே, கலைஞருக்கு மட்டுமல்ல... வைகோவுக்கும் இலக்கியம்தான் இளைப்பாறல்! சமீபத்தில் சிதம்பரத்தில் வைகோ ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு ஆச்சர்யப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. திருத்தொண்டர் புராணத்தைப் பற்றிய அவரது பேரருவிப் பேச்சில் இருந்து ஒரு சாம்பிள் இங்கே...

‘‘தொல்காப்பியத்தில், திருக்குறளில், கம்பன் காவியத்தில், வளையாபதியில், திருமுருகாற்றுப்படையில் எல்லாம் உலகம் என்ற சொல்லை முன்வைத்து தான் தொடங்கி இருக்கிறார்கள் தமிழர்கள். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்...’ என்றுதான் தொடங்குகிறார் சேக்கிழாரும்! முடிக்கும் போதும், ‘உலகெலாம்’ என்று முடிக்கிறார். ‘உலகெலாம்...’ எனத் தொடங்கினாலும், தன் தாய் மண்ணின் பெருமையைச் சொல்ல மறக்கவில்லை சேக்கிழார்.

இமயத்தின் உச்சியிலேயே புலிக் கொடியைப் பதித்த சோழ நாட்டின் பெருமையை ‘நீர் நாடு’ என்கிறார். அதாவது, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நாடு என்று அர்த்தம். அடுத்து, திருவாரூர் நகரத்தின் பெருமையையும், தமிழர்கள் போற்றி வளர்த்த பண்பாட்டு நெறியையும், பசுவுக் காக தன் ஒரே பிள்ளையைப் பலிகொடுத்த மனுநீதியின் வாழ்க்கையையும் சொல்கிறார். அனைவரும் சட்டத்துக்கு முன் சமம் என்று ஜனநாயகத்தை உலகத்துக்கு அளித்த சமூக நீதியைச் சொல்கிறார்.

பெரிய புராணத்தின் மையமாக விளங்குபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தமிழுக்குத் தொண்டு செய்ய வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அகவியலை சேக்கிழார் அவ்வளவாக எழுதவில்லை. ஆனால், ஆலயத்தில் நுழைகிற வேளையில் பரவையர் பார்வையில்பட்ட பிறகு, சுந்தரமூர்த்தியின் இதயத்தில் எழுகின்ற உணர்வுகளை சேக்கிழார் சித்திரிக்கும் விதம் கவிதை நயம்’’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றை சிம்மக் குரலில் சொல்லிச் சிலிர்க்கிறார் வைகோ.

‘‘சேக்கிழார் பற்றிப் பேசுகிறேனே, ஆன் மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுவிட் டேனோ என எண்ண வேண்டாம். தமிழை உயிராக நேசிக்கிறோம்; தமிழைப் பெருமைப்படுத்தியவர்களை நேசிக்கிறோம். அதனால், சேக்கிழாரையும் நேசிக்கிறேன்’’ என்று சொல்லிக் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார் வைகோ.

அரசியலோ, இலக்கியமோ... கறுப்புத் துண்டைத் தோளில் முறுக்கிக்கொண்டு நெருப்பாகப் பொறியும் வைகோவுக்கு பேச் சிலும் மூச்சிலும் துளியும் குறையவில்லை நம்பிக்கை!

--------------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன் (15.08.2007 இதழ்)

Thursday, August 16, 2007

26ம் தேதி தென்காசியில் வைகோ உண்ணாவிரதம்

26ம் தேதி தென்காசியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்


6 பேர் படுகொலை செய்யப்பட்ட தென்காசியில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், வருகிற 26ம் தேதி தனது தலைமையில் மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென்காசியில் நடந்துள்ள இந்த படு பாதகச் செயலால் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் திகிலும், பீதியும் நிலவுகிறது. அவர்கள் மனதில் பழிவாங்கும் உணர்ச்சி உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பகையை மறந்து அனைத்துத் தரப்பினரும் இணக்கத்துடன் இருக்க முன்வர வேண்டும். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனது தலைமையில் மதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் வைகோ.

Wednesday, August 15, 2007

இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழவைக்கும் - வைகோ பேச்சு

சென்னை, ஆக.16-

இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழ வைக்கும் என்று ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசினார்.

புத்தக வெளியீட்டு விழா
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளை அவரிடம் செயலராக இருந்த அருணகிரி, `தேன் மலர்கள்' என்ற புத்தகமாக தொகுத்துள்ளார். ராஜ ராஜன் பதிப்பகத்தின் சார்பில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க கட்டிட அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை தாங்கினார். தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் புத்தகத்தை வெளியிட, `கல்கி' ராஜேந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ ஏற்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காப்பாற்ற வேண்டும்
உலகத்தில் மிகவும் பழமையான பாபிலோனிய நாகரிகத்தை விட பழமையான நாகரிகம் பூம்புகாரிலே இருந்தது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் பழைய நாகரிகங்களெல்லாம் ஏன் எடுத்து ஆராய்ச்சி செய்கிறோம். பண்டைய காலங்களிலே இருந்த பண்பாட்டுத்தளத்தை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த ஆய்வு. வீரமும், காதலும், விருந்தோம்பலும் தமிழருக்கே உரிய பண்பு. மனித நேய உணர்வோடு தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இருக்கிறது. அதனால்தான் அறிஞர் அண்ணா எதையும் இலக்கியங்களை முன்வைத்து சொல்வார்.

தமிழ் இலக்கியங்களுக்கு நிகரானது எதுவும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மனதை மாற்றி, உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமானது ஒரு புத்தகம். ஒரு எழுத்தாளன் நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கிறான். இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழ வைக்கும். அந்த இலக்கியங்கள் போற்றி வந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.

பேச்சாளர்கள் அப்துல் காதர், டாக்டர் சுதா சேஷய்யன், நடிகர் பிரகாஷ்ராஜ், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
முன்னதாக திரைப்படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அனைவரையும் வரவேற்றார். முடிவில், வேளச்சேரி பி.மணிமாறன் நன்றி கூறினார்.

தமிழகத்தின் புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்

தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல்:-

திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றிïர்.

சென்னை மாவட்டம்
டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி.

காஞ்சீபுரம் மாவட்டம்
சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்ïர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம்.

வேலூர் மாவட்டம்
அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.

தர்மபுரி மாவட்டம்
பாலக்கோடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி).

திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி).

விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி).

சேலம் மாவட்டம்
கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடியினர்), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்கரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, கொமாரபாளையம்.

ஈரோடு மாவட்டம்
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), பெருந்துறை, பவானி, அந்திïர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி).

நீலகிரி மாவட்டம்
உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர்.

கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், சூளூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.

திண்டுக்கல் மாவட்டம்
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடச்சந்தூர்.

கரூர் மாவட்டம்
அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை.

திருச்சி மாவட்டம்
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறைïர் (தனி).

பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்.

கடலூர் மாவட்டம்
திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி).

நாகை மாவட்டம்
சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம்.

திருவாரூர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம்.

தஞ்சை மாவட்டம்
திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.

புதுக்கோட்டை மாவட்டம்
கந்தர்வக்கோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி.

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி).

மதுரை மாவட்டம்
மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி.

தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம்.

விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி.

ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.

தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

நெல்லை மாவட்டம்
சங்கரன்கோயில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளிïர்.

அரசியல் பழிதீர்க்க வழக்கு- வைகோ

சென்னை: அரசியல் வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வதற்காக என் மீது வழக்கு போடுகிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக எம்பிக்களான செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றதற்கு முதல்வர் கருணாநிதி தான் காரணம் என வைகோ குற்றம் சாட்டியிருந்தார். வைகோவின் இந்தப் பேச்சு கருணாநிதிக்கு பெரும் இழிவை உண்டாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் என்னை பழிவாங்குவதற்காக என்மீது ஆளும்கட்சி போட்ட இந்த வழக்கில், நீதி வென்று உண்மை கண்டிப்பாக ஜெயிக்கும். நான் நம்பிக்கையோடு சட்டப்படி வழக்கை சந்திப்பேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி இணைப்பை தேசியமயமாக்க ஜெயலலிதா முயற்சிகள் எடுத்தார். ஆனால் அப்போது அந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறியவர், இன்று அதே சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இலங்கை ராணுவம், அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசு, அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதங்கள் சப்ளை செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன. மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இதுவரை ஓராயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் எல்லாம் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை எதிர்த்து இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியதே கிடையாது என்றார்.

Monday, August 6, 2007

நந்திகிராமம் முதல் தூத்துக்குடி வரை...

உலகமயமாக்கல் வளரும் நாடுகளைச் சூறாவளியாகத்தாக்கிக் கொண்டு இருக்கிறது. அரசாங்கங்களையும், ஆளுகிறவர்களையும் ‘கைக்குள் போட்டுக் கொண்டு’ விசுவரூபம் எடுத்துவிட்டதாக பிரம்மாண்டத் திட்டங்களை அடுக்கும் அதே வேளையில், அதன் பகாசுர வேகத்தில் மிதியுண்டு கூழாகிப் போகிறார்கள் அடித்தட்டு மக்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுடன், உள்நாட்டின் பெருமுதலாளிகளும் முன்னிலும் வேகத்துடன் பணக்கிடங்குகளை நிரப்ப யத்தனிக்கும்போது, ஏழைபாழைகள் அவர்களின் ராட்சதக் கரங்களில் சிக்குண்டு மடிவது தொடர்ச்சியாக நிகழ்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) என்ற பெயரில் ஏழை மக்களின் விவசாய நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன. மறுபுறம் பெருமுதலாளிகளின் பேராசைத் திட்டங்களுக்கு கதவு திறந்துவிடும் அரசாங்கங்கள் உள்ளூர் மக்களை விரட்டியடிக்கிற முனைப்பில் நிற்கின்றன.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் குறித்து வாய்கிழியப் பேசும் இடதுசாரிகள் - உலகமயமாக்கலை எதிர்ப்பதாகத் தம்பட்டமடிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் - தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் அப்பாவி மக்களின் வாழ்வு ஆதாரங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபத் திட்டங்களுக்காவும் அடகு வைக்க முயன்றனர்.

டாடாவுக்காக சிங்கூர் கிராமத்தை ஆக்கிரமிக்க முற்பட்டது இடதுசாரி கூட்டணி அரசு. நந்திகிராமத்தில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக பழங்குடி மக்களை விரட்டியடித்து கொன்று குவித்தது. குடிசையில் இருந்து துப்பினால் கோபுரமே வீழும் அல்லவா? அடக்குமுறைக்கு அஞ்சாத ஏழை மக்கள்ஒன்று திரண்டு துப்பாக்கி முனைகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தினார்கள். இடதுசாரி அரசு பின்வாங்கிவிட்டது. ஆனால், காலம் கருதிக் காத்துக்கொண்டு இருக்கிறது...

கம்யூனிஸ்ட்டுகள் கூலி விவசாயிகளுக்கும், ஏழைமக்களுக்கும் இலவச நிலம் கோரி ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ‘இலவச நிலமா? ஏது?’ என்று கைவிரித்த அரசாங்கத்தின் முன்னால் இறைந்துகிடக்கும் நிலங்களைப் பட்டியலிட்டுக் காட்டினார்கள். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசு மசியுமா? மறுத்து முரண்டு பிடித்தது. பொதுமக்களை ஒன்று திரண்டுப் போராட அழைப்பு விடுத்தார்கள் இடதுசாரிகள். காங்கிரஸ் அரசோ ஆயுதத்தைக் கையில் எடுத்தது. ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஆறு அப்பாவிகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகிப்போனார்கள்.

இந்தியாவை உலுக்கிய இந்த நிகழ்வால் ஆந்திர அரசாங்கம் தட்டுத் தடுமாறி விழித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் இருந்து எழும் எதிர்ப்புக் கணைகளைத்தாள முடியாமல் தவிக்கிறது. மேற்கு வங்கத்தில் பலஉயிர்களைப் பலி கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் பறிக்கப்பட்ட உயிர்களுக்காக நாடு முழுவதும் கிளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்...

அடுத்த காட்சிக்கு வருவோம்...

‘மும்முடிச்சோழன்’ ஆளும் தமிழகத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கிற தொழிற்சாலை வைக்க முடிவெடுத்தது டாடா நிறுவனம். வருகிற ‘இலாபத்தை’ எண்ணிப் பார்த்ததும் உடனே தலை அசைத்துவிட்டார் முத்தமிழ் அறிஞர்.

சுமார் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள அரசூர் பகுதியில் இத்தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்தது டாடா நிறுவனம். இதற்காக ஏறத்தாழ 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி டாடாவுக்கு தாரை வார்க்க முனைந்தார் தமிழக முதல்வர். ‘புரிந்து உணர்வு’ ஒப்பந்தமாம்! அதில் டாடாவுடன் கையெழுத்திட்டு களத்தில் இறங்கியபோதுதான் கலங்கிப் போனார் கலைஞர். அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கிளர்ந்தார்கள். “எங்களுக்கு ஒரு வழி சொல்லிவிட்டு டாடாவுக்கு கம்பளம் விரி!” என்று ஆர்ப்பரித்தார்கள். ஜனநாயகக் குரலுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்றுதிரண்டதால், மேற்கு வங்கம், ஆந்திரா அளவுக்கு நிலைமை விபரீதம் ஆகாமல் தடுக்கப்பட்டது.

இது தற்காலிகம்தான்! “பொதுமக்களின் கருத்தறிந்த பிறகு முடிவு செய்வோம்” என்று அறிவித்துவிட்டு, காலம்பார்த்து காத்து இருக்கிறது கருணாநிதி அரசு!

இப்படி மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம் என்று ஏழைகளின் வயிற்றில் அடித்துப் பிழைக்கிறவர்கள்தாம் ஒன்று சேர்ந்து தில்லியில் அரசாட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சொந்த மண்ணை அந்நிய நிறுவனங்களுக்கும், உள்ளூர்க் கொள்ளையர்க்கும் தாரை வார்த்துவிடத் துடிக்கும் இவர்களின் கையில் நாடு இருப்பது பரிதாபநிலைதான்!

விழித்துக் கொள்ளாவிட்டால், பின்னர் அழுது என்ன பயன்?

- வளவன்

____________________________________________________________

சங்கொலி 10.08.2007 இதழிலிருந்து....

Sunday, August 5, 2007

மக்களின் நிலங்களைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம்! - வைகோ

டைட்டானியம் தாதுப் பொருள் நிறைந்து காணப்படுகிறது. இந்த இயற்கைக் கனிமப் பொருளைப் பயன்படுத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு, டாடா நிறுவனத்திற்காக சுமார் 16,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாகி உள்ளது.
துhத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், திசையன்விளை, கூத்தன்குழி ஆகியதேரிக்காடு பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது. இந்தப் பகுதிகளில் பனைத்தொழிலையும், இதர பயிர்த்தொழிலையும் நம்பி சுமார் 40 ஆயிரம்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை வளமும், நீர்வளமும், செழுமையும் நிறைந்த இந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு, டாடா நிறுவனம் தொழிற்சாலை நிறுவுவதற்கு தமிழக அரசு,மக்களிடம் இருந்து நிலங்களைப் பறிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வு ஆதாரம் பறிபோகும் நிலை, அப்பகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இத்தகைய தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு,கடல்நீர் உட்புகும் அபாயமும் உருவாகும்.முதலில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளநிலங்கள் மட்டுமே டாடா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது பொதுமக்களிடம் இருந்து, சொற்பவிலையை நிர்ணயம் செய்து, நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதற்குத் தமிழகஅரசு முயற்சி செய்வதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நடுவண் அரசு, சிறப்புப் பொருளாதாரமண்டலச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி, தொழிற்சாலைகள்அமைவதற்கான நிலங்களை, அந்தந்த நிறுவனங்களே மக்களிடம் நேரிடையாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகஅரசு டாடா நிறுவனத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவது ஏன்?
பாதிக்கப்படும் குடும்பங்கள் பல்லாயிரம்பேருக்கும், டாடா நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்கும் என்பதும் நடைமுறைக்கு வரக்கூடியது அல்ல. ஆகவே, தமிழக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து,நெல்லை, துhத்துக்குடி மாவட்ட மக்களின்வாழ்வு ஆதாரங்களைப் பறிக்கும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். இல்லையெனில், இந்தியாவின் தென்பகுதியிலும் ஒரு ‘நந்திகிராமம்’ உருவாகும்சூழல் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன். தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க.ஆதரவை வழங்குவதுடன், மக்களோடுஇணைந்து மண் உரிமை காத்திடப்போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அன்று மாலையிலேயே தமிழக அரசு, டாடாதொழிற்சாலை மிகவும் அவசியம் என்று கூறிவிளம்பரமாகத் தந்த அறிக்கை, மறுநாள் பலஏடுகளில் பெரிய அளவில் விளம்பரமாக வந்தது.மக்கள் நலனை மனதில் கருதி, டாடாதொழிற்சாலை அமைவதைத்தடுக்க, மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்துhரில் 30ஆம் தேதி அன்று, மாபெரும் உண்ணாநிலை அறப்போர் நடத்தும் என்று துhத்துக்குடி மாவட்டச்செயலாளர் ஆருயிர்த்தம்பி ஜோயல் அறிவித்தார்.போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும்வேலையில் முழுவீச்சில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், ‘‘டாடாதொழிற்சாலை அமைவதை எதிர்த்துப் போராட்டம்நடத்துவோம் என்றும், நானே தலைமைதாங்குவேன்’’ என்றும் அறிவித்தார்.
ஏற்கனவே நாம் அறிவித்தவாறு, திட்டமிட்டபடிதிருச்செந்துhரில் ஐயா கே.பி.கே. சிலை அருகே, 30ஆம் தேதி அன்று காலையில் உண்ணாநிலைஅறப்போர், மாவட்டச் செயலாளர் ஜோயல்தலைமையில் நடைபெற்றது. இந்த அறப்போரில், சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் ஆருயிர்இளவல் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் அவர்களும்,மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்களும், ஒன்றிய, நகரச் செயலாளர்களும், உள்ளாட்சிநிர்வாகிகளும், அணிகளின் அமைப்பாளர்களும், கழகக் கண்மணிகளுமாக ஆயிரக்கணக்கானோர்பங்கு ஏற்ற போராட்டத்தைக் கழகத்துணைப்பொதுச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர்நாசரேத் துரை அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
முற்பகலிலேயே, நாசரேத் துரை அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, டைடானியம் தொழிற்சாலை தொடங்குவதை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் அறிவித்துவிட்டார் என்று கூறியபோது, நான் அவரது கைத்தொலைபேசி மூலமாகவே, உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறுகிற பந்தலில் இருந்த நம் அறப்போர் வீரர்களுக்கு வாழ்த்துச்சொன்னேன். அதனை ஒலிபெருக்கி மூலம் கேட்ட தோழர்கள் ஆரவாரித்தது என் செவிகளில்விழுந்தது. ‘‘மக்கள் பிரச்சினைக்காக நாம்நடத்துகின்ற போராட்டத்துக்குக் கிடைத்து உள்ளவெற்றி. தமிழக அரசு தற்போது பதுங்கிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் மாய்மால விளக்கங்களைத்தந்துவிட்டு, பின்னாளில் தொழிற்சாலைதொடங்க நினைத்தால், அதனை எதிர்த்துக்கடுமையான போராட்டத்தை நடத்துவோம். நானும் பங்கேற்பேன்.’’ எனக் கூறினேன்.
மாலையில், அண்ணா தி.மு.க. மாவட்டச்செயலாளர் சகோதரர் அனிதா இராதாகிருஷ்ணன் நமது உண்ணாநிலை அறப்போரை முடித்துவைத்தார். ‘எண்ணித் துணிக கருமம்’ என்பதுமுதல் அமைச்சருக்கு அடியோடு மறந்துபோய்விட்டதா? ஆராயாமல் செய்யும் காரியம், கேடாகத்தானே முடியும்? டாடா தொழிற்சாலையை எதிர்ப்போரெல்லாம், தேச விரோதிகள், சமுதாயக்கிருமிகள் என்றும் பண்பாடு அற்ற முறையில்விமர்சித்தாரே? இதற்காக என்னைக் கேலிசெய்து, அவர்களின் குடும்ப ஏட்டில் ஒரு கருத்துப்படமும் வெளியிட்டார்கள். சமுதாயக் கிருமிகள் பட்டியலில், தோழமைக் கட்சியினரையும் சேர்த்துவிட்டார் போலும். ஆம். தேச நலனை இவர்மட்டுமே குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்போலும். அரசாங்க விளம்பரத்துக்கு விரயமாக்கிய பணமெல்லாம், மக்கள் வரிப்பணம் அல்லவா?
சாத்தான்குளம் பகுதியில் இல்மனைட், மோனேசைட் போன்ற கனிமப் படிமங்களை சிலதனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக, அரசுஅனுமதி இன்றி வெட்டி எடுப்பதாகவும், கடத்துவதாகவும் தெரிய வந்ததால், இந்தத் தொழிற்சாலையை அமைக்க அரசு தீர்மானித்ததாக, அரசாங்கமே விளம்பரம் செய்துஉள்ளது. சட்டவிரோதமான காரியங்களைத் தடுப்பதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது? சட்டமும், காவல்துறையும், நிர்வாகமும் இருக்கிறது? எனவே, அரசின் விளக்கம் என்பது, புண்ணுக்குப் புனுகு தடவும் வேலை.
நம் தோழர்களுக்கு ஒன்றைக் கவனப்படுத்த விரும்புகிறேன். பொதுமக்கள் பிரச்சினைக்காக துhத்துக்குடி மாவட்டச் செயலாளர் முன்யோசனையோடு எடுத்த நடவடிக்கையும், தோழர்களைத்திரட்டி நடத்திய போராட்டமும், நாட்டு நலன்ஒன்றே நமது குறிக்கோள் என்பதை, அப்பகுதிவாழ் மக்கள் மனதில் ஆழப்பதித்து இருக்கிறது.
தமிழக மக்களின் நலன் ஒன்றே நமது நோக்கம், நமது செயல், நமது அணுகுமுறை என்றஅடிப்படையில்தான் கடந்த 13 ஆண்டுகளாக நாம் இயங்கி வருகிறோம் என்பதை ஏடுகள்மறைத்தாலும், உண்மைகளை நிரந்தரமாக இருளில் தள்ள முடியாது. வெளிச்சத்துக்கு வந்தேதீரும் எனும் நம்பிக்கையுடன் கடமை ஆற்றுவோம்.
பாசமுடன்,
வைகோ
--------------------------------------------------------------------------------------------------------

Saturday, August 4, 2007

வைகோ அவர்களின் இலக்கிய சொற்பொழிவுகள் புத்தக வெளியீடு

வைகோ அவர்களின் இலக்கிய சொற்பொழிவுகள் புத்தக வெளியீடு விழா

14.8.2007 செவ்வாய் மாலை 6 மணி,

தென்னிந்திய திரைப்பட வர்த்தகர் சங்கக் கட்டட அரங்கு,

(பிலிம் சேம்பர்)அண்ணா சாலை சென்னை.




சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழாவில் வைகோ

தமிழ் உணர்வும், சைவ நெறியும் தழைத்து ஓங்கும் தில்லை மாநகரில்... அறிவுச்சுடர் கொளுத்தும் அண்ணாமலைபல்கலைக் கழகமும், துப்பாக்கிக்கு மார்புகாட்டி மொழிப் போர்க்களத்தில் இன்னுயிர்ஈந்த இராசேந்திரன் சிலையும், உலகுவியக்கும் நடராசர் ஆலயமும் அமைந்து இருக்கும் சிதம்பரம் நகரில்... அன்னைத்தமிழ் மொழிக்கு ஆலயத்தில் இடமில்லையா என ஆர்த்து எழுந்துபோராடும் மானமறவர்களின் பாசறையான சிதம்பரத்தில்... அறிவாசான் பெரியாரும், அறிஞர் பெருந்தகை அண்ணாவும்கொள்கை முழக்கமிட்டு திராவிட இயக்கஇளைஞர்களை உருவாக்கிய பாடிவீடான தில்லையம்பலத்தில், தமிழ்ப்பேரவைநிகழ்த்திய தெடீநுவச்சேக்கிழார் 21 ஆவதுசெந்தமிழ்த் திருவிழாவில், இலட்சியத்தலைவர் வைகோ அவர்கள் எழுச்சிமுழக்கமிட்டு பேருரையாற்றிச்சிறப்பித்தார்கள்.

29.7.2007 காலை முதலே கழகத்தோழர்களும், பல்கலைக் கழகப்பேராசிரியர்களும், மாணாக்கர்களும், தமிழ் அறிஞர்களும், நகரின் முக்கியப்பிரமுகர்களும் சாரை, சாரiயாகஅண்ணாமலை பல்கலைக் கழகவிருந்தினர் மாளிகைக்கு வருகை தந்து, அங்கு தங்கியிருந்த தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து வரவேற்றுஅளவளாவி மகிழ்ந்தார்கள்.
தமிழ்ப்பேரவையின் நிர்வாகிகளான பேராசிரியர் அழ.பழனியப்பன், இராம.ஆதிமூலம், ஆ.சிவராம வீரப்பன், சரவணன்,லட்சுமணன், டாக்டர் முத்துசாமி, டாக்டர் இந்திரலேகா ஆகியோர்தலைவர் வைகோ அவர்களிடம் கனிந்த அன்புடன் அளவளாவினார்கள்.

தமிழ்ப் பேரவையின் பணிகளையும், கடந்தகால வரலாற்றினையும் அவர்களிடம் அக்கறையோடு கேட்டு அறிந்ததலைவர் வைகோ அவர்கள், தவத்திரு. குன்றக்குடி அடிகளாரையும், திருக்குறளார் முனிசாமி அவர்களையும் அழைத்து தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை தாம் நடத்திய பாங்கினையும், தமிழ் அறிஞர் நடேச முதலியார் அவர்களை அழைத்து தென்காசியில் வள்ளுவர் விழாவில் பங்கேற்கச் செய்ததையும், குற்றாலத்தில் அவருக்குத் தொண்டனாக இருந்து பணிசெய்ததையும் தமிழ்ப் பேரவையினரிடம் நினைவு கூர்ந்தார்.

மாலையில் புறப்பட்டு, நூற்றுக்கணக்கான தோழர்களின் வாகன அணிவகுப்புடன் தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக கிழக்குவீதியில் நிகழ்ச்சி நடைபெறுகிற இராசி திருமண மண்டபத்திற்கு வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது அரங்கில் பேராசிரியர் பெரியார்தாசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது உரைக்குஎவ்வித இடையூறுமின்றி கழகத் தோழர்கள் நடந்து கொண்டதும், கழகத் தோழர்களும், முன்னணி நிர்வாகிகளும் அரங்கிற்கு வெளியே அமர்ந்து நிகழ்ச்சிகளைச் செவிமடுத்த பாங்கினையும் சைவச்சான்றோர்களும், பொதுமக்களும் கண்டு வியந்தார்கள். அரங்கிற்குவெளியே போடப்பட்டிருந்த இருக்கைகளையும், கடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதியிலும், சாலை ஓரத்திலும் அமர்ந்து வெளியே திரையில் ஒளிபரப்பப்பட்ட விழா நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்கள்.

பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களின் உரையினைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மூசா உரையாற்றினார். அதன் பின்னர் வழக்கறிஞர் அ.சம்பந்தம் தலைவர்வைகோ அவர்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

திருத்தொண்டர்புராணம் தந்த சேக்கிழார் சுவாமிகளை, தேரின்மீது அமர்த்தி, தானும் உடன் அமர்ந்து அவருக்கு கவறி வீசிக்கொண்டே,தில்லை மாநகரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்த மாமன்னன் இரண்டாம் குலோத்துங்கனைப் போல சேக்கிழாரின் பெருமையைப்பேச தலைவர் வைகோ நம்மிடையே வந்திருக்கிறார், “வை என்றால் வையகம், கோ என்றால் அரசன். எனவே, நமது வைகோ அவர்களும் அரசர்தான். தொண்டர் தம் பெருமையை எடுத்துச் சொல்ல தலைவர் வைகோ வந்திருக்கிறார். தலைவர்களாக உயர்ந்த தொண்டர்கள் உண்டு. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தலைவர்களாக உயர்ந்ததொண்டர்களும் உண்டு. ஆனால், நமது தலைவர் வைகோ அவர்கள் தொண்டர்களை உயர்த்திய தலைவர் என்றும் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் சம்பந்தம் உரையாற்றியபோது அரங்கில் உள்ளோர் விண்ணதிர கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழ்ப்பேரவையின் தலைவர் இராம.ஆதிமூலம் அவர்கள் தலைவர் வைகோ அவர்களின்பண்பு நலன்களைப் பாராட்டிப் பேசினார். பல ஆண்டுகளாகவே தலைவர் வைகோ எங்களிடம் உரையாற்ற வேண்டும் என்றதாகம் இப்போது நிறைவேறி உள்ளதுஎன்று மனநிறைவுடன் குறிப்பிட்ட ஆதிமூலம் அவர்கள், ஒரு அஞ்சல் அட்டைவழியே ஒப்புதல் கேட்ட எங்களை மதித்து, தொலைபேசி வழியே “உங்கள் வசதிக்குஏற்ப ஏற்பாடு செய்யுங்கள். கலந்துகொள்கிறேன்” என்ற பதில் அளித்த வைகோவின் பெருந்தன்மையும் - சாதாரண எளிய தொண்டர்களான எங்களை அண்ணாநகர் இல்லத்தில் வரவேற்று பாச உணர்வோடு பேசிமகிழ்ந்திட்ட பெருஉள்ளத்தையும் கண்டுவியந்து போனேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

புரட்சித்தலைவருக்குப் பிறகு காந்தசக்தியை நிகர்த்த ஈர்ப்புக்குரிய தலைவர் வைகோதான். உங்கள் கட்சியிலேயேசேர்ந்துவிடலாம் என்கிற அளவுக்குதலைவர் வைகோ ஈர்ப்பு சக்தியுள்ளமகத்தான தலைவர் என்றும், தொண்டர்களை மதிக்கிற நேசிக்கிறதலைவர் மட்டுமல்ல. தனக்குரிய எம்.பி.பதவி, மந்திரி பதவி, எம்.எல்.ஏ. பதவிவாய்ப்புகளைக் கூட தனது சகாக்களுக்கு ஒதுக்கித் தருகிற அதிசய தலைவர் வைகோஎன்றும், அடுக்கிக் கொண்டே ஆதிமூலம் அவர்கள் செந்தமிழ் நடையில் சொற்பொழிவாற்றியதைக் கேட்டஅவையினர் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள் நமது ஊருக்கு வருகை தந்துள்ள தலைவர் வைகோ அவர்களை வரவேற்று சிறப்புச் செய்ய வேண்டும் என்றார். பட்டுக்கோட்டையில் ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் நகரமன்றத் தலைவரும் ஆன விசுவநாதன் மறைவுற்றபோது அவரது இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் 12 கிலோ மீட்டர்தொலைவு நடந்தே வந்து மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு தொண்டர்களை மதிக்கிற தலைவர் வைகோதான் என்று நெஞ்சம் நிறைந்து புகழாரம் சூட்டினார்.

நமது இலட்சியத் தலைவர் வைகோஅவர்கள் இரவு 8.50 மணிக்கு தமது உரையைத் தொடங்கி 9.50 மணிக்குநிறைவு செய்தார். குற்றால அருவியாய், தழுவிடும் தென்றலாய், தெவிட்டாததேனமுதாய், மடை திறந்த காவிரிப்புதுப்புனலாய் தங்கு தடையின்றிதாவிக்குதித்து துள்ளி ஓடி வரும் இலக்கியச்சுவை மிகுந்த தலைவர் வைகோவின்சொற் பொழிவினை இமை மூடாது உற்றுக்கேட்டுக் உவப்படைந்தனர் மக்கள்! “தொண்டர்களை உயர்த்தியவன் வைகோ"என்றார்கள். "தொண்டர்களால் உயர்ந்தவன் வைகோ" என்று திருத்திச்சொல்லி தொண்டர்களுக்குச் சிறப்புச்செய்தார் வைகோ. பாவேந்தரும், மறைமலை அடிகளாரும் ஊட்டிய உணர்வோடுதான் நான் இந்த விழாவில்கலந்து கொள்கிறேன் என்று தலைவர் வைகோ அளித்த விளக்கத்தில் பொதிந்திருந்த நமது இலட்சிய உறுதி கண்டுஅவையினர் பெருமிதம் கொண்டனர்.

நிகழ்ச்சியினைத் தொடக்கம் முதல் வந்துஅமர்ந்து காண தாம் விரும்பியதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாலை 6மணிக்கு மேல் வந்தால்போதும் என்றுதெரிவித்ததையும், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை இராகு காலம்என்பதால் அப்படிச் சொல்லி இருப்பார்களோ என்று அய்யப்பட்டதையும், இராகு காலம் பார்க்காமல் தேர்தலில்வேட்பு மனுத்தாக்கல் செய்ததையும் வேலூர்ச் சிறையில் இருந்து விடுதலைபெற்று வெளியே வந்ததையும் குறிப்பிட்டார் வைகோ. பெரியாரின் இலட்சிய உறுதியும், அண்ணாவின் அரிய அணுகுமுறையும் தலைவர் வைகோ அவர்களிடம் மின்னி மிளிர்வதைக் கண்டு அரங்கில்இருந்தோர் அனைவரும் மகிழ்ந்தார்கள்.

அகன்ற தேரோடும் வீதியில் ஆரவாரத்துடன் இளவரசன் வீதி விடங்கன் தேரேறி வந்தபோது, ஓடி வந்துதேர்க்காலில் சிக்கி மடிந்த பசுங்கன்றின் துயர் தாளாது நீதி கேட்டு தாய்ப்பசு மணிஓசை எழுப்பியபோது, தாய்ப்பசுவைப் போலதாமும் மகனை இழந்த துயரை அனுபவிக்க வேண்டும் என்று நீதியுரைத்த, மன்னன் மனுநீதிச் சோழன் தனதுமகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று தண்டித்த கதைப் பாடலை தலைவர் வைகோ விவரித்தபோது, நீதிகாக்க, தன்மகனையே கொன்று தண்டித்த மனுநீதிச் சோழ மன்னன் ஆண்ட தமிழ்நாட்டில்,கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அடியாள்களை ஏவி கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட ‘திருக்குமாரர்கள்’ அரசமரியாதையோடு அழகாக வலம்வரும்இன்றைய ஆட்சியாளர்களின் பிள்ளைப்பாசத்தை அரங்கில் உள்ளோர் ஒப்பிட்டுநெஞ்சம் பதைத்தார்கள்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம், பெரும்புலவர் நமச்சிவாயம், மதுரை ஆதினகர்த்தர், குன்றக்குடி பொன்னம்பலஅடிகள், பேராசிரியர் அறிவொளி, கா.காளிமுத்து, நாஞ்சில் சம்பத், பேராசிரியர்கள் சத்யசீலன், செல்வகணபதி, அகர முதல்வன் குமரி அனந்தன், சீர்காழிடாக்டர் சிவ.சிதம்பரம், இளம்பிறைமணிமாறன், சாரதா நம்பி ஆரூரான்ஆகிய தமிழ் அறிஞர்களின் உரையினைக்கடந்த 20 ஆண்டுகளாகக் கேட்டு மகிழ்ந்ததமிழ்ப் பேரவையினர் - இந்த ஆண்டுதலைவர் வைகோ அவர்களின் இலக்கிய உரை கேட்டு மகிழ்ந்தும், எவ்விதசிறுதுண்டுத்தாள் குறிப்புமின்றி தமிழ் இலக்கிய வரலாற்றினையும் அழகுதமிழ்ப்பாடல்களையும், சம்பவங்களையும் எடுத்தியம்பும் வைகோ சொற்பொழிவின்மாட்சி கண்டும் வியந்தனர்.

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,குட்டி (எ) சண்முக சிதம்பரம், மாவட்டச்செயலாளர்கள் டாக்டர் மாசிலாமணி,கு.சின்னப்பா ஆகியோரும் கழக முன்னணியினரும் திரளாக தோழர்களும்வருகை தந்து சிறப்பித்தார்கள். மாவட்டச் செயலாளர் சௌ.பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலில் சிதம்பரம் நகர செயலாளர் எல்.சீனுவாசன் அவர்கள் விழா சிறக்கஉரிய ஏற்பாடுகளைச் செவ்வனே செய்திருந்தார்.

கோயில் குடமுழுக்குகளில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்குத் தடை வாங்கியதருமபுரம், திருப்பனந்தாள் ஆதினங்களைக் கண்டித்தும், உயர்நீதிமன்ற வழக்கினைத் திரும்பப் பெற அவர்களை வலியுறுத்தியும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மறுமலர்ச்சிதி.மு.கழகத்தின் மாண்பு தில்லை மாநகரில்மேலும் மேலும் உயர்ந்திருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தொகுத்து வழங்கியவர் ஆ.வந்தியத்தேவன். கழக வெளியீட்டுச் செயலாளர். சங்கொலி 10.08.2007 இதழிலிருந்து...

சங்கொலியை இனையத்தில் படிக்க... www.sangoli.org

தொண்டாமுத்தூர் தொகுதி வளர்ச்சிக்கு ரூ.1.20 கோடி: ம.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் மு.கண்ணப்பன் ஒதுக்கீடு


பெ.நா.பாளையம், ஆக.5: தொண்டாமுத்தூர் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியங்கள், கவுண்டம்பாளையம் நகராட்சி ஆகிவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்கென தனது தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் இந்த ஆண்டு ரூ.1.20 கோடி நிதியை தொண்டாமுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் மு.கண்ணப்பன் ஒதுக்கியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2007- 2008 நிதியாண்டில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பெ.நா.பாளையம் பேரூராட்சியில் ஜோதிபுரம் பகுதியில் கழிப்பிடம் அமைக்க ரூ.3 லட்சம், துடியலூர் பேரூராட்சியில் ஊனமுற்றோர் பள்ளி சுற்றுச் சுவர் அமைக்க ரூ.1 லட்சம், 50 சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.2.10 லட்சம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.1.22 லட்சம், பூச்சியூரில் கழிப்பிடம் கட்ட ரூ.2.70 லட்சம், வீரகேரளம் பேரூராட்சியில் சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.1.02 லட்சம், தென்றல் நகர்,சுண்டப்பாளையம் பகுதிகளில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் சம்ப்கள் கட்ட ரூ.6.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


குருடம்பாளையம் ஊராட்சியில் வடமதுரை, குமரபுரம் பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் கட்ட ரூ.5 லட்சம், அருணா நகர் குறுக்குச் சாலைகள் சீரமைப்பிற்கென ரூ.4 லட்சம், பன்னிமடை ஊராட்சி திப்பனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட ரூ.1.90 லட்சம், 20 சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.84 ஆயிரம், காங்கிரீட் சாலைகள், படிக்கட்டுகள் அமைக்க ரூ.2.05 லட்சம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.4 லட்சம், அசோகபுரம் ஊராட்சியில் தார் சாலை அமைக்க 2 லட்சம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் தார் மற்றும் காங்கிரீட் சாலைகள் அமைக்க 2.65 லட்சம், வீரபாண்டி ஊராட்சியில் ஆனைகட்டி மலைகிராமங்களில் சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.47 ஆயிரம், மேல்நிலைத் தொட்டி அமைக்க ரூ.2 லட்சம், 135 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை பழுது பார்க்க ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.58.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம்: தொண்டாமுத்தூர் பேரூராட்சி சுள்ளிபாளையத்தில் பாலம் அமைக்க ரூ.6.50 லட்சம், நேதாஜி நகரில் காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.3 லட்சம், 6, 7, 8 வார்டுகளில் கழிப்பிடங்கள் கட்ட ரூ.3 லட்சம், கல்வீரம் பாளையம் அரசுயர் பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட ரூ.5 லட்சம், தாளியூர் பேரூராட்சியில் கழிப்பிடங்கள், குடிநீர் தொட்டிகள், ரேஷன் கடை கட்ட ரூ.7.35 லட்சம்,பூலுவப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி, சாலைகள் அமைக்க ரூ.3.70 லட்சமும், ஆலாந்துறை பேரூராட்சிக்கு ரூ.5 லட்சம், தென்கரை பேரூராட்சி வன்னியர் காலனியில் வெள்ளத் தடுப்பு சுவர் கட்ட ரூ.2.35 லட்சம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் 25 தொகுப்பு வீடுகள் பழுதுபார்க்க ரூ.2.50 லட்சம், தீத்திபாளையம், மத்வராயபுரம் ஊராட்சிகளில் பள்ளிச் சுற்றுச் சுவர், குடிநீர் தொட்டி கட்ட 4.22 லட்சமும்தேவராயபுரம் ஊராட்சியில் காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.5 லட்சம், வடவள்ளி பேரூராட்சியல் தார் சாலை மற்றும் விளக்கு வசதிகள் ஏற்படுத்த ரூ.6.20 லட்சம் என ரூ.53.82 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் நகராட்சி: இங்கு 120 சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.5.04 லட்சம், இடையர்பாளையம் நடுநிலைப் பள்ளி சமையல் கூடம் மற்றும் ஸ்டோர் அறை கட்ட ரூ.1.13 லட்சம், பிருந்தாவன் நகரில் கம்பிவலையுடன் கூடிய சுற்றுசுவர் அமைக்க ரூ,.2.50 லட்சம் என ரூ.8.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலங்களுக்கான பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு உயர்வை ரத்து செய்யவேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 5-: நிலங்களுக்கான பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைப் பல மடங்கு உயர்த்தி, கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்து உள்ளது. திடீரென்று, வழிகாட்டி மதிப்பை அரசு உயர்த்தி உள்ள நடவடிக்கை, நடுத்தர மக்களை மாத வருவாயை நம்பி வாழும் மக்களை, சிறு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

நில விற்பனையில் முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதன் மூலம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த இயலாது. வசதி குறைந்தோர், நடுத்தர மக்கள், சிறு விவசாயிகள் காலி இடங்களையும், நிலங்களையும் விற்கவோ, வாங்கவோ இயலாத வகையில், மூன்று மடங்கு, நான்கு மடங்கு பத்திரப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அதற்கு உரிய பொருளாதார வசதி இன்றி, பத்திரப் பதிவு செய்ய முடியாது. பணமுடையின் காரணமாக, நிலங்களை, இடங்களை விற்றாலும் அல்லது குடும்பங்களுக்கு உள்ளே பாகப்பிரிவினை செய்தாலும், பத்திரப்பதிவு செய்து கொள்ளாமல், வெறும் உடன்படிக்கையாகவே அப்பரிமாற்றங்கள் அமையும்.

இதனால், அதே இடங்களை, நிலங்களை, பெரும் பணம் கொண்டோர் விலைக்கு வாங்கவும், அதன் விளைவாகப் பிரச்சினைகளும், பல்வேறு இன்னல்களும் ஏற்படும். நிலத்தினுடைய மதிப்பை உயர்த்துகிற கட்டுமான வசதிகள் எவற்றையும் அரசாங்கம் அப்பகுதிகளில் செய்து கொடுக்காமல், வழிகாட்டி மதிப்பைக் கூட்டி இருப்பது, நடுத்தர மக்கள் நலனைப் பாதிக்கின்ற மிகத் தவறான நடவடிக்கை ஆகும். ஒட்டுமொத்தமாக இதனால் பத்திரப்பதிவும் பாதிக்கப்படுவதுடன், அதனை நம்பி வாழும் ஊழியர்களும் அவதிக்கு ஆளாவார்கள். இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, வழிகாட்டி மதிப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலைக்கு தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்துவது ‘‘சட்டத்துக்குப் புறம்பானது...’’

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக அரசும் டாடா நிறுவனமும் ஜூன் 28-ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளன. இங்குள்ள இயற்கைக் கனிமப் பொருளைப் பயன்படுத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கு டாடா நிறுவனத்திற்குத் தேவையான நாசரேத், திசையன்விளை, கூத்தன்குழி, தேரிக்காடு பகுதிகளில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது. இவ்வாறு தமிழக அரசு நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கையால் தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு நந்திகிராம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பல கட்சிகளும் தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்துள்ளன. இதன் காரணமாக தமிழக அரசு தற்காலிகமாக இதை ஒத்தி வைத்துள்ளது. மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி அந்த குழுவின் அறிவுறைப்படி மேற்கொண்டு நடவடிக்கக எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுகவின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கொண்ட குழு அவர்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாகவே கருத்தை தெரிவிக்கக்கூடும். இதிலிருந்து அந்த பகுதி மக்களுக்கு நியாயம் கிடைத்துவிடும் என்று நாம் எண்ண முடியாது. இதை நடுநிலையோடு ஒரு குழு ஆராய்ந்தால்தான் சரியான முடிவெடுக்க முடியும்.
இந்நிலையில் இந்த வாரம் (08.08.2007) ஜூனியர் விகடன் இதழில் 'சவுத் ஏஷியன் ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம்' என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளிட்டுள்ளது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
‘‘சட்டத்துக்குப் புறம்பானது...’’ (08.08.2007 ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)
'டாடா’வின் டைட்டானியம் ஆலை துவங்கும் முன், அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் கருத்தையும் கேட்கப் போவதாகவும், மக்களின் சம்மதம் மற்றும் ஒத்துழைப்போடும்தான் இந்தத் திட்டம் துவங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஏற்கெனவே, சரத்குமார் அனுப்பிய ஒரு குழு மக்களைச் சந்தித்து, அவர் கள் தந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது. சரத்குமார் குழுவைப் போலவே, மக்களைச் சந்தித்த இன்னொரு குழுவும் உண்டு.

மனித உரிமைகள் பாதிக்கப்படும்போதும், சமூகவியல் ரீதியான பிரச்னைகள் தலைதூக்கும்போதும் நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுபோய் போராடும் 'சவுத் ஏஷியன் ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம்' என்ற அமைப்புதான் அது. இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளில் பல பிரச்னைகளை ஆராய்ந்து தன் ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறது இந்தக் குழு.

ம.தி.மு.க&வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஏ.எம்.முகர்ஜி என்ற மனித உரிமை ஆர்வலர் மற்றும் டட் என்ற பேராசிரியர் அடங்கிய மூவர் குழு இந்த 'சவுத் ஏஷியன் ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம்' சார்பாக சாத்தான்குளம் மற்றும் ராதாபுரம் பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் விரிவாகப் பேசிவிட்டுத் திரும்பியது. 'டாடா' ஆலை திட்டம் இப்போதைக்கு ஒத்திப் போடப்படுவதாக முதல்வரிடமிருந்து அறிவிப்பு வருவதற்கு முன்பே, இந்தக் குழு தனது ரிப்போர்ட்டை சிங்கப்பூரில் உள்ள தனது தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த ரிப்போர்ட்டின் முக்கிய பகுதிகள் கவனிக்கத் தகுந்தவை -

மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற பொது மக்களின் நேரடியான நலன் சார்ந்த விஷயங்களுக்காக வேண்டுமானால் நிலங்களை அரசாங்கம் ஆர்ஜிதம் செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. இதன்படி பார்த்தால், மேற்கு வங்காளம் நந்திகிராமத்தில் இதே ÔடாடாÕ நிறுவனத் துக்காக அம்மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்தது சட்டப் படி தவறான ஒன்று. தமிழக அரசும் இதே பாணியில் Ôடைட்டானியம்Õ ஆலைக்காகப் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுக்கப் போவதாகக்கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது!

சுற்றுச்சூழல், வீட்டு வசதி மற்றும் தனியார் ஆலைகள் தொடர்பான விஷயங்களை அமல்படுத்தும்போது, கிராம பஞ்சாயத்துகளின் ஆளுகையின் கீழ் உள்ள நிலங்களைப் பயன்படுத்த நினைத்தால்... அது குறித்து முடிவெடுக்கும் 'சுப்ரீம் பவர்' அந்தந்தக் கிராம சபைகளுக்கே உண்டு.

ஆனால், 'டைட்டானியம்' ஆலை விஷயத்தில் இந்தப் பஞ்சாயத்துகளின் ஒருமித்த ஆதரவைத் தமிழக அரசு எப்படி பெறமுடியும் என்று தெரியவில்லை. காரணம், அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என்று பல்வேறு கட்சிகளின் கீழ் இங்குள்ள வெவ்வேறு பஞ்சாயத்துகளும் வருகின்றன. இந்த ஆலை விஷயத்தில் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்சிகள் ஒரேவிதமான முடிவை எடுத்து சம்மதம் தர வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஆலை தொடங்கினால் சட்டரீதியான சிக்கலுக்கே வழி வகுக்கும்.

டைட்டானியம் டை ஆக்ஸைடுக்கான கனிமம், பூமியில் பத்து மீட்டருக்குக் கீழே தோண்டிய பிறகுதான் கிடைக்கும். அப்படித் தோண்டும்போது, அருகிலேயே கடல் இருப்பதால் நிலத்தடி நீர் உப்புநீராக மாறுவதற்கான அபாயம் இருக்கிறது. பனை, முந்திரி, வாழை, தென்னை, புளி, முருங்கை, பேப்பருக்கான மரம் ஆகியவற்றை பெருவாரியாக விளைவித்துவரும் மக்கள் ஒரேயடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

இந்த வட்டாரத்தில் பல கிராமங்களில் ஏராளமான கிறிஸ்தவ மதத்து மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடக்கம் செய்யுமிடங்களும் உள்ளன. அந்தக் கல்லறைகளெல்லாம் தொழிற்சாலை வரும்போது அடிபடும். வருடந்தோறும் முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் Ôகல்லறைத் திருவிழாÕவுக்கும் வழியில்லாமல் போகும். இதை அந்த மக்கள் தங்கள் சென்டிமென்ட்டுக்கு விழும் மிகப் பெரிய அடியாகவே நினைக்கிறார்கள்.

வேலை தருவதாக 'டாடா' சொல்வதை இப்பகுதி மக்கள் நம்ப மறுக்கிறார்கள். ஏற்கெனவே, கூடங்குளம், மகேந்திர கிரி திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் கசப்பான அனுபவங்களே இதற்குக் காரணம். கழிப்பறை சுத்தம் செய்வது, பெருக்குவது, பியூன் போன்ற அடிமட்ட வேலைகளை மட்டும் தங்களுக்குத் தந்துவிட்டு, ஊதியம் அதிகமான வேலைகளுக்கு வட இந்திய ஆட்களைக் கொண்டுவந்து அமர்த்துவதை இம்மக்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

'டேனிடா' திட்டத்தின் மூலம் இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமாக செலவு செய்து மரக்கன்றுகளை அரசாங்கமே நட்டுள்ளது. அந்த மரங்களை எல்லாம் ஆலையைக் காரணம் காட்டி வெட்டுவது, இதுவரை எடுத்த முயற்சிகளைப் பாழாக்குவதோடு சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்றெல்லாம் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

Friday, August 3, 2007

கலாம் அவர்களே! வருக! வருக!

மீண்டும் சென்னைக்கு - தமிழ் மண்ணுக்கு வந்து சேர்ந்திருக்கும் அப்துல்கலாம் அவர்களை, இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம்! கொடுத்தபணியைத் திறம்படச் செய்து முடித்தவர், அப்பழுக்கற்றவர் என்ற முறையில் இராமேசுவரத்தின் புகழை இமயக் கொடுமுடியில் நிலைநாட்டி, நல்லன நாடுவோர் இதயம் எல்லாம் பெருமைப்படும்படி பதவி வகித்தவர் என்றமுறையில் - அவரை நாம் மனநிறைவுடன் வரவேற்கிறோம்!

குடியரசுத் தலைவர் பதவி கிடைக்காதா என எத்தனையோ பேர் அரண்மனைச்சதிகளிலும் ஆள்பிடிக்கும் படலங்களிலும் உள்ளடி வேலைகளிலும் இறங்கிடும் மண்ணில் அப்துல்கலாம் அவர்களை - அது தானாகத்தேடி வந்தது! பதவி கிடைத்தவர்களுள் சிலர் பேராயத்தாலேயே ஒதுக்க முடியாதபடி பேராயத்திலும் தனிப்பட்ட முறையிலும் தன் வலிமை - சொந்த வலிமை - பெற்றிருந்தவர்கள்ஆவர். பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரும் பண்டித நேரு வல்லபாய் பட்டேல் ஆகியோர்க்கு இணையான அரசியலில் செல்வாக்குப் பெற்று இருந்தவருமான இராஜேந்திரபிரசாத் அவர்களை இதற்கு எடுத்துக்காட்டாகத் திட்டவட்டமாகக் கூறலாம். அடுத்ததாக சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைச் சொல்லலாம்.

நீங்கள் எத்தனைக் குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னாலும் அடிக்கிறேன்; பதவிதந்தால்போதும் என்று அப்பதவியைப் பெற்றவர்களும் உண்டு.

அப்துல்கலாம் அவர்களோ இப்பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்டதில்லை; அப்படிக் கனவு கூடக் கண்டதில்லை! வெற்றிகரமாக ஏவுகணைகளைச் செலுத்திய பின்பும் தானுண்டு; தன் ஆராய்ச்சிகளுண்டு என்று அவற்றோடு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒன்றுபட்டு இருந்தவர் அவர். மாணவர்களை ஊக்குவித்தவர் அவர். வலிமை படைத்த பாரதம் என்ற பாரதியின் கனவே அவரிடமும் இருந்தது. இஸ்லாத்தின் பகை என்றுசொல்லப்படும் பாரதிய சனதாதான் அவரைக் கண்டெடுத்தது. வேறுவழியின்றிப் பேராயமும் ஆதரித்தது. அம்மு சாமிநாதன் மகள் இலட்சுமிபாயைத் திறமை குறைந்தவர் என்றோ, நேர்மை அற்றவர் என்றோ பழிப்பதற்கில்லை. எனினும் பாரதியசனதாவும் பேராயமும் ஒன்றுபட்டுப்போன வேட்பாளரை இடதுசாரிகள் கட்டாயங்கள் சிலவற்றால் எதிர்த்தார்கள்.

வெற்றிபெற்ற அப்துல்கலாம் பிறவியில் மரைக்காயர்! கடலில் கலம் செலுத்திய மரபில் வந்தவர்! எனவே அரசியல் சூறாவளிகளுக்கு இடையில் இந்தியக் கலம் பயணம் செய்ய உதவினார். சரியான மீகாமன் ஆக இருந்தார். “ஆமாம்சாமி”ப் பதவிதான்! எனினும் அதிலும் அறநெறியையே பேணினார்.

இவரையே மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்கியிருக்கலாம். மதவெறியர்கள் என்று பழிக்கப்பட்ட பாரதிய சனதாகூட அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதை ஏற்கும் நிலையில்தான் இருந்தது. பேராயம்தான் வேறுகணக்குப்போட்டது. எதற்கெடுத்தாலும் நேர்மை நேர்மை என்கிறாரே! இவரைக்கேட்டால், அரசியல்வாதிகள் ஆதாயம் பார்க்கக்கூடாது என்கிறாரே! இவரே நீடித்தால்....... நாளை இன்னும் என்னென்ன செய்வாரோ?” என்று கருதியது, எதிலும் ஆதாயம் தேடும் பேராயம்!

“அர்சண்டினா நீதிமன்றத்தில் போஃபர்சு விவகாரத்தை எப்படியோ கவிழ்த்துவிட்டபோதிலும், நாளை அதை எதிரணி எழுப்பாமலா விடும்? அப்போது இவர் இருந்தால் ‘ஜோகிந்தர் சிங் கூறிய புகாரில் உண்மை உள்ளது! நடவடிக்கைஎடுங்கள்!’ என்று யாரேனும் முறையிட்டால்... இவர் நமக்கு எதிராகத் திரும்பமாட்டார் என்பது என்ன உறுதி?” என்றும் நினைத்தது. எதிலும் ஆதாயம்தேடும் பேராயம்! அதனால் ஒரு தலையாட்டி பொம்மைதான் வேண்டும் என்று இவர் பெயரை ஏற்க மறுத்தது! அதனால் இழப்பு இவருக்கு இல்லை! இழப்பு எல்லாம் நேர்மைக்குத்தான்! கைமாறு கருதாத கடமைக்குத்தான்!

இவருக்கு இரண்டாம்முறை பதவிதரக்கூடாது என்றவர்களுள் முதல்வர், ஒருமுறைகூட அதிகாரப்பூர்வமாகத் தலைமை அமைச்சர் பதவி ஏற்கமுடியவில்லையே என்ற வெறிகொண்ட சோனியா. மற்றவர், - இரண்டாமவர்” சொன்னபோதெல்லாம் வந்து என் புகழ்பாடி விட்டுச் செல்வதைத்தவிர இவருக்கு வேறு என்ன வேலை? சட்டமன்றப் பிணிப்பொன்விழாவில் வந்துபேசு என்று கூப்பிட்டால் நழுவுவதா?” என்று இன்னும் குமுறிக்கொண்டு இருக்கும் முதல்வர் மு.க. அவர்கள். இடதுசாரிகள் எதிர்க்கவில்லையா என்று கேட்கலாம் சிலர். அவர்கள் எதிர்ப்பு, கொள்கைகளின் அடிப்படையில் இல்லை; சில பேரங்களின் அடிப்படையில்தான்! நம்மைமீறி யார் போய்விடுவார்கள் என்று நினைத்த பேராயம், இப்போது வகையாகச் சிக்கிக்கொண்டு திணறுகிறது! அதுவும் கலாம் அவர்கள் வரமுடியாமைக்கு இன்னோர் அடிப்படை!

கலாம் அவர்களைப் பொறுத்து நாம் பெருமைப்படுவது நாட்டுப் பற்றுக்காக மட்டும் இல்லை; நேர்மைக்காகவும் புகழ்கிறோம்! குடியரசுத் தலைவராகச் சிலர்வந்தபோது, அவரது குடும்பம் எல்லாம் குளுமானோடு அம்மாளிகைக்கே படைஎடுத்துவிடும்! கூடாரம் அடித்துவிடும்! ஆனால், தந்தை மறைவுக்குப்பின் தன்னை அண்ணனாக மட்டுமின்றித் தந்தையாகவும் வளர்த்த அண்ணனைக்கூட - பாசமே உருவான அண்ணனைக் கூட - பதவியேற்கும்போது மட்டும் நட்போடும் சுற்றத்தோடும் வருக என்றார். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தானே; பதவி ஏற்பைப் பார்த்தாயிற்றா - புறப்படுங்கள் என்று வழியனுப்பியவர் அப்துல்கலாம். ஆளுநர்கள் கூடச் சொந்தபந்தங்களை ஆடவிட்டு மகிழ்கையில், அகப்பட்டதைச் சுருட்டு என்று திரிகிற வேளையில், கலாம் தன் மரியாதையைக் காத்துக் கொண்டார். மதுரையில் ஒரு பேர்வழியிடம் பணம் சிக்கியது என்று காவல்துறை வேட்டைக்குப்போனால், ஓய்வு பெற்ற ஒரு காவல் அலுவலரே வந்து “இது அமைச்சர் பணம்! கை வைக்காதே- பணத்தின்மீதும் அவன் மீதும்!” என்று “சான்றிதழ்” படித்துள்ளார்.

இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கையில், “பதவி ஏற்க வந்தபோது (என் துணிமணி போன்றவை அடங்கிய) இரு பெட்டிகளோடு தான் வந்தேன்! அதேபோல இருபெட்டிகளுடன் தான் (தமிழ் மண்ணுக்குத்) திரும்புகிறேன்! என்று கலாம் கூறினார் என்றால்,

இவற்றைத் தவிர்த்து நான் எடுத்துச் செல்வன நான் என் காசுபோட்டு வாங்கியநூல்கள் தான் என்றும் கலாம் கூறினார் என்றால்,

“பிழைக்கத் தெரியாத மனிதன்!” என்று பேராயக் கூட்டம் வேண்டுமானால் கூறலாம். நீதி, நேர்மை, ஒழுக்கம் போற்றுவோர், இதற்காகவும் இவரைப்போற்றுவர்!

ஆம்! தமிழக முதல்வராகவே இருந்தார் அண்ணா! அவர் மறைந்தபோது அவர்வீட்டில் இருந்து ரூ.நூற்றுச் சொச்சம்தான் இருப்பு என்று காட்டியது வங்கிக் கணக்கு ஏடு! காமராசருக்கும் அந்தப் பெருமை கிடைத்தது! அத்தகுநேர்மையாளர் என்ற புகடிந இப்போது கலாமுக்கும் கிடைத்து உள்ளது! தமிழ் மண்ணின் மானத்தை இவர்களாவது காக்கிறார்களே!

தனிக்கட்டையாகவே இவர் வாழ்வும் போகிறதே என யாரும் எண்ணவேண்டாம்! இவர் குடும்பம் நடத்திப் பொலபொலவெனப் பிள்ளைகளைப்பெற்றுப் போடவில்லையே தவிர, பள்ளிப் பிள்ளைகள் எல்லாம் தன்பிள்ளைகள் என்று நினைத்தார் இவர். மற்றவர்கள் வெளியூர் சென்றால் எந்த முதலாளியைப் பார்க்கலாம் என்றிருந்திடும் வேளையில், இவர் பள்ளிகளையும், கல்லூரி மாணவர்களையும் தேடிச்சென்றுப் பார்த்தார். அவர்களுடன்ஆசிரியராக இல்லாமல் ஒரு பெரியப்பாபோல், ஒரு தாத்தாபோல் கலந்துரையாடினார். “உங்கள் நாடு முன்னேற நன்கு படியுங்கள்! நிறையக் கனவு காணுங்கள்! கனவுகளை நனவாக்குங்கள்! நாட்டை உயர்த்திப் பிடியுங்கள்!” என்று அறிவுரை கூறினார். அவைவெறும் அறிவுரை மட்டுமில்லை! நம்பிக்கை விதைகள்! இந்த விதைகளில் பற்பல மனித குலத்தின் மேன்மையைப் பேணும் ஆலாக மாவாக வேம்பாக வளர்ந்து தழைத்து நிழல் கொடுக்கும்! பலன் கொடுக்கும்! அவர் பெயரை என்றும் முழங்கும்!

ஆம்! கலாம் “முடியாது” என்ற சொல்லையே ஏற்கமாட்டார்; எதுவும் முயன்றால் முடியும் என்று நம்புவார் என்று - இன்றும் அவர் மாணவராகத் திகழும் ஏ.கே.ஜார்ஜ் (அண்ணா பல்கலைக் கழகம், கூறிய செய்தியை 21.7.2007 அன்று எக்ஸ்பிரசில் பார்த்தோம்! ஆம்! அரசியல்வாதிகளும், மதமௌடிகங்களும் மலிந்த இந்த நாட்டை, கலாம் விரும்புவது போல் 2020 இல் வல்லரசாக்கமுடியுமா என்று தயங்க வேண்டாம்! அவர் விதைத்த நம்பிக்கை விதைகள் குழந்தைகளைத் தருவாக்காதா? நாட்டின் திருவாக்காதா? முடியும்! முடியும்! இந்நிலை காணமுடியும், முயன்றால்!

ஆனால், முப்படைத் தலைவர் என்ற தகுதியை மற்றவர்கள் பெயருக்கு மட்டும்வைத்துக் கொண்டிருந்த இந்த நாட்டில், அப்படையினரோடு சேர்ந்து போர்வானூர்தியில் மின்னல் வேகத்தில் பறந்தவர் - ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கிக்கப்பலில் சென்று நம் வலிமையை மதிப்பிட்டவர் - பாகிஸ்தானும் சீனமும் மிரட்டிக் கொண்டிருக்கும் இமயக் கொடுமுடிக்கும் சென்று காலாட்படையினருடன் சராசரி மனிதனாய்க் கலந்து உரையாடியவர், இவர் ஒருவரே! இவர் ஒருவரே! அதற்காகவும் தமிழகம் பெருமைப்படலாம்!

கலாம் அவர்களே! நீங்கள் வருவீர்கள் என்று இராமேசுவரம் வீட்டை உங்கள் அண்ணன் திருத்தி வைத்துள்ளார்! அந்தப் பாசம்மிகும் அண்ணனைப் போய்க்காணுங்கள்; அவரோடு நாள் சில தங்குங்கள்! பின் அண்ணா பல்கலைக்கழகம் வந்து உங்கள் ஆராய்ச்சிகளைத் தொடருங்கள்! அண்ணன் பாசத்தை நாங்கள் அரசியலில் உணர்ந்ததுபோல், நீங்கள் குடும்பத்தில் உணர்ந்தவர்கள். இராமேசுவரம் அகலத் தொடர் வண்டிப் பாதையை நீங்கள் திறந்துவைத்து இருக்கவேண்டும். சிலர் சதியில் அது முடியாமல் போனது. ஆனால், அண்ணன்- தம்பி சந்திப்பை எதனாலும் தடுக்க முடியாது! சென்று அண்ணனைக் கண்டபின்பு அண்ணா பல்கலைக் கழகம் வாருங்கள்! வணக்கம்!
________________________________________________________

அப்துல் கலாம் அவர்களுக்கு சங்கொலி 03.08.2007 இதழ் மூலம் அளிக்கப்பட்ட வரவேற்பு...

காலம் பதில் சொல்லும்!















பால் தாக்ரே போர்க் குரல் எழுப்பி
பகை அணிக்குப் பச்சைக் கொடி காட்டியபோது
பச்சைத் தமிழா, நீ ஏன்
பாண்டிய மைந்தனைக் கொச்சைப்படுத்தினாய்!

அண்ணாவின் இதயத்தை
இரவலாகப் பெற்றதாகக் கூறிக்கொள்வோரே
இதுதான் உம் இன உணர்வா?

அண்ணா! அண்ணா! என்று
அடுக்கு மொழிபேசி, அரியணை ஏறி,
அன்னைத் தமிழ் மக்களை அடமானம் வைத்தவரே
அவமானம் இல்லையோ - காஞ்சி
அண்ணன் பெயர் உச்சரிக்க!

தமிழ், தமிழன் என்று தம்பட்டம் அடித்துவிட்டு
தமிழனைத் தலைகுனிய வைத்ததன்
மானம் இல்லாத தமிழ் இனத் துரோகியே!
பெண், பொன் என்று பிரதிபாவை
பெருமை பேசி, பேரணி நடத்திக் காட்டி

தமிழ் மண்ணில் உதித்திட்ட - அறிவுப்
பெட்டகத்தை அலட்சியப்படுத்திய
கொள்கையற்ற கொற்றவரே!
கோடானுகோடி தமிழரை விற்றவரே!

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா - என்ற வீர வரிகளை
தகனம் செய்துவிட்டு
மராட்டி என்று சொல்லடா
மனம் மகிடிநந்து நில்லடா என்று
மார்தட்டி நின்றவரே!
மானம் இல்லையோ! - உமக்கு
மறத்தமிழன் என்று சொல்வதற்கு

காலம் கட்டாயம் பதில் சொல்லும்
கலாமை காயப்படுத்திய கயமைத்தனத்துக்கு!

___________________________________________________

இந்த கவிதை எஸ். ஜோயல் (தூத்துக்குடி மாவட்ட கழகப் பொறுப்புக் குழுத் தலைவர்) அவர்கள் சங்கொலி 03.08.2007 இதழில் எழுதியது.

விடைபெறுகிறேன்! - அப்துல் கலாம்

வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற வேண்டும். மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள்வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம் - ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு 24.7.2007 அன்று வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகடிநத்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் குறிப்பிட்டார்.

அவரது உரையில் இருந்து...

‘நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும், எண்ணங்களையும் இணைத்து, “நம்மால் முடியும்“ என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம்.




குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்து கொள்வேன்.



பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.



இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாடிநக்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.



அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.



மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.



அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.



அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக்கூடாது.



அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.



எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.
நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.



விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான - பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.



ஏழைகள்`எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.



மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது. மக்களின் வாடிநக்கைத் தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது. பழையமரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.



நம்நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும். படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும் - குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.



திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடி வரும் வகையில் நம்நாடு முன்னேற வேண்டும்.



சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்புத் தரப்பட வேண்டும்.



அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.



வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.



வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.



நாட்டின் 6 இலட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவுதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.



நமது இராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால் நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது. சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன். சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “சுகோய் - 30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய இராணுவ வீரர்களின் அறிவுத் திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்து கொண்டேன்.



ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல் - தொழில் நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க,“அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செடீநுதுதரும் இந்திய அரசின் திட்டத்தின் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர் - ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.



இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாச்சார வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.



25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள்வாழும் ஒரே நாடு இந்தியாதான். இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’.


____________________________________________________________


சங்கொலி 03.08.2007 இதழிலிருந்து...