Thursday, November 22, 2007

பாலாற்று விவகாரம் : மக்களை ஏமாற்றும் தமிழக அரசு - வைகோ பேட்டி

முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும், பாலாற்று விவாகாரத்திலும், மத்திய அரசின் நிலை துரோகம் விளைவிப்பதாகவே இருக்கிறது என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூரினார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூரியதாவது:

ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே அணை கட்ட இருப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கோரி ம.தி.மு.க சார்பில் டிசம்பர் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் வைகோ தலைமையில் நடைபெறவுள்ளது.

பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கிறது என்று அ.இ.அ.தி.மு.க, பா.ம.க, ம.திமு.க ஆகிய கட்சிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தன. ஆனால் "ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை" என்று ஒரு அமைச்சர் கூறினார். "பாலாற்றில் தான் தண்ணீரே வரவில்லையே அதைபற்றி நாம் ஏன் கவலைபட வேண்டும்?" என்று மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.

பாலாற்றின் விவகாரத்தில் ம்த்திய அரசு எங்களை ஏமாற்றுகிறது. மத்திய அரசு எங்களுக்கு துரோகம் விளைவிக்கிறது. கெரள மாநில அரசு முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

கேரள மாநில அமைச்சர் ஒருவர் முல்லை பெரியாறு அணையையும் உடைப்போம் என்று கூறுகிறார். நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டுமானால் ஒரு மாநிலத்திற்கும் மற்றொறு மாநிலத்திற்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.

ஆனால் முல்லை பெரியாறு விவாகரத்திலும், பாலாற்று விவகாரத்திலும், மத்திய அரசின் நிலை துரோகம் விளைவிப்பதாகவே இருப்பதால், எப்படி மத்திய அரசால் இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும்?

தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்ந்து நிலவுகிறது. நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து, கூலி படையினர்கள் மூலம் கொலை, கொள்ளைகள் அதிகமாகிவிட்டன. இதற்கெல்லாம் தமிழக அரசும், தமிழக முதல்வரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது : வைகோ

சென்னை, நவ. 21 மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது; அவ்வாறு நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரியுள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வைகோ: ""மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயம் என்கிற பெயரால் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கிராமப்புறச் சேவை கட்டாயம் ஆக்கப்படும் என்று சொல்லி, மருத்துவப் படிப்பை மேலும் ஓராண்டு நீட்டிப்பது என்பது ஏதோ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புறச் சேவையை எதிர்ப்பது போலவும், கிராமங்களில் பணியாற்றத் தயங்குவதைப் போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிக்கிறது.

மருத்துவப் படிப்பு ஓராண்டு நீட்டிப்பு என்கிற நிலை இல்லாமல், ஏற்கெனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓர் ஆண்டு கிராமப்புறச் சேவை செய்ய மாணவர்கள் தயாராக உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற பிற்பட்ட -தாழ்த்தப்பட்ட மாணவர்களும், நகரங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களும் பல்வேறு காரணங்களால் தற்போதைய ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பையே குறித்த காலத்தில் பயின்று மருத்துவராக ஆக முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மேலும் ஓராண்டு படிப்பை நீட்டிப்பது அவர்களின் மீது சுமையை ஏற்றுவதைப் போல ஆகும்.''