Tuesday, January 29, 2008

வைகோ உயிரை ராஜீவ் காந்தி காத்தாரா?

திங்கள்கிழமை, ஜனவரி 28, 2008

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.

இன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

வைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

அவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2008/01/28/tn-vaiko-owes-his-life-to-rajiv-gandhi-congress.html

Monday, January 14, 2008

பொங்கல் : வைகோ வாழ்த்து!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொங்கல் புத்தாடைக்கு வழி இன்றி, வீட்டுக்குப் புதுச் சுண்ணாம்பு பூசக் காசு இன்றி, அவதிப்படும் அவலம். மின் வெட்டாலும், உரத் தட்டுப்பாட்டாலும், பயிர்க்கடன் வழங்காகக் கொடுமையாலும், தங்கள் விளைபொருளுக்கு லாபகரமான விலை இன்றியும் துயர்ப்படும் விவசாயிக்கு, இந்தத் தைத்திருநாளுக்குப் பின்னராவது, வேதனை தீரட்டும் விடியல் உதிக்கட்டும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும் இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: வைகோ

சென்னை, ஜன. 13: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை.
அலங்காநல்லூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டில், காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை -வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக் காளையர் காயமடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் எந்த வீரப் போட்டியிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.

இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேற்கத்தியக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்றன. இன்றைய சூழலில், தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியது. இதன் விளைவாகவே தைப்பொங்கல் பண்டிகை வேளையில் இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: வைகோ கண்டனம்

சென்னை, ஜன. 13: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரதமருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தனுஷ்கோடி அருகில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்பவர் குண்டுக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Friday, January 11, 2008

வைகோ உண்ணாவிரதம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு


துத்துக்குடி : கோவில்பட்டியில் நடந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் வைகோ உற்சாகமடைந்தார்.
தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு போன்றவற்றை கண்டித்தும் , நெல்லுக்கு குவிண்டாலுக்குரிய விலை வழங்கவேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துõத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க., சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்திற்காக இனாம்மணியாச்சி ரோட்டில் கோட்டை முகப்பில் வளைவுடன் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 9 மணிக்கு துவங்குவதாக இருந்த உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ காலை 8.30 க்கே வந்துவிட்டார்.உண்ணாவிரதத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லை சத்யா, மாவட்ட செயலர்கள் துõத்துக்குடி ஜோயல், நெல்லை சரவணன், நெல்லை மாநகர செயலாளர் நிஜாம், கோவை மாரியப்பன், திருச்சி நடராஜன், மதுரை பூமிநாதன், ராமநாதபுரம் நென்மேனி ஜெயராமன், விருதுநகர் சண்முகசுந்தரம், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், வடசென்னை ஜீவன், கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், சிவகாசி எம்.பி.,ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சிவகாசி ஞானதாஸ், விருதுநகர் வரதராஜன், திருமங்கலம் வீரஇளவரசன், வாசுதேவநல்லுõர் சதன்திருமலைக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் உண்ணாவிரத பந்தல் போதாமல் அருகருகே புதிய பந்தல்கள் அமைக்கப்பட்டன. அதிலும் இடம் கிடைக்காமல் எதிரே இருந்த பாலத்தின் கீழ் நிழலில் தொண்டர்கள் அமர்ந்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். வைகோ உற்சாகமடைந்து தொண்டர்கள், நிர்வாகிகளை எழுந்து நின்று வரவேற்று உட்கார வைத்தார்.


தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து கோவில்பட்டியில் ம.தி.மு.க.,நடத்திய உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது:மின்வெட்டினால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துதரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் இருக்கிற சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லை. மின்நிலையங்களை முறையாக பராமரிக்காததாலும் திட்டமிட்டு செயல்படாததாலும் மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பாததாலும்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.துõத்துக்குடி ஸ்பிக், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் உரம் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது வந்துள்ள யூரியாக்களை பயன்படுத்தினால் பயிர் பாழாகிவிடுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயிகள் என வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த ஆண்டு திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் நிகழஉள்ளன இவ்வாறு வைகோ பேசினார்.