Saturday, December 29, 2007

வைகோ எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளி கட்டி பரிசு


சென்னை: "புத்தாண்டில், பார்லிமென்ட் தேர்தல் வரும்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டிஅவருக்கு எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளிக் கட்டிகள் வழங்கும் விழா பொதுக் கூட்டம் தென் சென்னை ம.தி.மு.க., சார்பில் வேளச்சேரியில் நடந்தது. மாவட்டச் செயலர் மணிமாறன் தலைமை வகித்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய தராசில் வைகோ உட்கார வைக்கப்பட்டார். இன்னொரு தட்டில் அவரது எடைக்கு இரு மடங்கு வெள்ளிக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டன. வைகோ 25 முறை சிறை சென்றதை நினைவு கூறும் வகையில் அவருக்கு 25 சவரன் தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வைகோ பேசியதாவது:

எனக்கு வெள்ளி, தங்கம் தரும் விழாவில் பங்கேற்க மறுத்தேன். ஆனால், மணிமாறன் போன்ற தம்பிகள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக ஒப்புக் கொண்டேன். இங்கே பேசியவர்கள் எனக்கு எடைக்கு எடை தங்கம், கோமேகம் தருவதாக சொன்னார்கள். அதையெல்லாம் நான் விரும்புவதில்லை. நான் தங்கத்தை அணிவதில்லை. எனது பொது வாழ்க்கையை பாராட்டி தராசில் உட்கார வைத்தீர்கள். என்னை பொருத்தவரை உங்கள் இதயத்தில் நான் அமர்ந்ததாக கருதுகிறேன். உங்களுக்கு என் உயிர் உள்ள வரை அன்பும் பாசமும், உழைப்பும் மட்டும் தான் தரமுடியும். இப்போது, பதவிகள் உங்களுக்கு தரமுடியாமல் இருக்கலாம். காலம் கருணை காட்டும். நமக்கும் காலம் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும். தமிழர்களின் நலம் காக்கும் கொள்கையிலும், நீதி நிலைநாட்டுவதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கடந்த 13 ஆண்டுகளாக பல துன்பம், துயரத்தை கடந்து வந்து விட்டோம். பதவிகள் நிரந்தரமான புகழை தராது. தியாகம் மட்டும் நிரந்தரமான புகழை தரும். புத்தாண்டில் நிச்சயம் தேர்தல் வரும். அதில் தி.மு.க., ஆட்சி துõக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.

தலைமை நிலையச் செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், துணைப்பொதுச்செயலர் மல்லை சத்யா, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், பகுதி செயலர் சு.செல்வபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை பெண்களுக்கு ஐந்து கிலோ அரிசி பைகள், 500 பெண்களுக்கு இலவச புடவைகள், பத்து ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள், தையல் மிஷின்கள் ஆகியவற்றை வைகோ வழங்கினார்.

திருப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்ற மதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவை, டிச. 28: திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கவுன்சிலர்கள் கோரியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர்கள் சிவபாலன், தம்பி கோவிந்தராஜ், சாந்தாமணி, கலாமணி சுந்தரம், பரமேஸ்வரி சண்முகம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தின் நகலை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் முபெ சாமிநாதன், ஆட்சியர் நீரஜ் மித்தல் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக சிவபாலன் தெரிவித்தார்.

திருப்பூர் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

விரைவில் தேர்தல் நடைபெறும்: வைகோ பேச்சு

சென்னை, டிச.29-: மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வரும் என்று வைகோ கூறினார்.

தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவின் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பாராட்டி அவருடைய எடைக்கு இருமடங்கு வெள்ளிக்கட்டிகள் பரிசளிக்கும் விழா வேளச்சேரியில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க. தமிழக அரசியலில் இருந்து அழிக்க முடியாதது என்று நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த தங்கசங்கிலியும், வெள்ளிக்கட்டிகளும் ம.தி.மு.க. நிதிக்கணக்கில் வைக்கப்படும். கட்சி தொண்டர்களின் இந்த உழைப்புக்கு என் ஜீவன் இருக்கும் வரை என்னுடைய உழைப்பு, பாசம், அன்பை தருகிறேன்.

தமிழகத்தில் இருக்கும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஒரு பக்கம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை அச்சுறுத்துகிறது. அதற்கு தீர்வு உண்டா? அந்த பிரச்சினையில் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். பாலாறு, காவிரி பிரச்சினையிலும் தமிழர்களின் உரிமையை காவுகொடுத்து விட்டார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். செஞ்சோலை என்ற இடத்தில் 61 குழந்தைகள் துடிக்க, துடிக்க இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இந்த கொடுமைகளுக்கு பிறகும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று சொன்னோம். ஆனால் கையெழுத்து போடாமலேயே ராணுவ உதவிகளை, ரேடார் கருவிகளை வழங்கி இருக்கிறார்கள்.

இந்திய கடற்படை தளபதி, தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் தாக்கியதே கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் தடவை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு வேவு பார்க்கிறது. ஐ.நா சபையின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது வெட்கக்கேடான விஷயம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும். இந்த இருள் விலக வேண்டும். 2008 கோடை மாதத்தை மத்திய அரசு தாண்டாது. கூட்டணிக்குள்ளும் குத்துவெட்டு தொடங்கி விட்டது. இந்த அரசுகள் கவிழும். அ.தி.மு.க.வுடன் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்க தயாராவோம்.
இவ்வாறு வைகோ பேசினார்.

Saturday, December 8, 2007

முல்லைப் பெரியாறு: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

மதுரை: திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இன்று மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 800க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மதுரை, தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் என். சேதுராமனும் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது,

தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மின்சார வெட்டு மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.

தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மூலம் இயங்க வேண்டியிருப்பதால் யூனிட்டுக்கு ரூ. 4.50 செலவிட வேண்டிய தொழிற்சாலைகள் ரூ.15 செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மின்சார நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை 3 மாதங்களுக்கு முன்னரே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்துக் கூறி தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்று ஆற்காடு வீராசாமி ஓங்கி கூறினார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி இன்னமும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஆடம்பர விழாக்கள் மூலம் மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது.

டை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களின் விலை அதிகமாகி கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உரங்களை விவசாயிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மின்வெட்டை கண்டித்தும், விவசாயிகள் நெல்விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்கக் கோரியும், உர விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மதிமுக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2007/12/07/tn-power-wastage-for-dmk-functions-vaiko.html

Thursday, November 22, 2007

பாலாற்று விவகாரம் : மக்களை ஏமாற்றும் தமிழக அரசு - வைகோ பேட்டி

முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும், பாலாற்று விவாகாரத்திலும், மத்திய அரசின் நிலை துரோகம் விளைவிப்பதாகவே இருக்கிறது என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூரினார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூரியதாவது:

ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே அணை கட்ட இருப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கோரி ம.தி.மு.க சார்பில் டிசம்பர் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் வைகோ தலைமையில் நடைபெறவுள்ளது.

பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கிறது என்று அ.இ.அ.தி.மு.க, பா.ம.க, ம.திமு.க ஆகிய கட்சிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தன. ஆனால் "ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை" என்று ஒரு அமைச்சர் கூறினார். "பாலாற்றில் தான் தண்ணீரே வரவில்லையே அதைபற்றி நாம் ஏன் கவலைபட வேண்டும்?" என்று மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.

பாலாற்றின் விவகாரத்தில் ம்த்திய அரசு எங்களை ஏமாற்றுகிறது. மத்திய அரசு எங்களுக்கு துரோகம் விளைவிக்கிறது. கெரள மாநில அரசு முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

கேரள மாநில அமைச்சர் ஒருவர் முல்லை பெரியாறு அணையையும் உடைப்போம் என்று கூறுகிறார். நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டுமானால் ஒரு மாநிலத்திற்கும் மற்றொறு மாநிலத்திற்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.

ஆனால் முல்லை பெரியாறு விவாகரத்திலும், பாலாற்று விவகாரத்திலும், மத்திய அரசின் நிலை துரோகம் விளைவிப்பதாகவே இருப்பதால், எப்படி மத்திய அரசால் இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும்?

தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்ந்து நிலவுகிறது. நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து, கூலி படையினர்கள் மூலம் கொலை, கொள்ளைகள் அதிகமாகிவிட்டன. இதற்கெல்லாம் தமிழக அரசும், தமிழக முதல்வரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது : வைகோ

சென்னை, நவ. 21 மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது; அவ்வாறு நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரியுள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வைகோ: ""மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயம் என்கிற பெயரால் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கிராமப்புறச் சேவை கட்டாயம் ஆக்கப்படும் என்று சொல்லி, மருத்துவப் படிப்பை மேலும் ஓராண்டு நீட்டிப்பது என்பது ஏதோ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புறச் சேவையை எதிர்ப்பது போலவும், கிராமங்களில் பணியாற்றத் தயங்குவதைப் போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிக்கிறது.

மருத்துவப் படிப்பு ஓராண்டு நீட்டிப்பு என்கிற நிலை இல்லாமல், ஏற்கெனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓர் ஆண்டு கிராமப்புறச் சேவை செய்ய மாணவர்கள் தயாராக உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற பிற்பட்ட -தாழ்த்தப்பட்ட மாணவர்களும், நகரங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களும் பல்வேறு காரணங்களால் தற்போதைய ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பையே குறித்த காலத்தில் பயின்று மருத்துவராக ஆக முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மேலும் ஓராண்டு படிப்பை நீட்டிப்பது அவர்களின் மீது சுமையை ஏற்றுவதைப் போல ஆகும்.''

Saturday, October 27, 2007

நாஞ்சில் சம்பத் மதுரையில் சிறையில் திமுக ரௌடிகளால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்

MADURAI: Marumalarchi Dravida Munnetra Kazhagam propaganda secretary Nanjil Sampath was allegedly assaulted in the Madurai central prison on Friday.

A few inmates accused in the Dinakaran newspaper attack case allegedly roughed him up around noon. Mr. Sampath was reportedly rescued by jail warders and moved to safety.

On the directions of the Madurai Bench of the Madras High Court, he was shifted to the Tiruchi central prison in the evening.

The issue was brought to the notice of the Madurai Bench at 4.30 pm on Friday. M. Ajmal Khan, counsel for Mr. Sampath, told a Division Bench comprising Justices F.M. Ibrahim Kalifulla and S. Palanivelu that a gang led by ‘Attack’ Pandi, prime accused in the Dinakaran newspaper attack case, had brutally attacked his client.

Stating that he would file a habeas corpus petition by Monday, counsel apprehended that Mr. Sampath’s life would be at peril during the weekend. Hence, he urged the court to issue suitable directions.

The Judges called for one of the Government Advocates and orally directed him to instruct prison officials to provide sufficient protection to the MDMK leader.

Mr. Sampath was arrested on charges of making derogatory remarks against Chief Minister M. Karunanidhi at a public meeting held in Batlagundu on Wednesday.

http://www.hindu.com/2007/10/27/stories/2007102757310100.htm

Friday, October 26, 2007

அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை, அக். 25: மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதற்கு கட்சியின் பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ம் தேதி இரவு நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது திமுக குண்டர்கள் உருட்டுக் கட்டைகள், இரும்புக் குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே நுழைந்து கூட்டத்தில் இருந்தவர்களை அடித்து, விரட்டி மேடையில் பேசிக் கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த மதிமுக நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.

ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் 45 நிமிஷம் நடத்திய இந்தத் தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை. வன்முறையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்தத் தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும் மாவட்டச் செயலர் செல்வராகவனும் காயமடைந்தனர். மாவட்ட அவைத் தலைவர் அருள்சாமி பலத்த காயமடைந்தார்.

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, ஊழல்களை, காவல்துறையினரின் அராஜகத்தை நாஞ்சில் சம்பத் விமர்சித்து வருவதால் இந்தத் தாக்குதலை திமுகவினர் திட்டமிட்டு நடத்தி உள்ளனர்.

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல, நாஞ்சில் சம்பத் மீது பொய் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல்லில் அவர் இருந்த இடத்துக்கு வந்து நள்ளிரவு இரண்டு மணி அளவில் கைது செய்து நிலக்கோட்டை நீதிபதி வீட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தி பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபோல் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் வன்முறைத் தாக்குதல் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டு மதிமுக துளியும் அஞ்சாது.

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்ட நாஞ்சில் சம்பத் மற்றும் பிற நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

-------------------------------------------
தினமணி செய்தி (26.10.2007)

-------------------------------------------

விகடன் தினசரி செய்தியில் 26.10.2007 அன்று வெளிவந்த வைகோ-வின் அறிக்கை:

அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது: வைகோ அறிக்கை

வத்தலக்குண்டு, அக். 26-: அமைச்சர்களை அவதூறாக பேசியதாக ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நேற்று முன்தினம் இரவு ம.தி.மு.க.வின் 14-ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது தி.மு.க. அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. சோடா பாட்டில்கள்,சேர்கள் வீசப்பட்டன. இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த சம்பவத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் காயம் அடைந்தனர்.


இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கணேசன் வத்தலக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதில் வத்தலக்குண்டு ம.தி.மு.க. பொது கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அமைச்சர்கள் மு.க.ஸ்டாலினையும், இ.பெரியசாமியையும் தரக்குறைவாக பேசினார். அப்போது டீ குடித்துக்கொண்டு இருந்த எங்கள் மீது ம.தி.மு.க.வினர் சேரை எடுத்து வீசியதில் நானும், பாண்டி, கண்ணன், சரவணன், தினேஷ் ஆகியோர் காயம் அடைந்துள்ளோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் செய்தார்.

அதன்பேரில் வத்தலக்குண்டு போலீசார் நாஞ்சில் சம்பத் மீது அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல்லில் தங்கி இருந்த நாஞ்சில் சம்பத்தை அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ந் தேதி நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்த போது தி.மு.க.வின் குண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக்குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே தழைந்து, நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவனும் காயம் அடைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் அருள்சாமி நெற்றியில் பலத்த காயமுற்று மயக்கம் அடைந்து மேடையில் விழுந்து இருக்கிறார். அவரது காயத்துக்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலையிலும் பலத்த காயம் அடைந்து தையல்போடப்பட்டுள்ளது.

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.வினர் கொடுத்த புகாரையும், பதிவு செய்ய மறுத்து விட்டனர். நாஞ்சில் சம்பத் வன்முறையை தூண்டியதாக அபாண்டமாக குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபோன்ற வன்முறை, போலீசாரின் அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, சிங்கம் என களத்தில் நிற்கும்.

எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி குண்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மதிமுக கூட்டத்தில் திமுக பயங்கர வன்முறை: தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நேற்று இரவு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது பொதுக்கூட்ட மேடையில் கல் மற்றும் பெட்‌ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் தாக்குதலுக்கு உள்ளான நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தட்ஸ்தமிழ் செய்தி (25.10.2007):

வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2007

வத்தலக்குண்டு: வந்தலகுண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குறித்து நாஞ்சில் சம்பத் கீழ்த்தரமாக பேசியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். மேடையில் இருந்த மதிமுக பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்நிலையில் கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாக மதிமுக மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற மதிமுக பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பல்வேறு குட்டித் தலைவர்கள் பேசி முடித்த நிலையில் இரவு 10 மணிக்கு மைக்கைப் பிடித்தார் நாஞ்சில் சம்பத்.திமுக அரசை தனது வழக்கமான தீப்பொறிப் பேச்சால் தாக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் கருணாநிதி குறித்து மிக மட்டமாக பேச ஆரம்பித்தார்.

இந் நிலையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கற்களை வீசியபடி கூட்டத்துக்குள் புகுந்தது. அவர்களை தடுக்க மதிமுகவினரும் அதிமுகவினரும் முயன்ற நிலையில் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்துக்குள் பெட்ரோல் நிரப்பட்ட பாட்டில்கள் எரிந்தபடியே வந்து விழுந்து வெடிக்கவே மதிமுகவினரும் அதிமுகவினரும் கலைந்து ஓடினர்.

அடுத்தபடியாக அங்கு கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்து எரிந்த அந்த கும்பல், நாற்காலிகளையும் தூக்கி வீசியது. கூட்டம் அலறியடித்துக் கொண்டு கலைந்து ஓடிய நிலையில் மேடையில் ஏறிய அடாவடிக் கும்பல் மாவட்ட அவைத் தலைவர் அருள் சாமியை தலையில் அரிவாளால் வெட்டியது.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் சரிந்தார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டு, அனைவருக்கும் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதில் நாஞ்சில் சம்பத், மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர்.

இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர்களையும் தரக்குறைவாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தலகுண்டு திமுகவினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் லாட்ஜில் தங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இரவோடு இரவாக ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2007/10/25/tn-mdmk-leader-nanjil-sampath-arrested-dindigul.html

--------------------------

மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது பின் வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன:
நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்)...
திமுக தலைவர் மு. கருணாநிதி சுப்ரீம் கோர்ட் தடையையும் மீறி சட்ட விரோதமாக பந்த் நடத்தினார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிமன்ற தடையையும் மீறி சட்டத்திற்க்கு உட்பட்ட 'சனநாயக(?!)' கடமையாம், ஆனால் பிற கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுவதாகுமாம். அப்பாவி மக்களுக்கு அமைதியாக அவர்களின் பிரச்சனையை விளக்கினால் சட்டவிரோதமா? வாழ்க சனநாயகம்.

148 (தாக்குதல் நடத்த சதி)...
தாக்குதல் நடத்த சதி செய்தார்களா? அதற்கு என்ன ஆதாரம்? தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

324 (காயம் ஏற்படுத்துதல்)...
மதிமுக-வினரை அரிவாளால் வெட்டியும், கற்களையும், பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியும் அட்டூழியம் செய்த திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்)...
கருணாநிதியும் திமுகவில் உள்ள இன்னபிற தலைவர்களை(?!) விடவா ஆபாசமாக பேசாததைவிடவா இவர் பேசிவிடப் போகிறார்?

506 (கொலை மிரட்டல்)...
யாருக்கு கொலை மிரட்டல் விட்டார்? சத்தமில்லாம காரியத்தையே முடிக்கின்ற இந்த காலத்தில் இப்படி எல்லாம் மேடை போட்டு பேசினாலும் சனநாயக முறையில் மேடையிட்டு சவால் விட்டால் அது மிகப்பெரிய தவறுதானே!

மதுரையில் 3 அப்பாவிககளைக் கொன்ற அழகிரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சிபிஐ விசாரணை என்ன ஆயிற்று? தா. கிருட்டிணனைக் கொன்ற கொடும்பாவி அழகிரியைக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? தனது பொருப்பற்ற பேச்சால் ஓசூரில் 2 அப்பாவித் தமிழர்கள் உயிருடன் எரிக்கப்படக் காரணமாக இருந்த கருணாநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இவர் பேசிய பேச்சால்தானே இரு தமிழ் உயிர்களை நாம் இழந்தோம். அவரின் பொருப்பற்ற பேச்சுக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? கண்துடைப்புக்காக அமைக்கப்படும் விசாரணைக் கமிசன்கூட அமைக்கப்படவில்லையே!

திமுகவினர் ஆட்சியில் இல்லாதபோதே இதுபோன்ற அநியாங்களைச் செய்வார்கள். இப்பொழுது கேட்கவும் வேண்டுமா?? என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வார்கள். வாழ்க ஜனநாயகம்...

ஞாநி பத்திரிக்கை சுதந்திரத்தின் அடிப்படையில் கருணாநிதியை விமர்சித்து எழுதினால், இவர்களின் முகமூடியை கிழித்து வீசினால்... கண்டனக் கூட்டமொன்றைக் கூட்டி ஞாநி பார்ப்பான், முற்போக்கு முகமூடியணிந்து எழுதும் பார்பன பரதேசி என்றும், ஞாநிக்குப் பார்ர்பனத் திமிர் அதிகம் என்றும், பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியான் என்றும் எனச் சாடுவர். அதனால் ஞாநி மனதளவில் பாதிக்கப்படுவார்.

ஆனால் நாஞ்சில் சம்பத்தை பபர்ப்பன பரதேசி என்று திட்ட முடியாதல்லவா! வெறுமனே பரதேசி எனத் திட்டினால் நாஞ்சில் சம்பத் அல்லது பிற மதிமுகவினர் அப்படி மனதளவில் பாதிக்கப்படுவார்களா? மாட்டார்களல்லவா!! அதனாலதான் இப்படித்தாக்குதல் நடத்துகின்றனர்.

இது இன்று நேற்றல்ல... மதிமுக ஆரம்பித்த காலம் முதல் பல இன்னல்கள் திமுகவிடமிருந்து வந்த வண்ணம்தான் உள்ளன.

அது என்னவோ வைகோ, மதிமுக, சங்கு (சங்கொலி) என்றாலே கலைஞருக்கும் திமுகவுக்கும் பயம் வந்து விடுகிறது. நிதானத்தை இழந்துவிடுகிறார்கள். 'ராமரை'க் கூட அனாயசமாக சமாளிக்கும் அவர்களுக்கு மதிமுகவினரைக் கண்டால் உள்ளூர ஒரு உதறல் இருக்கிறது. ஒரு வேளை கலைஞருக்காவே கூட இருந்த உழைத்ததால், கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதாலோ?

நான் முன்பு குறிப்பிட்டதப்போல ஞாநி கருணாநிதியை விமர்சனம் செய்து எழுதினால் "ஆரிய ஞாநி", "பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியார்" என கண்டனக் கூட்டம் நடத்துவார்கள். பாவம் அவர்களால் நாஞ்சில் சம்பத்தை பார்ப்பான் என சொல்லி திட்ட இயலாது. அவர்கள் இயலாமையைக் காட்ட இப்படித்தான் எதாவது செய்து தாக்குதல் நடத்துகிறார்கள். நடத்தட்டும்... நடத்தட்டும்... இது இவர்களுக்கு மதிமுக-வின் வளர்ச்சிமேல் உள்ள பய உணர்வையே காட்டுகின்றது.

இது குறித்து இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tuesday, October 23, 2007

ம.தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு

தி.மு.க.,வில் இருந்து 94ம் ஆண்டு வெளியேற்றப்பட்டதும் ம.தி.மு.க., என்ற கட்சியை துவக்கி தொடர்ந்து கட்சியை நடத்தி வரும் வைகோ, 14 ஆண்டுகளாக பல்வேறு தோல்விகளை தாங்கிக் கொண்டு தன்னுடன் இருக்கும் தொண்டர்களை புகழ்ந்து தள்ளுகிறார். இத்தனை ஆண்டுகளாக நிறைய துன்பங்களை அனுபவித் துள்ள ம.தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். "தமிழக அரசியலில் எங்களுக்கும் ஒரு "இன்னிங்ஸ்' கண்டிப்பாக உண்டு' என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

அ.தி.மு.க.,வுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் கொண்டுள்ள கூட்டணி எப்படி உள்ளது?
இரண்டு கட்சியினரிடமும் பரஸ்பரம் மதிப் பும், மரியாதையும், நல்லெண்ணமும் உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா முதல் தொண்டர்கள் வரை எல்லா மட்டத்திலும் நெருக்கம் உள்ளது. பரஸ்பர அன்பும் மதிப்பும் கட்சிக்கு வலுவூட்டுகிறது. எங்களது கட்சியின் தனித்தன்மையை சமரசம் செய்து கொள்ளாமல் கூட்டணி நீடித்து வருகிறது.

நீங்கள் இடம்பெற்றுள்ள மூன்றாவது அணி எந்த நிலையில் உள்ளது?
மூன்றாவது அணியில் தற்போது செயல்பாடுகள் இல்லை. இந்த அணியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.,வின் நிலை தான் ம.தி.மு.க.,வின் நிலை.

காங்கிரஸ் அல்லது பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எப்படி பார்லிமென்ட் தேர்தலை சந்திப்பீர்கள்?
மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்ற நிலை இனிமேல் எந்தக் காலத்திலும் இருக்காது. மாநிலக் கட்சிகளின் ஆட்சி தான் அமையும். அல்லது மாநிலக் கட்சிகளின் தயவில் தான் மத்தியில் ஆட்சி அமையும். நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற தேசிய கட்சி எதுவுமே இல்லை. தேசிய கட்சிகளின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, தேசிய கட்சிகளை சார்ந்து தான் அரசியல் உத்தியை வகுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மத்திய அரசு கவிழும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?
இப்போதும் சொல்கிறேன். அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் வரும். குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்காக மத்திய அரசு கவிழாது என்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். காங்கிரசுக்கு ஐந்தாண்டுகள் ஆதரவு அளித்துவிட்டு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தேர்தலை சந்திக்க முடியாது. எனவே, இடையிலேயே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவது குறித்து?
ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வி அடைந் தார்கள். இப்போது கட்சியில் ராகுலை முன்னிலைப்படுத்துவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து?
சுனாமி நிவாரணப் பொருட்களை அவர் அனுப்பியுள்ளார். அவர் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் பிணையில் விடுதலை ஆவதற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்தது மகிழ்ச்சி. ஆனால், இதே நிலைப்பாட்டை ம.தி.மு.க., அமைப்புச் செயலர் கைது செய்யப்பட்ட போது போலீசார் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தது பழிவாங்கும் போக்கு.

இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர் களுக்கு இரண்டு மாநிலங்கள் ஒதுக்கி இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்து உள்ளதே?
இது வெறும் கானல் நீர். தமிழர்களுக்கு உரிய உரிமைகளை 50 ஆண்டுகளாக கொடுக்காமல் இலங்கை அரசு மறுத்து வருகிறது. எனவே, இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியம் இல்லை. தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை இனவாத அரசு ஈடுபட்டு வருகிறது. ஐ.நா., மனித உரிமைக் குழு அலுவலகம் அமைக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இந்த துரோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை ஏன்?
எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஆடம் பரத்தில் விருப்பம் இல்லை. கட்சியின் பிறந்த நாள் தான் கொண்டாடப்பட வேண்டியது. கட்சி தான் நிரந்தரம். நான் நிரந்தரம் இல்லை.

பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்குவது ஏன்?
பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு கட்சி எல்லைகளை மறந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி உள்ளேன். அனைவரும் மெச்சுகிற அளவுக்கு என்னால் பணியாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளேன். பார்லிமென்ட் தேர்தலில் குறைந்த இடங்கள் கிடைத்ததால் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் வெளியில் இருந்தே பணியாற்றலாம் என்ற எண்ணத்தில் போட்டியிடவில்லை. நான் போட்டியிடாதது அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக பதவிக்கே வர மாட்டேன் என்று சொல்லவில்லை. மக்கள் எனக்கு கொடுக்கும் கடமையை செய்வேன். அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்துப்படி முடிவெடுக்கப்படும். இவ்வாறு வைகோ பதிலளித்தார்.

இந்திய அரசின் துரோகத்துக்கு கருணாநிதியே பொறுப்பு

* இலங்கைக்கான ஆயுத உதவியை சாடுகிறார் வைகோ

இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி ஈழத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு செய்யும் துரோகத் தனத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியே பொறுப்பேற்க வேண்டுமென ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர்த் தளபாடங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது குறித்து வைகோ மேலும் தெரிவித்துள்ளதாவது;

"இலங்கையரசுக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இத்துரோகத்தனத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர்களுக்கு இரண்டு மாநிலங்களை ஒதுக்கி இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனக் கூறப்படுவதெல்லாம் வெறும் கானல் நீர். தமிழர்களின் உரிமைகளை கொடுக்க முடியாதென 50 ஆண்டுகளாக இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியமானதல்ல.

தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கக் கூட அந்த அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் கூட இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களை படுகொலை செய்யவே பயன்படப் போகின்றன.

எனவே இந்திய மத்திய அரசின் இவ்வாறான துரோகத்தன செயல்களை தட்டிக் கேட்காது, தடுக்காது மௌனம் காக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளே குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும்" தெரிவித்துள்ளார்.

Tuesday, October 16, 2007

என் சவாலுக்கு என்ன பதில்? - வைகோ

அறைகூவல் விடுவது, அதனை நிருபிக்காவிட்டால் அரசியலை விட்டே விலகுகிறேன் எனச் சவால் விடுவது எனக்கு வழக்கம் அல்ல. வாடிக்கையும் அல்ல. அப்படிச் சவால் விடுவதெல்லாம் கலைஞர் கருணாநிதி அவர்களுக்குக் கைவரப் பெற்ற கலை என்பதை நாடு அறியும். அப்படியானால், ஏன் இப்போது அறைகூவல் விடுத்தேன்? முதல் அமைச்சருக்குச் சவால் விடுத்தேன்? வரலாற்று ஏடுகளில், காலப் பெட்டகத்தில், இந்நாள் முதல்வர் கலைஞர் அப்பட்டமான பொய்களைத் திட்டமிட்டுப் பதிவு செய்வதும், தான் பாடுபடாத, பணி ஆற்றாத ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடி, பொய்யான புகழைச் சூடிக்கொள்ள முனைவதும், வருங்காலத் தலைமுறையினருக்குப் பொய்களே உண்மை ஆகும் விபரீதம் நேரும்: ஆதலால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்த உண்மைகளை நிலைநாட்டவே, நான் அறைகூவல் விட நேர்ந்தது.

செப்டெம்பர் 30 ஆம் நாள் சென்னையில் நாம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பேசியது இதுதான்: “சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அண்ணாவின் கனவுத் திட்டம். அது இந்த நாட்டுக்குத்தேவை என்று, அந்தத் திட்டத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களை அறிவிக்க வைத்த இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். நான் கேட்கிறேன்: ஏதோ இதற்காகவே அவதரித்ததைப்போல் ஊர் மக்களிடம் பேசுகிற முதல்வர் அவர்களே, நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது, இந்த சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்று நீங்கள் தில்லிக்குப் போடீநு எந்தப் பிரதமரிடமாவது பேசியது உண்டா? கோரிக்கை வைத்தது உண்டா? நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவில்தான் அரசு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தி.மு.கழகத்தின் 25 எம்.பி.க்களின் தயவில்தான் பிரதமர் இந்திரா அரசு நடந்தபோது, அண்ணாவின் கனவு என்று இப்போது சொல்கிறீர்களே, அதைப் பற்றி பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் சொன்னீர்களா? வற்புறுத்தினீர்களா?

1971 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடன் இருந்து தேடிக்கொடுத்த வெற்றியின்
காரணமாக, மீண்டும் முதல்வர் ஆனீர்களே, அப்போது பிரதமரைச் சந்தித்துக் கேட்டீர்களா? ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரிடத்தில் பேசினீர்களா? அதற்குப்பிறகு வி.பி.சிங் பிரதமரானபோது திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அமைச்சர் அவையில் பங்கு ஏற்றதே, அந்தக் காலகட்டத்தில், அவரைச் சந்தித்து இந்தத் திட்டம் வேண்டும் என்று கேட்டீர்களா? நரசிம்மராவ் அவர்களிடம் பேசினீர்களா? தேவே கௌடா பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அதிலும் பங்கு ஏற்றீர்களே, அவரிடத்தில் பேசினீர்களா? ஐ.கே. குஜ்ரால் பிரதமராக ஆனாரே, அவரிடத்தில் பேசினீர்களா?

நீங்கள் எந்தப் பிரதம மந்திரியிடமாவது தில்லியில் சேது சமுத்திரக் கால்வாடீநுத் திட்டம் தமிடிநநாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசினீர்களா? நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது கேட்டு இருக்கிறீர்களா?

மறுமலர்ச்சிப் பேரணியில் வாஜ்பாய் அறிவிக்கப் போகிறார் என்று உங்களுக்கு ரகசியத் தகவல் தெரிந்தபிறகு, மாலை 5 மணிக்கு விழுந்து அடித்து ஓடி, ராஜ் பவனுக்குச் சென்று ஒரு மனு கொடுத்தீர்கள். அதற்கு முன்பு, மூன்று மாத காலமாக நான் இதே வேலையாக இருக்கிறேன், எப்படியாவது அறிவிக்க வைக்க வேண்டும் என்று. அதற்கு முன்பு நீங்கள் இந்தத் திட்டத்திற்காக வாதாடி இருப்பதாக நிருபித்து விட்டால் அரசியலை விட்டு விலகிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

ஒரு பயங்கரமான பொய்யை, நேற்றைக்கு முன்தினம் புதுக்கோட்டையில் அவிடிநத்துவிட்டு இருக்கிறார் பாருங்கள், உலகத்தில் வேறு எவனும் இவரிடம் கிட்டே வர முடியாது பொடீநு சொல்வதில். கோயபல்சாவது, ஒன்றாவது? நேற்றைக்கு முன்தினம் சொல்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றது, மன்மோகன்சிங் பொறுப்பு ஏற்றார். இரண்டே இரண்டு கோரிக்கைகளைத்தான் வைத்தேன். ஒன்று தமிடிந உணர்வுப்பூர்வமானது. இன்னொன்று தமிழர் வாxவு ஆதாரப்பூர்வமான சேதுக் கால்வாடீநுத் திட்டம்’ என்கிறார்.

நான் கேட்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அரசு அமைந்த அந்தக் காலகட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதற்கு, டாக்டர் மன்மோகன் சிங்குக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டு இருந்த அந்த நேரத்தில், அவர்கள் அதற்காக வேலையில் ஈடுபட்டு இருந்த வேளையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் நிறைவேற்றப்பட தயாரிக்கப்பட்ட நேரத்தில், அவர்களிடத்தில் சேதுக்கால்வாய்த் திட்டத்தைப் பற்றி நீங்கள் பேசியது உண்டா? புதுக்கோட்டையில் போய்ப் பொய் சொல்கிறீர்களே? இது உண்மை என்று நிருபித்து விட்டால், மீண்டும் சொல்கிறேன், ‘பொதுவாழ்வில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன்.’’ இதைத்தான்,அக்டோபர் ஒன்றாம் நாள் கடலூரில் வந்தியத்தேவன் இல்ல மணவிழாவிலும், அக்டோபர் நான்காம் நாள், கருரில் செய்தியாளர்களிடமும் நான் வலியுறுத்தினேன்.

என் குற்றச்சாட்டை மறுப்பதற்கு அவரிடம் ஆதாரம் இல்லை. என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், அவருக்கே உரிய அகட விகட சாமர்த்தியத்தால், முற்றிலும் திசைதிருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.

என் கேள்வி இதுதான். அறிஞர் அண்ணா மறைந்தபின்பு, 1969 முதல் 1998 செப்டெம்பர் வரை பல காலங்களில், கலைஞர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலங்களில், எந்தப் பிரதமரிடமாவது தில்லியில் சேதுக்கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று, எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசி இருக்கிறாரா?

1969 இல், 1971 இல், 1989 இல், 1996 இல் நான்கு முறை முதல்வரானபோது, இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை. தமிழர்களின் நுhற்றாண்டு காலக் கோரிக்கை யான அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டத்தை, நிறைவேற்ற வேண்டும் என்று, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. ‘அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிருபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’ என அறிவித்தேன்.

தமிழக முதல்வர் ஏழாம் தேதி அன்று விடுத்து உள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, ‘சேதுத் திட்டத்துக்காகக் கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாகக் கோரிக்கை வைத்ததை நிருபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்’ என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார். 2002 மே 8 ஆம் நாள், அவர் பிரதமர் வாஜ்பாடீநுக்கு எழுதிய கடிதத்தையும், 2002 அக்டோபர் 15 இல் எழுதிய கடிதத்தையும், சாட்சிக்கு
அழைத்து உள்ளார்.

இதனால், ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான், 1998 இல், பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002 இல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார். ஆனால், அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில்கூட, 98 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 15 இல், மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய அண்ணா-பெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில், பிரதமர் வாஜ்பாய், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும்’ என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.

இவரது அரசியல் வக்கிரப்போக்கை நான் குறிப்பிட்டதால், அவருக்கே உரித்தான புரட்டு வார்த்தைகளில், தற்போது அக்டோபர் 8 ஆம் தேதி அவர் விடுத்த அறிக்கையில், ‘பிரதமர் வாஜ்பாய், வைகோவின் நிகழ்ச்சியில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை அறிவித்ததாகச் சொல்லி உள்ளேனே? அதைக்கூட உணராமல், நுனிப்புல் மேய்ந்து உள்ளதாகச் சாடி உள்ளார்.

நான் கேட்டதெல்லாம், பிரதமர் வாஜ்பாய்க்கு 2002 இல் இவர் எழுதிய கடிதத்தில், பிரதமர் 98 ஆம் ஆண்டு அறிவித்த வாக்குறுதியைக் குறிப்பிட ஏன் மனம் இல்லை? என்பதுதான்.

ஆனால், சங்கொலியில், 2005 ஜூலை 8 ஆம் நாள், கழகக் கண்மணிகளுக்கு நான் எழுதிய கடிதத்தில், 1958 இல், தமிழகச் சட்டமன்றத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்துப் பேசியதை வரிவிடாமல் பதிவு செய்து இருக்கிறேன்.

1960 அக்டோபர் 9 இல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்துக்காக உரை ஆற்றிய அறிஞர் அண்ணா அவர்கள், 67 இல் முதல்வர் ஆனவுடன், இதற்காக மத்திய அரசை வலியுறுத்த, தமிழகம் முழுவதும் ‘எழுச்சி நாள்’ கொண்டாடினார். அண்ணாவின் கனவை நனவாக்க, எளியவனான நான், எடுத்த முயற்சிகள் எண்ணில் அடங்கா. எண்பதுகளில் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். கேள்விகள் தொடுத்து இருக்கிறேன்.

1998 ஜூலை 6 இல், நாடாளுமன்ற மக்கள் அவையில், இத்திட்டத்துக்காக உரை ஆற்றினேன். சேதுக் கால்வாடீநுத் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் என்று, பிரதமர் வாஜ்பாடீநு அவர்களை அறிவிக்கச் செடீநுவதற்காகவே, 1998 செப்டெம்பர் 15 இல், சென்னையில் மறுமலர்சசிப் பேரணி நடத்தினோம். நிகடிநச்சிக்குப் பிரதமரிடம் ஒப்புதல் பெற்ற நாள் முதல், நான்கு மாத காலத்தில் பலமுறை வாஜ்பாடீநு அவர்களைச் சந்தித்து, திட்டத்துக்காக வற்புறுத்தினேன். தொலைநோக்கும், உயர் பண்பும் கொண்ட வாஜ்பாய் அவர்கள், அறிவிப்பதாக உறுதி அளித்தார். அப்படியே அறிவிக்கவும் செய்தார்.

செப்டெம்பர் 15 இல் பிரதமர் இதை அறிவிக்கப் போவதாக நான் பலரிடமும் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், அதனை அறிந்துகொண்ட அந்நாள் முதல்வர் கலைஞர், அன்று மாலை, ஐந்து மணிக்கெல்லாம் ராஜ் பவனுக்குச் சென்று, இத்திட்டத்துக்காக மனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்து வைத்தார்.

தி.மு.க. மாநாடுகளிலும், பொதுக்குழு, செயற்குழுவிலும் இத்திட்டத்துக்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரிடத்தில் வலியுறுத்தும் கடமையில், முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி தவறினார்.

தொடக்கத்தில், ‘நாம் தமிழர் இயக்கத்’ தலைவர் சி.பா. ஆதித்தனார், காங்கிரசின் கே.டி. கோசல்ராம் குரல் கொடுத்த இத்திட்டத்தை நிறைவேற்ற, அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் வற்புறுத்தலால், அந்நாள் பிரதமர் பண்டித நேருவின் அமைச்சரவை, 1963 இல், இத்திட்டத்துக்கு ஒப்புதல் தந்து, பின்னர் இலங்கையின் எதிர்ப்பால் கிடப்பில் போட்டது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, 1986 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்கள் அவையில் கோரிக்கை விடுத்து உள்ளார். நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 இல் அமைந்தபோது, அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை, டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் தயாரித்தபோது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வற்புறுத்தி, எழுத்து மூலமாகக் கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செடீநுதேன்.

அசோகா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடந்தபோது, பிரணாப் முகர்ஜி அவர்கள் என்னிடம், ‘உங்கள் சேதுக்கால்வாய்த் திட்டம், அரசின் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது’ என்றார். இதனை நினைவில் வைத்துத்தான், 2005 செப்டெம்பர் 3 ஆம் நாள், எனது நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், ‘வைகோவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம்’ எனக் குறிப்பிட்டார்.

‘மத்திய அமைச்சரவையில் சேரப் போவது இல்லை’ என்று சென்னையில் அறிவித்த கலைஞர் கருணாநிதி, தில்லியில் ஒரு வாரம் முகாமிட்டதே, அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காகத்தான்.

ஆனால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இவர் சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை, இதுகுறித்து டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் பேசவும் இல்லை. ஆனால், மத்திய அரசு நிறைவேற்றப் போகிறது என்று கலைஞரிடம் நான் சொல்லவும் செய்தேன். இதற்குப் பின்னரே, கப்பல் போக்குவரத்துத் துறையைத் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கினார்.

ஆனால், அண்மையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நா கூசாமல், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாடீநுத் திட்டத்தை வற்புறுத்தியதாக, ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை, அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி, அவ்வாறு மன்மோகன்சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிருபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதல் அமைச்சர் கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில், இதற்குப் பதிலே இல்லை.

ஒருவர் உழைக்க, வேறு ஒருவர் அறுவடை செய்வது சுரண்டல் என்பதால், சேதுக் கால்வாய்த் திட்டத்திலும், முதல் அமைச்சர் கலைஞர் செய்த அரசியல் சுரண்டலை, பித்தலாட்டத்தை, வெளிப்படுத்தி, நடந்த உண்மை என்ன என்பதை வரலாற்றில் பதிவு செய்யவே நான் சவால் விடுத்தேன்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல, வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில், ஈடு இணையற்ற வல்லவர் கலைஞர் ஆவார். அதனால்தான், 2002 மே மாதம் 8 ஆம் நாள், பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக்குறித்து வலியுறுத்தி உள்ளேன்’ என்று, அப்பட்டமான ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.

--------------------------------
சங்கொலி (19.10.2007)

Tuesday, August 28, 2007

மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்

திருநெல்வேலி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது.
(http://thatstamil.oneindia.in/news/2007/08/17/vaiko.html). அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


"உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல" என நெல்லையில் வைகோ பேசினார். தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர. இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.
உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம் அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.

உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,தூரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான்.

எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது. இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.

செய்தி:
http://dinamalar.com/2007aug27/political_tn1.asp

Tuesday, August 21, 2007

'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்!

வைகோவின் ‘தேன் மலர்கள்’ வெளியீடு சென்னையில் எழுச்சிமிகு விழா!

வைகோ ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ‘தேன் மலர்கள்’ என்ற நூல் வடிவில் இராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான விழா 14.8.2007 செவ்வாய் அன்று சென்னை ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகர் அரங்கில் நடைபெற்றது. நாஞ்சில் சம்பத் விழாவுக்கு தலைமை ஏற்க, கலைப்புலி எஸ்.தாணு வரவேற்புரை ஆற்றினார். நூலை அருட்செல்வர் ந.மகாலிங்கம் வெளியிட, ‘கல்கி’ ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அப்துல்காதர், சுதா சேஷ்ய்யன், திரைப்படக் கலைஞர் பிரகாஷ்ராஜ், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளச்சேரி மணிமாறன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அபிதாசபாபதி அழகுத் தமிழில் தொகுத்து வழங்கினார்.

'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்:

‘தேன்மலர்கள்’ என்னும் இலக்கியச் செறிவுமிக்க நூலைப்படைத்துள்ள தலைவர் வைகோ அவர்களை தமிழ்த்தாய் வாடிநத்துகிறாள். தமிழ் ஈழம் வாழும்காலம் வரை வைகோ வாழவேண்டும். வைகோ ஆயுள் வளரட்டும். தமிழ் உலகு மீளட்டும்.
- பேராசிரியர் அப்துல் காதர்


தமிழ் காலத்தால் மூத்தது. உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. அத்தகைய தமிழுக்கு உரமூட்டக்கூடியவகையில் இலக்கியச் செறிவு மிகுந்த ‘தேன்மலர்கள்’ என்னும் இந்நூல் மணம் வீசுகிறது.
- அருட்செல்வர் ந. மகாலிங்கம்


கம்பனுக்கு ஒரு டி.கே.சி. கிடைத்ததைப்போல, அமரர் கல்கிக்கு வைகோ கிடைத்திருக்கிறார். ‘தேன்மலர்கள்’ படைத்த வைகோ நடமாடும் இலக்கியச் சுரங்கமாகத் திகழ்கிறார்.
- கல்கி ராஜேந்திரன்


இராகவ அய்யங்கார் அவர்களது ‘தமிழ் வரலாறு’ என்கிற நூல் கிடைக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த பலருக்கு உண்டு. டாக்டர் மு.வ.அவர்களது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்கின்ற நூல்கூட பல இடங்களில் கிடைப்பது இல்லை. ஆனால், வைகோ அவர்களது ‘தேன்மலர்கள்’ என்கிற நூல் அந்த ஏக்கங்களைத் தீர்த்துவிட்டது.
- டாக்டர் சுதா சேஷய்யன்


நல்ல குழந்தையைப் பெற்றவர்களை ஒருதலைமுறை பேசும்; கலைநயத்தோடு கட்டப்படும் ஒரு வீடு இரண்டு தலைமுறைகளுக்குப் பேசப்படும். நல்ல புத்தகத்தைப் படைத்தவரை மூன்று தலைமுறை பேசும். இந்தத்´ ‘தேன்மலர்கள்’ என்கின்ற புத்தகத்தைப் படைத்த வைகோ அய்யா அவர்களை எல்லாத் தலைமுறையும் பேசும்.
- நடிகர் பிரகாஷ்ராஜ்

Monday, August 20, 2007

கல்கி புகழ் விழா! வைகோ

தேனில் தோய்த்த பலாவாக, ஆகஸ்ட் 11, தலைநகர் சென்னையில், அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஏற்பாடு செய்த, கல்கி புகழ் விழா அமைந்தது. தியாகராய நகரில் விஜய மகாலில், மாலை சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது. கல்கி அவர்களின் புதல்வர் கி.இராஜேந்திரன் அவர்களும், கல்கி குடும்பத்தினரும் வந்து இருந்தனர். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாகக் கலந்துகொண்டனர். எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு, கல்கி விருது வழங்கினேன்.

எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள், கல்கியின் ‘தியாகபூமி’ நாவல் குறித்தும், பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள் கல்கியின் ‘அலை ஓசை’ நாவல் குறித்தும் உரையாற்றியபின்பு, கல்கியின் 'சிவகாமியின் சபதம்’ எனும்தலைப்பில் என் உரை அமைந்தது.

விழாத் தலைவர் விக்கிரமன் அவர்களின் பெருமுயற்சியில் நடந்தது இந்த விழா. இதற்கு உறுதுணையாக உழைத்தவர், ஆருயிர் இளவல் தஞ்சை உதயகுமார் ஆவார். தமிழ் சரித்திரநாவல்களைத் தீட்டியவர்களின் வரிசையில், முதல் இடம் பெறும். ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நாவலை எழுதிய வடலூர் வள்ளலார் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியோர் பெயர்கள் அனைத்தையும், இங்கிலாந்தின் வால்டர் ஸ்காட் உள்ளிட்ட மேலைநாட்டுச் சரித்திர நாவல் ஆசிரியர்கள் குறித்தும் முகப்பு உரையாகச் சொல்லி, விடுதலைப் போரில் மூன்று முறை சிறை சென்ற கல்கி அவர்கள், கால்களில் விலங்குக் காப்பும், சங்கிலியும் கட்டப்பட்டு, 14 நாள்கள் சிறையில் அடைபட்ட கொடுமையையும் சொன்னேன்.

கதர் இயக்கத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் மிக்கஈடுபாடு கொண்டு இருந்த கல்கி அவர்கள், 1947 இல் அன்றைய காலகட்டத்தில் அரசியலில், சமயங்களில் அவரது கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டு இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் படைப்பைக் குறித்து எவ்வளவு உயர்ந்த மதிப்புக் கொண்டு இருந்தார் என்பது, கல்கிக்குப் புகழ் மகுடம் சூட்டுவது ஆகும். இதோ, அண்ணா அவர்களைப் பற்றிக் கல்கி 1947 டிசம்பரில் கல்கி இதழில் கீழ்கண்டவாறு எழுதினார்.

‘தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட்ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒருகுரல் அழுவது வழக்கம். ‘நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு பெர்னார்ட்ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கேபோவது? திருடப் போக வேண்டியதுதான்’ என்றுசொல்வார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம். தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ஓர் இரவு எனும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. (திருச்சி இரத்தினவேல் தேவர் மண்டபத்தில், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி நாடகக்குழுவினர், அறிஞர் அண்ணாவின் ஓர் இரவுநாடகத்தை நடத்தினர். 15.11.1947 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குக் கல்கி தலைமைஏற்றார்.) பார்த்ததன் பயனாக, இதோ ஒரு பெர்னார்ட்ஷா தமிடிநநாட்டில் இருக்கிறார். கிப்சனும் இருக்கிறார். இன்னும் கால்ஸ் வொர்த்தியும்கூட இருக்கிறார் என்று தோன்றியது. நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிகவும் அரியது. அந்த ஆற்றல், திரு. அண்ணாத்துரையிடம் பூரணமாக அமைந்து இருக்கிறது என்பதை ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்.’’ என்று எழுதினார்.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ எனக்கூறிய அண்ணா அவர்கள், கல்கி அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'சரித்திர நவீனங்களின்பால், சமையல்கட்டுகளும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்’ என்றார்.

1932 ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை நேரத்தில் மாமல்லபுரத்துக் கடற்கரையில், அமர்ந்து இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி. அவர்கள், ‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்ட குறை வந்து தொட்டாச்சு’ எனக் கூறிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் கவிதை வரிகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 1300 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மாமல்லபுரத்தில், அற்புதமான சிலைகள் வடிக்கப்பட்ட காலமும், மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் பற்றிய எண்ணமும், அதனால் என் மனதில் எழுந்தகனவுகளும், 12 ஆண்டுகள் கழித்து ‘சிவகாமியின் சபத’மாக உருப்பெற்றது எனத் தெரிவித்த கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம், காதலும் வீரமும் தமிழர் மானமும், கலையும், சிகரத்தின் உச்சியில் ஒளிதந்த காட்சிகளின் உயிர் ஓவியம்தான் என்பதை இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சிக்கு வந்தோரில் பெரும்பாலோர், நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள். கடைசிவரை ஒருவர்கூட அசையவில்லை. ஈடுபாட்டுடன் கேட்டனர் என்பது பெருமிதம் அளிக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ உரையையும், ‘சிவகாமியின்சபதம்’ உரையையும் ஒரு நூலாக ஆக்கிட எண்ணிஉள்ளேன்.

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள்வளரட்டும்!

பாசமுடன்

வைகோ

இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி ஈழம் மலர்ந்திருக்கும்: வைகோ

செஞ்சி, ஆக.21: இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வைகோ பேசியது:

18 ஆண்டுகளுக்கு முன் வவுனியா காட்டில் கரும்புலிகளின் பயிற்சிக் கூடத்தில் மத்தியில் அமர்ந்திருந்தேன். இப்போது இங்கே கருப்புச் சட்டை அணிந்திருக்கும் பகுத்தறிவு இளைஞர்களின் மத்தியிலே அமர்ந்திருப்பது பழைய நினைவை எனக்கு ஏற்படுத்துகிறது.

30 ஆண்டுகளாக திமுகவை காத்து வளர்த்து வந்தேன். என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டது. இச்செய்தி அறிந்ததும் ஆயிரம் பாம்பு கடித்தது போலவும், ஒரு லட்சம் தேள் கொட்டியது போலவும் துடித்தேன்.

ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயுதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு முயல்கிறது.

தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன் சிங் அரசு. தமிழ் ஈழம் மலர்வதை உலகில் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தமிழர்களுக்கு தனி நாடு தர முடியுமா? என்று ஆலோசனை செய்து வருகிறேன் என்று இந்திரா பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது நமக்கு துரதிர்ஷ்டமாகப் போய் விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்நதால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்றார் வைகோ.

விழாவுக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மா.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர் மு.சுப்பிரமணி வரவேற்றார். தலைமைத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார்.

மாவட்டப் பொருளர் மா.சுப்பிரமணி, மாநிலக் கொள்கை விளக்கச் செயலர் மு.குமார், பேராசிரியர் அ.பெரியார், பாடகர் நா.காத்தவராயன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.ஏழுமலை உள்ளிட்ட மதிமுகவினர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டச் செயலர் டாக்டர்.இரா.மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.
---------------------------------------------------------------
நன்றி: தினமணி நாளிதழ் (21.08.2007)

MDMK to boycott local body polls

CHENNAI: The Marumalarchi Dravida Munnetra Kazhagam will boycott byelections to vacancies in various local bodies in the State, scheduled for September 5.

MDMK general secretary Vaiko, in a statement here on Saturday, said in the recently-concluded local body elections, the State Election Commission had failed to control violence in the State, especially in Chennai Corporation.

As the party felt that there would not be free and fair byelections as long as the present State Election Commissioner remained in the post, it decided to boycott the elections.

Sunday, August 19, 2007

MDMK says survival of UPA Govt a question mark


Tindivanam, Tamil Nadu, Aug 19 : Marumalarchi DMK (MDMK) General Secretary Vaiko today said the survival of the UPA Government at the Centre was a question mark in the context of the differences with the Left on the Indo-US nuclear deal.

Speaking to the press here, Mr Vaiko said ''the government had mortgaged India's sovereignty and self-respect on the 123 agreement with the US.

''Now, the Left, which supports the UPA Government at the Centre from outside, says its (UPA Government's) survial is its hands. We can now only wait and watch.'' Referring to charges being hurled frequently at the DMK Government in Tamil Nadu by its (DMK's) allies, particulary the PMK, Mr Vaiko said never in history had such things happened.

PMK Founder-Leader S Ramadoss' charges on exorbitant fee charged by higher educational institutions and illegal sandmining, though justified, remain unanswered by the government.

''Dr Ramadoss is right in making the charges for which the government has no answer,'' Mr Vaiko said.

இலக்கியங்களில் மனித உரிமைகள்: வைகோ

நண்பர்களே! ‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரியில் ஆற்றிய உரை பற்றி சங்கொலி 24.08.2007 இதழில் வைகோ எழுதிய கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வைகோவின் கடிதத்திலிருந்து.....
இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் நான் உரை ஆற்ற வேண்டும் என பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் என்.ராஜகுமார் அழைப்பு விடுத்து இருந்தார். ‘நடை பயிலும் முன்பே கொடை பயிலும் கொங்கு நாடு’ என்ற பெருமைக்கு உரிய அப்பகுதியின் சீர்மிகு நல்லமுத்துக் கவுண்டர்அவர்களும், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் தந்தையார் திரு.நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் அருந்துணையுடன், 1957 இல் தொடங்கிய இக்கல்லூரியின் பொன்விழாவின் நுழைவாயில்நிகழ்வாகக் கல்லூரித்தமிழ்த் துறையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் நான் பங்கு ஏற்றதாகும்.

ஆகஸ்ட் 7 ஆம் நாள் அன்று, காலையில் கோவை சென்ற நான், கோவை மருத்துவ மையம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வருகின்ற கழகப் பொருளாளர் ஆருயிர் அண்ணன் கண்ணப்பன் அவர்களைச் சந்தித்து அளவளாவிவிட்டு, பொள்ளாச்சி சென்றேன்

இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் பயிலும் இக்கல்லூரியில், அன்பு காட்டி ஆர்வத்துடன் கல்லூரிச் செயலர் எஸ்.கே.கல்யாணசுந்தரம் அவர்களும், முதல்வர் என்.ராஜகுமார் அவர்களும், பேராசிரியர்களும் என்னை வரவேற்க, நிகழ்ச்சி சரியாக பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியது. சிந்தனைக்குக் கிளர்ச்சி ஊட்டும் தலைப்பு. உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவதற்கு இடமும், அடிப்படை உரிமைகளாக உத்தரவாதம் ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படைக் கோட்பாடு அமைத்தவன் தமிழன். அதனால்தான்,
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்
என மிக அழுத்தமாகச் சொன்ன திருவள்ளுவரைச் சுட்டிக்காட்டி, காணார், கேளார், கால் முடமானோர், பேணா மாக்கள், பேசார், பிணித்தோர், பசி நோய் உற்றோர் அனைவரும் வருக’ என, துன்புறும் மக்களுக்கு அருமருந்தாக அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையை நினைவூட்டி, மணிமுடிவேந்தனை நோக்கி, ‘தேரா மன்னா’ என எரிமலையாய்ச் சீறி நீதி கேட்ட தென்தமிழ்ப் பாவை கண்ணகியின் புகழ் விளித்து, ‘நமனையும் அஞ்சேன்’ என்ற நாவுக்கரசரின் உரிமை முழக்கத்தை, எடுத்து இயம்பினேன்.

மனித உரிமைகளை நிலைநாட்ட எழுந்தவைதான், வரலாற்றின் மைல் கற்களான புரட்சிகள். ஒவ்வொரு புரட்சிக்கும், அந்த எரிமலையின் நெருப்புக் கர்ப்பத்தில் கனன்றவை இலக்கியங்கள்தாம்.

பிரெஞ்சுப் புரட்சி 1789:
கிரேக்கத்தில் சிந்தனைப் புரட்சியைத் தொடுத்தசாக்ரடீசின் வாழ்க்கையை அரியதோர் நாடகம் ஆக்கினான் வால்டேர்.

‘மனிதன் சுதந்திரமாகவே பிறக்கிறான். ஆனால், எங்கும் அவன் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான்’ என்ற ரூசோவும், வால்டேரும் தீட்டிய இலக்கியங்களான கதைகளில், நாடகங்களில் மனித உரிமைகளை நிலைநாட்ட ஊட்டப்பட்ட உணர்ச்சியைப் பட்டியல் இட்டேன். அந்தப் பிரெஞ்சுப் புரட்சியை ஓர் சரித்திர நாவல் இலக்கியமாகத் தந்தவன், இங்கிலாந்தின் கார்லைல்.

முதல் மனித உரிமைப் பிரகடனம் 1812:

அடக்குமுறைக்கு ஆளாகி, இரத்தம் சிந்தி உயிர்ப்பலியான, தொழிலாளர்களுக்காக, ஆவேசம்கொண்டு கவிஞன் ஷெல்லி தீட்டிய நெருப்புக்கவிதைதான் ‘அராஜகத்தின் முகமூடி’ (Mask of anarchy). நீங்கள் விதைக்கிறீர்கள்; எவனோ அறுக்கிறான், நீங்கள் செல்வத்தைத் தேடுகிறீர்கள்; எவனோ குவிக்கிறான், நீங்கள் நெய்கிறீர்கள்; எவனோ அணிகிறான். நீங்கள் வார்ப்பிக்கிறீர்கள்; அந்த ஆயுதங்களை எவனோ ஏந்துகிறான்.

இனிமேல், நீங்கள் விதையுங்கள்; எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள். செல்வத்தைத் தேடுங்கள்; எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்கவிடாதீர்கள், ஆடைகளை நெய்யுங்கள்; எந்தச் சோம்பேறியையும் உடுத்த விடாதீர்கள்.ஆயுதங்களை வார்ப்பியுங்கள்; நீங்களே ஏந்துவதற்காக! கவிஞன் ஷெல்லி, 1812 இல் எழுதியதுதான் ‘மனித உரிமைப் பிரகடனம்’ நீட்டியவாள் முனைக்கு அஞ்சி, மன்னன் ஜான் கையெழுத்து இட்ட மேக்னா கார்ட்டா (Magna Carta) மனித உரிமைச் சாசனம் வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உதித்ததுதான் ஷெல்லியின் பிரகடனம். அப்பிரகடனத்தை எழுதியதாள்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நீரோடைகளிலும், நதிகளிலும் வீசப்பட்டன. பலூன்களில் கட்டி அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் வெளியான பிரகடனம்தான், 1948 டிசம்பர் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம்.

ஷெல்லியின் பிரகடனத்தின் உட்பிரிவுகள் 31. ஐ.நா. பிரகடனத்தின் உட்பிரிவுகள் 30. இக்கவிஞனின்குரல் பட்டுத் தெறித்த இன்னொரு பிரகடனம்தான், மார்க்சும், எங்கெல்சும், 1848 இல் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’. ‘உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழக்கப் போவது எதுவும் இல்லை, விலங்குகளைத் தவிர’ என்று எழுந்தது அந்த முழக்கம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அமெரிக்க நாட்டில், அடிமை காரிருளில் தவித்த கருப்பு இன நீக்ரோக்கள், மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்ட காலம் அது. சகிக்கவே முடியாத இக்கொடுமையைக் கண்டு மனம் குமுறிய பெண்மணிதான் உலகப் பிரசித்திபெற்ற,
Uncle Tom’s Cabin எனும் அற்புதமான கண்ணீர்க்காவியம் தீட்டிய ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ இந்த நூலை எழுதிய ஆண்டு 1852. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1862 இல், அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், இந்த மனித உரிமை இலக்கியப்படைப்பாளியைப் பார்த்து, ‘நீங்கள்தானா அந்தப்பெண்மணி? இப்பொழுது நடக்கின்ற அமெரிக்க உள்நாட்டுப் போரே உங்களால்தானே’ என்றாராம். ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு செய்தி என்னதெரியுமா? அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இந்தப் புத்தகம், இங்கிலாந்துநாட்டில் அதிகப் பிரதிகள் விற்பனையான இந்தப் புத்தகம், இதைப்படிக்க நேர்ந்த வாசகர்களின் கண்களை அருவியாக ஆக்கிய இந்தப் புத்தகம், ‘நீக்ரோக்களின் அடிமை விலங்கை உடைப்பேன்’ என ஆபிரகாம் லிங்கன் சபதம் செய்யக் காரணமான இந்தப் புத்தகம், வழக்கமான எழுத்தாளர்கள் எழுதும் முறையில், முதல் அத்தியாயத்தில் தொடங்கி எழுதப்படவில்லை. இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைத்தான் ஹேரியட் அம்மையார் முதன் முதலில் எழுதினார். எழுதிவிட்டுத் தன்பிள்ளைகளிடம் வாசித்துக் காண்பித்தார். அதைக் கேட்டுப் பிள்ளைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.


ருஷ்யப் புரட்சி:
மாமேதை லெனினை மிகவும் கவர்ந்தது, ‘26 பேரும்அந்த இள நங்கையும்’ என்ற மாக்சிம் கார்க்கியின் நூல் ஆகும் என்று லெனினின் துணைவியார் குருப்ஸ்காயா குறிப்பிட்டு உள்ளார். ஈர நிலவறையில் நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய 26தொழிலாளர்களின் அவலத்தில் பங்கு ஏற்ற 16 வயது நங்கை தானியா கதைதான் அது. ருஷ்யப் புரட்சிக்குக் கருவாக அமைந்த இலக்கியங்களை விவரித்தேன்.

சீனப்புரட்சி:

‘நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முகிழ்க்கட்டும்’ என்ற கவிஞன் மாவோ, நடத்திய சீனப் புரட்சிக்குத் துணை நின்ற படைப்புகளைச் சுட்டிக்காட்டிய நான், நிகழ்கால அதிசயமாய் இன்னும் தலை தாழாமல் கம்பீரக் குரல் கொடுக்கும் ஃபிடல்காஸ்ட்ரோவின் மனம் கவர்ந்த இலக்கியங்களைச் சொன்னேன். அமெரிக்க ஏகாதிபத்தியக் கழுகை விரட்டிய வியட்நாம் விடுதலை வேந்தன், ஹோ-சிமின் காலத்துப் படைப்புகளைச் சொன்ன நான், மனித உரிமைகளுக்காக 27 ஆண்டுகள் ரோபென் தீவுச் சிறையில் வாடிய நெல்சன் மாண்டேலாவுக்கு உணர்ச்சி ஊட்டிய நூல்தான் ரஸ்கின் எழுதிய ‘Unto this last’ (கடையனின் கடைத்தேற்றம்) என்பதைக் கூறியதற்குக் காரணமே, இதே புத்தகம்தான் என்வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்று, 1942 இல் அண்ணல் காந்தியார் கூறியது, சிந்தனைக்கு விருந்து அன்றோ?
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட இந்தியாவில், வடபுலத்தில் எழுந்த இலக்கியங்களில், நாவல் ஆசிரியர் பிரேம்சந்தின் ‘ரங்கபூமி’யைக் குறிப்பிட்டேன். ஏழை, எளியோரின், சிறிது அளவுநிலங்களையும், பண முதலைகள் கபளீகரம் செய்வதும், நிராதரவாக ஆக்கப்பட்ட அந்த ஏழைகள் செத்து மடிவதும் இன்றுவரை நீடிக்கிறதே, அதனைத்தான் பிரேம்சந்த் படம்பிடித்து உள்ளார்.
எங்கே அச்சம் என்பது இல்லையோ, எங்கே அறிவுதலை நிமிர்ந்து நிற்கிறதோ, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில் என் தாயகம் விழித்து எழட்டும் எனும் உயிர்க் கவிதைகளைத் தந்த கவியரசர் தாகூரின் கவிதைகள், மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் நாவல்கள், ‘பாகிஸ்தான்’ எனும் பிரிவினைக் குரல்எழுவதற்கு முன்னர், கவிஞன் அல்லாமா இக்பால் தீட்டிய கவிதைகள் என வரிசைப்படுத்திய நான், தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமைக் கொடுமைபோல், அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபோல், நம் நாட்டில், மனு தர்மத்தால், வருணாசிரமத்தால், வைதீகக் கொடுமையால் உருவாக்கப்பட்ட அக்கிரமமான அநீதியை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்ட திராவிட இயக்கத்தில், மனித உரிமைகளுக்காக அறிஞர் அண்ணா தீட்டிய எழுத்து ஓவியங்களைச் சொன்னேன்.
வாள் பிடித்துப் பகைக் கூட்டங்களை வென்ற மாவீரன் சிவாஜி, காகபட்டரின் தாள்பிடிக்கும் இழிநிலையா? என்ற கேள்வி எழுப்பிய அவரது ‘சந்திரமோகன்’ நாடகம் உள்ளிட்ட புரட்சி இலக்கியங்களைச் சொன்னேன். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என்று குமுறிய பாரதியை, ‘கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல்அறவே’ எனும் போர்க்குரல் எழுப்பிய பாவேந்தர் தந்தகவிதை இலக்கியங்களை என் உரையில் வைத்தேன்.
என் உரையின் உச்சகட்டமாக அமைந்ததுதான், தமிழ்ஈழத்தில் மனித உரிமைகளுக்காகத் தணலாக எழுந்த கவிதைகள் ஆகும். தமிழ் ஈழத்தில் உரிமை உள்ள மனிதர்களாக வாழ்வதற்காக மரண பூமியில் போராடும் தமிழ் மக்களின் உரிமைப்போரை விவரித்தது ஆகும். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்ததையும், கண்கலங்கியதையும் கண்டபோது, தமிழ் இனம்காக்கும் உணர்வு, நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இந்த நெருப்பை எந்தச் சக்தியாலும் அணைக்க முடியாது என்ற உறுதி எற்பட்டது.
நான் பேசி முடித்தவுடன், அந்த அரங்கத்தில் இருந்த மாணவ மாணவியரும் பேராசியர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கையொலி எழுப்பிப் பாராட்டியபோது, எனக்கே கூச்சம் ஏற்பட்டது.

Saturday, August 18, 2007

இலக்கியத்தில் இளைப்பாறி...

‘‘தாவி வரும் கடல் அலைகளை எண்ணிவிடலாம்; நட்சத்திரங்களை எண்ணிவிடலாம்; கடற்கரை மணலைக்கூட எண்ணிவிடலாம்; கடலுக்குள் துள்ளிக் குதிக்கும் மீன்களின் எண்ணிக்கையைக்கூடச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த திருத்தொண்டர் புராணத்தின் பெருமையை சேக்கிழார் தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது!’’

அக்னி வெயிலாகத் தகிக்கும் அரசியலுக்கு நடுவே, கலைஞருக்கு மட்டுமல்ல... வைகோவுக்கும் இலக்கியம்தான் இளைப்பாறல்! சமீபத்தில் சிதம்பரத்தில் வைகோ ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு ஆச்சர்யப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. திருத்தொண்டர் புராணத்தைப் பற்றிய அவரது பேரருவிப் பேச்சில் இருந்து ஒரு சாம்பிள் இங்கே...

‘‘தொல்காப்பியத்தில், திருக்குறளில், கம்பன் காவியத்தில், வளையாபதியில், திருமுருகாற்றுப்படையில் எல்லாம் உலகம் என்ற சொல்லை முன்வைத்து தான் தொடங்கி இருக்கிறார்கள் தமிழர்கள். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்...’ என்றுதான் தொடங்குகிறார் சேக்கிழாரும்! முடிக்கும் போதும், ‘உலகெலாம்’ என்று முடிக்கிறார். ‘உலகெலாம்...’ எனத் தொடங்கினாலும், தன் தாய் மண்ணின் பெருமையைச் சொல்ல மறக்கவில்லை சேக்கிழார்.

இமயத்தின் உச்சியிலேயே புலிக் கொடியைப் பதித்த சோழ நாட்டின் பெருமையை ‘நீர் நாடு’ என்கிறார். அதாவது, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நாடு என்று அர்த்தம். அடுத்து, திருவாரூர் நகரத்தின் பெருமையையும், தமிழர்கள் போற்றி வளர்த்த பண்பாட்டு நெறியையும், பசுவுக் காக தன் ஒரே பிள்ளையைப் பலிகொடுத்த மனுநீதியின் வாழ்க்கையையும் சொல்கிறார். அனைவரும் சட்டத்துக்கு முன் சமம் என்று ஜனநாயகத்தை உலகத்துக்கு அளித்த சமூக நீதியைச் சொல்கிறார்.

பெரிய புராணத்தின் மையமாக விளங்குபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தமிழுக்குத் தொண்டு செய்ய வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அகவியலை சேக்கிழார் அவ்வளவாக எழுதவில்லை. ஆனால், ஆலயத்தில் நுழைகிற வேளையில் பரவையர் பார்வையில்பட்ட பிறகு, சுந்தரமூர்த்தியின் இதயத்தில் எழுகின்ற உணர்வுகளை சேக்கிழார் சித்திரிக்கும் விதம் கவிதை நயம்’’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றை சிம்மக் குரலில் சொல்லிச் சிலிர்க்கிறார் வைகோ.

‘‘சேக்கிழார் பற்றிப் பேசுகிறேனே, ஆன் மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுவிட் டேனோ என எண்ண வேண்டாம். தமிழை உயிராக நேசிக்கிறோம்; தமிழைப் பெருமைப்படுத்தியவர்களை நேசிக்கிறோம். அதனால், சேக்கிழாரையும் நேசிக்கிறேன்’’ என்று சொல்லிக் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார் வைகோ.

அரசியலோ, இலக்கியமோ... கறுப்புத் துண்டைத் தோளில் முறுக்கிக்கொண்டு நெருப்பாகப் பொறியும் வைகோவுக்கு பேச் சிலும் மூச்சிலும் துளியும் குறையவில்லை நம்பிக்கை!

--------------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன் (15.08.2007 இதழ்)

Thursday, August 16, 2007

26ம் தேதி தென்காசியில் வைகோ உண்ணாவிரதம்

26ம் தேதி தென்காசியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரதம்


6 பேர் படுகொலை செய்யப்பட்ட தென்காசியில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், வருகிற 26ம் தேதி தனது தலைமையில் மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென்காசியில் நடந்துள்ள இந்த படு பாதகச் செயலால் பிஞ்சுக் குழந்தைகள் மனதில் திகிலும், பீதியும் நிலவுகிறது. அவர்கள் மனதில் பழிவாங்கும் உணர்ச்சி உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பகையை மறந்து அனைத்துத் தரப்பினரும் இணக்கத்துடன் இருக்க முன்வர வேண்டும். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனது தலைமையில் மதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் வைகோ.

Wednesday, August 15, 2007

இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழவைக்கும் - வைகோ பேச்சு

சென்னை, ஆக.16-

இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழ வைக்கும் என்று ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசினார்.

புத்தக வெளியீட்டு விழா
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளை அவரிடம் செயலராக இருந்த அருணகிரி, `தேன் மலர்கள்' என்ற புத்தகமாக தொகுத்துள்ளார். ராஜ ராஜன் பதிப்பகத்தின் சார்பில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க கட்டிட அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை தாங்கினார். தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் புத்தகத்தை வெளியிட, `கல்கி' ராஜேந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ ஏற்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காப்பாற்ற வேண்டும்
உலகத்தில் மிகவும் பழமையான பாபிலோனிய நாகரிகத்தை விட பழமையான நாகரிகம் பூம்புகாரிலே இருந்தது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் பழைய நாகரிகங்களெல்லாம் ஏன் எடுத்து ஆராய்ச்சி செய்கிறோம். பண்டைய காலங்களிலே இருந்த பண்பாட்டுத்தளத்தை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த ஆய்வு. வீரமும், காதலும், விருந்தோம்பலும் தமிழருக்கே உரிய பண்பு. மனித நேய உணர்வோடு தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இருக்கிறது. அதனால்தான் அறிஞர் அண்ணா எதையும் இலக்கியங்களை முன்வைத்து சொல்வார்.

தமிழ் இலக்கியங்களுக்கு நிகரானது எதுவும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மனதை மாற்றி, உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமானது ஒரு புத்தகம். ஒரு எழுத்தாளன் நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கிறான். இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழ வைக்கும். அந்த இலக்கியங்கள் போற்றி வந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.

பேச்சாளர்கள் அப்துல் காதர், டாக்டர் சுதா சேஷய்யன், நடிகர் பிரகாஷ்ராஜ், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
முன்னதாக திரைப்படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அனைவரையும் வரவேற்றார். முடிவில், வேளச்சேரி பி.மணிமாறன் நன்றி கூறினார்.

தமிழகத்தின் புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்

தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல்:-

திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றிïர்.

சென்னை மாவட்டம்
டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி.

காஞ்சீபுரம் மாவட்டம்
சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்ïர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம்.

வேலூர் மாவட்டம்
அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.

தர்மபுரி மாவட்டம்
பாலக்கோடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி).

திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி).

விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி).

சேலம் மாவட்டம்
கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடியினர்), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்கரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (பழங்குடியினர்), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, கொமாரபாளையம்.

ஈரோடு மாவட்டம்
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), பெருந்துறை, பவானி, அந்திïர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி).

நீலகிரி மாவட்டம்
உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர்.

கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், சூளூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.

திண்டுக்கல் மாவட்டம்
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடச்சந்தூர்.

கரூர் மாவட்டம்
அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை.

திருச்சி மாவட்டம்
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறைïர் (தனி).

பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்.

கடலூர் மாவட்டம்
திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி).

நாகை மாவட்டம்
சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேலூர் (தனி), வேதாரண்யம்.

திருவாரூர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம்.

தஞ்சை மாவட்டம்
திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.

புதுக்கோட்டை மாவட்டம்
கந்தர்வக்கோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி.

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி).

மதுரை மாவட்டம்
மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி.

தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம்.

விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி.

ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.

தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

நெல்லை மாவட்டம்
சங்கரன்கோயில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளிïர்.

அரசியல் பழிதீர்க்க வழக்கு- வைகோ

சென்னை: அரசியல் வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வதற்காக என் மீது வழக்கு போடுகிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக எம்பிக்களான செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றதற்கு முதல்வர் கருணாநிதி தான் காரணம் என வைகோ குற்றம் சாட்டியிருந்தார். வைகோவின் இந்தப் பேச்சு கருணாநிதிக்கு பெரும் இழிவை உண்டாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் என்னை பழிவாங்குவதற்காக என்மீது ஆளும்கட்சி போட்ட இந்த வழக்கில், நீதி வென்று உண்மை கண்டிப்பாக ஜெயிக்கும். நான் நம்பிக்கையோடு சட்டப்படி வழக்கை சந்திப்பேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி இணைப்பை தேசியமயமாக்க ஜெயலலிதா முயற்சிகள் எடுத்தார். ஆனால் அப்போது அந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறியவர், இன்று அதே சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இலங்கை ராணுவம், அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசு, அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதங்கள் சப்ளை செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன. மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இதுவரை ஓராயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் எல்லாம் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை எதிர்த்து இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியதே கிடையாது என்றார்.

Monday, August 6, 2007

நந்திகிராமம் முதல் தூத்துக்குடி வரை...

உலகமயமாக்கல் வளரும் நாடுகளைச் சூறாவளியாகத்தாக்கிக் கொண்டு இருக்கிறது. அரசாங்கங்களையும், ஆளுகிறவர்களையும் ‘கைக்குள் போட்டுக் கொண்டு’ விசுவரூபம் எடுத்துவிட்டதாக பிரம்மாண்டத் திட்டங்களை அடுக்கும் அதே வேளையில், அதன் பகாசுர வேகத்தில் மிதியுண்டு கூழாகிப் போகிறார்கள் அடித்தட்டு மக்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுடன், உள்நாட்டின் பெருமுதலாளிகளும் முன்னிலும் வேகத்துடன் பணக்கிடங்குகளை நிரப்ப யத்தனிக்கும்போது, ஏழைபாழைகள் அவர்களின் ராட்சதக் கரங்களில் சிக்குண்டு மடிவது தொடர்ச்சியாக நிகழ்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) என்ற பெயரில் ஏழை மக்களின் விவசாய நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன. மறுபுறம் பெருமுதலாளிகளின் பேராசைத் திட்டங்களுக்கு கதவு திறந்துவிடும் அரசாங்கங்கள் உள்ளூர் மக்களை விரட்டியடிக்கிற முனைப்பில் நிற்கின்றன.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் குறித்து வாய்கிழியப் பேசும் இடதுசாரிகள் - உலகமயமாக்கலை எதிர்ப்பதாகத் தம்பட்டமடிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் - தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் அப்பாவி மக்களின் வாழ்வு ஆதாரங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபத் திட்டங்களுக்காவும் அடகு வைக்க முயன்றனர்.

டாடாவுக்காக சிங்கூர் கிராமத்தை ஆக்கிரமிக்க முற்பட்டது இடதுசாரி கூட்டணி அரசு. நந்திகிராமத்தில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக பழங்குடி மக்களை விரட்டியடித்து கொன்று குவித்தது. குடிசையில் இருந்து துப்பினால் கோபுரமே வீழும் அல்லவா? அடக்குமுறைக்கு அஞ்சாத ஏழை மக்கள்ஒன்று திரண்டு துப்பாக்கி முனைகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தினார்கள். இடதுசாரி அரசு பின்வாங்கிவிட்டது. ஆனால், காலம் கருதிக் காத்துக்கொண்டு இருக்கிறது...

கம்யூனிஸ்ட்டுகள் கூலி விவசாயிகளுக்கும், ஏழைமக்களுக்கும் இலவச நிலம் கோரி ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ‘இலவச நிலமா? ஏது?’ என்று கைவிரித்த அரசாங்கத்தின் முன்னால் இறைந்துகிடக்கும் நிலங்களைப் பட்டியலிட்டுக் காட்டினார்கள். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசு மசியுமா? மறுத்து முரண்டு பிடித்தது. பொதுமக்களை ஒன்று திரண்டுப் போராட அழைப்பு விடுத்தார்கள் இடதுசாரிகள். காங்கிரஸ் அரசோ ஆயுதத்தைக் கையில் எடுத்தது. ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஆறு அப்பாவிகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகிப்போனார்கள்.

இந்தியாவை உலுக்கிய இந்த நிகழ்வால் ஆந்திர அரசாங்கம் தட்டுத் தடுமாறி விழித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் இருந்து எழும் எதிர்ப்புக் கணைகளைத்தாள முடியாமல் தவிக்கிறது. மேற்கு வங்கத்தில் பலஉயிர்களைப் பலி கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் பறிக்கப்பட்ட உயிர்களுக்காக நாடு முழுவதும் கிளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்...

அடுத்த காட்சிக்கு வருவோம்...

‘மும்முடிச்சோழன்’ ஆளும் தமிழகத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கிற தொழிற்சாலை வைக்க முடிவெடுத்தது டாடா நிறுவனம். வருகிற ‘இலாபத்தை’ எண்ணிப் பார்த்ததும் உடனே தலை அசைத்துவிட்டார் முத்தமிழ் அறிஞர்.

சுமார் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள அரசூர் பகுதியில் இத்தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்தது டாடா நிறுவனம். இதற்காக ஏறத்தாழ 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி டாடாவுக்கு தாரை வார்க்க முனைந்தார் தமிழக முதல்வர். ‘புரிந்து உணர்வு’ ஒப்பந்தமாம்! அதில் டாடாவுடன் கையெழுத்திட்டு களத்தில் இறங்கியபோதுதான் கலங்கிப் போனார் கலைஞர். அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கிளர்ந்தார்கள். “எங்களுக்கு ஒரு வழி சொல்லிவிட்டு டாடாவுக்கு கம்பளம் விரி!” என்று ஆர்ப்பரித்தார்கள். ஜனநாயகக் குரலுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்றுதிரண்டதால், மேற்கு வங்கம், ஆந்திரா அளவுக்கு நிலைமை விபரீதம் ஆகாமல் தடுக்கப்பட்டது.

இது தற்காலிகம்தான்! “பொதுமக்களின் கருத்தறிந்த பிறகு முடிவு செய்வோம்” என்று அறிவித்துவிட்டு, காலம்பார்த்து காத்து இருக்கிறது கருணாநிதி அரசு!

இப்படி மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம் என்று ஏழைகளின் வயிற்றில் அடித்துப் பிழைக்கிறவர்கள்தாம் ஒன்று சேர்ந்து தில்லியில் அரசாட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சொந்த மண்ணை அந்நிய நிறுவனங்களுக்கும், உள்ளூர்க் கொள்ளையர்க்கும் தாரை வார்த்துவிடத் துடிக்கும் இவர்களின் கையில் நாடு இருப்பது பரிதாபநிலைதான்!

விழித்துக் கொள்ளாவிட்டால், பின்னர் அழுது என்ன பயன்?

- வளவன்

____________________________________________________________

சங்கொலி 10.08.2007 இதழிலிருந்து....