Saturday, December 29, 2007

திருப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்ற மதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவை, டிச. 28: திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கவுன்சிலர்கள் கோரியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர்கள் சிவபாலன், தம்பி கோவிந்தராஜ், சாந்தாமணி, கலாமணி சுந்தரம், பரமேஸ்வரி சண்முகம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தின் நகலை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் முபெ சாமிநாதன், ஆட்சியர் நீரஜ் மித்தல் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக சிவபாலன் தெரிவித்தார்.

திருப்பூர் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

No comments: