Friday, January 11, 2008

வைகோ உண்ணாவிரதம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு


துத்துக்குடி : கோவில்பட்டியில் நடந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் வைகோ உற்சாகமடைந்தார்.
தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு போன்றவற்றை கண்டித்தும் , நெல்லுக்கு குவிண்டாலுக்குரிய விலை வழங்கவேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துõத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க., சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்திற்காக இனாம்மணியாச்சி ரோட்டில் கோட்டை முகப்பில் வளைவுடன் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 9 மணிக்கு துவங்குவதாக இருந்த உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ காலை 8.30 க்கே வந்துவிட்டார்.உண்ணாவிரதத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லை சத்யா, மாவட்ட செயலர்கள் துõத்துக்குடி ஜோயல், நெல்லை சரவணன், நெல்லை மாநகர செயலாளர் நிஜாம், கோவை மாரியப்பன், திருச்சி நடராஜன், மதுரை பூமிநாதன், ராமநாதபுரம் நென்மேனி ஜெயராமன், விருதுநகர் சண்முகசுந்தரம், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், வடசென்னை ஜீவன், கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், சிவகாசி எம்.பி.,ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சிவகாசி ஞானதாஸ், விருதுநகர் வரதராஜன், திருமங்கலம் வீரஇளவரசன், வாசுதேவநல்லுõர் சதன்திருமலைக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் உண்ணாவிரத பந்தல் போதாமல் அருகருகே புதிய பந்தல்கள் அமைக்கப்பட்டன. அதிலும் இடம் கிடைக்காமல் எதிரே இருந்த பாலத்தின் கீழ் நிழலில் தொண்டர்கள் அமர்ந்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். வைகோ உற்சாகமடைந்து தொண்டர்கள், நிர்வாகிகளை எழுந்து நின்று வரவேற்று உட்கார வைத்தார்.


தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து கோவில்பட்டியில் ம.தி.மு.க.,நடத்திய உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது:மின்வெட்டினால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துதரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் இருக்கிற சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லை. மின்நிலையங்களை முறையாக பராமரிக்காததாலும் திட்டமிட்டு செயல்படாததாலும் மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பாததாலும்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.துõத்துக்குடி ஸ்பிக், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் உரம் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது வந்துள்ள யூரியாக்களை பயன்படுத்தினால் பயிர் பாழாகிவிடுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயிகள் என வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த ஆண்டு திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் நிகழஉள்ளன இவ்வாறு வைகோ பேசினார்.

No comments: