Showing posts with label vaiko. Show all posts
Showing posts with label vaiko. Show all posts

Tuesday, June 10, 2008

Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-2

அன்று ஆபிரகாம் லிங்கன்! இன்று பாரக் ஒபாமா!

மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வ காட்சிகள் அமெரிக்க அரசியல் அரங்கில் நடப்பதையும், 1966 ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் மனதிšல் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்த "மனிதன்" எனும் புதினமும், அதனால் அவர் தம்பிக்குத் தீட்டிய மடல்களையும் பற்றிக் கடந்த வாரம் கூறினேன். பத்து மாதங்களுக்கு மு‹ன்னர், இவரா? இந்தக் கருப்பரா? அதிலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முயல்வதா?

கேள்விக்குறியாக இருந்த பாரக் ஒபாமா, இன்று ஆச்சரியக்குறி ஆகிவிட்டார். இப்படியும் நடக்குமா? நம்ப முடியவிšலையே! ஏதோ போட்டிக்கு முயற்சிக்கிறார் ஜனநாயகக் கட்சியிšன் எட்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகையிலே அதிபராக இருந்த விவிலியம் ஜெபர்சன் கிளிண்டனின் துணைவியார், நியூயார்க் நகரில் புகழ்மிக்க செனட்டர் ஹிலாரி ரோதம் கிளிண்டன்தான், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது முடிந்துபோன முடிவு ஆயிற்றே! அமெரிக்க நாட்டி‹ல் குடியரசுத் தலைவராகப்போகும் முதல் பெண்மணி - அதுவும் ஒரு புதிய திருப்பம் - ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இருந்தாலும், இந்தக் கருப்பு இளைஞர், போட்டிப் பந்தயத்தில் நுழைவதே பெரிது அ‹ன்றோ! பரவாயிšலை. ஓரளவு ஓட்டுக்களும் கிடைக்கும் என்ற ஆருடங்கள் எல்லாம், பொடிப்பொடியாகிறன.

இதோ நெருங்கி வந்துவிட்டார்; இடைவெளி குறைகிறது; அடடா, முந்துகிறாரே; கருப்பர்கள் அதிகம் உள்ள மாநிலம் அல்லவா -அதுதான்போலும்; இல்லையில்லை, வெள்ளையர்கள் பெரும்பாலான மாநிலத்திலும் சமபலம். அடடா, என்ன ஆச்சரியம்! அங்கும் அலவா முந்துகிறார்!

பேச்சு ஆற்றலால், வரலாற்றின் போக்கை மாற்றியவர்கள் பலர் உண்டு, பல்வேறு நாடுகளில்! 1917. போஸ்விக்குகள், ரஷ்யாவில் வெறிகண்ட புரட்சியில் பெரும்பங்கு வகித்தது, லியான் ட்ராட்ஸ்கியின் பேச்சு ஆற்றல்தான். அதைப் பாராட்டிப் பரவசம் உற்றவர் மாமேதை லெனின். இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியக் குண்டுவீச்சால் இடிபாடான லண்டனில், அச்சம் இன்றி ஆபத்தை எதிர்கொளும் துணிச்சலைத் தன்னாட்டு மக்களுக்குத் தந்தது சர்ச்சிலின் பேச்சு ஆற்றல்.

சைமன் பொலிவரின் பேச்சுகள், பொலிவியாவின் சரித்திரத்தை மாற்றியது. ஏன், அமெரிக்க நாட்டில், பகுத்தறிவுச் சுடராய் எழுந்த ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் பேச்சுகள், பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது உண்டு. கருப்பர்களின் விடிவெளியாக முளைத்த மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை, தாமஸ் ஜெபர்சனின் எண்ணங்களை, வசீகரிக்கும் கென்னடியின் வாதத் திறமையை, தன் உரைகளில் மிளிரவைக்கும் வித்தகராக அன்றோ இந்தக் கருப்பு இளைஞன் மேடையில் நிற்கிறான்.

அதிகமாக அறிமுகம் இல்லாத, இலினாய்ஸ் மாநிலத்துக்கு உட்பட்ட ஒரேயொரு கருப்பு இன செனட் உறுப்பினராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய ஒரேயொரு உரையின் மூலம், அனைவர் உள்ளங்களையும் வென்றார். என்ன அருமையாகப் பேசுகிறார்! பேச்சைக் கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன - மறக்க முடியவில்லை. இன்னும் அந்த மயக்கத்தில் இருக்கிறேன் என்று பேசத் தொடங்கினார்கள். ஊரெங்கும், நாடெங்கும் இதே பேச்சு. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதத் தொடங்கின. தொலைக்காட்சி நிறுவனங்கள் தேடிவந்து பேட்டி கண்டன.

இதே இலினாய்ஸ் மாநிலத்தில் இருந்துதான், ஆபிரகாம் லிங்கன் செனட்டராக இருந்தார். தனது அற்புதமான பேச்சு ஆற்றலால், எதிரிகளை வென்றார்; வேட்பாளர் ஆகவும் களத்தில் நின்றார்; குடியரசுத் தலைவரும் ஆனார். கருப்பர்களின் அடிமை விலங்கை உடைக்கப் பட்டயம் தீட்டியதால் ஆவியும் தந்தார்.

பாரக் ஒபாமாவா? அவருக்கு அனுபவம் கிடையாதே? அவர் எப்படி அதிபர் ஆக முடியும்? எப்படி இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்? என்று, கிளிண்டனின் வட்டாரம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தது. சிகாகோவி‹ பிரபலமான ஏடு ஒன்று, அதுபற்றி வெளியிட்ட கருத்துப் படம், அமெரிக்கா முழுமையும் பேசப்பட்டது. இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகளான சிறுமிகள், ஆபிரகாம் லிங்கனின் படத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைப் போல அக்கருத்துப்படம். "அனுபவம் இல்லாத ஒரு வழக்கறிஞரை இங்கிருந்துதான் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினோம்; நாட்டுக்கு நன்மையாக முடிந்தது. இப்பொழுதும் அதுபோல் ஏன் நடக்கக்கூடாது?" என்பது அதன் பொருள். வாயடைத்துப் போயிற்று கிளிண்டனின் வட்டாரம்!

சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க ஊடகங்களில், ஏடுகளில், பரபரப்பாக இடம்பெற்ற பாரக் ஒபாமா பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. உலகின் எந்த மூலையிலே பிறந்தாலும், ஒருசிலர் கண்டங்களைக் கடந்து மக்களை ஈர்க்கிறார்கள். அறிவால், ஆற்றலால், காந்தமென வசீகரிக்கும் பேச்சால் கவருகிறார்கள்.

சி.என்.என் தொலைக்காட்சியில் ஒபாமாவின் பேச்சைக் கேட்ட நான், தானாகவே அவரது பற்றாளன் ஆகிவிட்டேன். ஐம்பதுகளில், அறுபதுகளில், அறிஞர் அண்ணா தன் பேச்சால், செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், இதயங்களை வென்றதுபோல், இந்த நீக்ரோ இளைஞரும், ம்னித மனங்களைத் தன் பக்கம் அள்ளுகிறார். கருப்பர்கள் மட்டும் அன்றி வெள்ளையர்களும், அதிலும் குறிப்பாக வாலிப வயதினர் அவர் பேச்சில் சொக்கிப் போகிறார்கள்.

"நான் ஒபாமாவின் பேச்சைக் கேட்டேன். அன்று முதல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என் நெஞ்சிலும், செவியிலும் அந்தக் குரலே ரீங்காரமிடுகிறது" என்ற பேச்சு எங்கும் எழுந்தவண்ணம் உள்ளது. பாரக் ஒபாமாவின் சிந்தனை, எல்லை கடந்தது, ஆகாயம் நிகர்த்தது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் என்னை ஊக்குவிக்கும் மாமனிதர் என்கிறார் ஒபாமா.

உலகில் சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பதைக் காந்தியாரது வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. அதனால்தான், மகாத்மா காந்தியின் படத்தைத் தனது செனட்டர் அலுவலகத்தில் தொங்கவிட்டு இருப்பதாக ஒபாமா கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி. 5000 கோடி ருபாய் மதிப்புள்ள அமெரிக்கப் போர் விமானம், 6000 கடல்மைல்கள் இடைவிடாது பறந்து தாக்கும் சக்திவாŒய்ந்த விமானம், நடுவானிšல் வெடித்துச் சிதறியது. ஆனால், அதில் இருந்த இரண்டு விமானிகளும், பாரசூட் மூலம் குதித்துத் தப்பினார்கள். திகைப்பூட்டும் ஆச்சரியம்! ஆனால், அதையும்விட, அதிசயமான ஆச்சரியம்தான் பாரக் ஒபாமாவின் பிரவேசம். வெள்ளையர் உள்ளம் கவர் கள்வனாக, நாடு நகரமெங்கும் அவர் உலா வரும் காட்சிகள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போது ஆண்டு கொண்டு இருக்கிற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார்? ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கு, அந்தக் கட்சிகளுக்கு உள்ளேயே நடக்கும் வேட்பாளர் தேர்ததான், இதற்கு முன் எந்தக் காலத்திலும் ஏற்பட்டு இராத பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அங்கு மட்டும் அன்றி, அகிலம் முழுமையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிலும், குறிப்பாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுதான், இன்று உலகெங்கும் விவாதிக்கப்படும் பொருள் ஆகிவிட்டது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போது செனட்டராக உள்ள ஜான் மெக்கெய்ன்தான் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ முடிவு ஆகிவிட்டது. இவர் வியட்நாம் போரில், சாகசம் புரிந்தவராக, ஆறு ஆண்டுகள் அங்கு சிறையில் சித்திரவதைக்கு உள்ளானபோதும், பிற கைதிகளுக்கு முன்னதாக விடுதலைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் நிராகரித்த துணிச்சல்காரராகவும், புகழ் பெற்றவர். இவரை எதிர்த்து வெல்வதற்கு, தகுதியானவர் ஹிலாரி கிளிண்டன்தான் என்று, கடந்த ஆண்டு நவம்பர் வரையிலும் கருதப்பட்டார். ஆனால், களத்தில் பெரும் புயலாகப் பிரவேசித்த பாரக் ஒபாமா, எவரும் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

நேற்று வரை ஹிலாரியை ஆதரித்தவர்கள், இன்று திடீரென்று, பாரக் ஒபாமா பக்கம் சாய்கிறார்கள். இந்த விந்தைமிக்க மாற்றம், அனைத்துத் தரப்பினரிடமும் பரவுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை, ஹிலாரியை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், 'அனைவருக்கும் சம உரிமைகள்' போராட்ட நாயகனுமான ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜான் லீவிஸ், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல; வேட்பாளரைத் தேர்ந்து எடுக்கும் கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகளுள் (Super Delegate) ஒருவரும் ஆவார். அவர் பிப்ரவரி 28 ஆம் நாள், வாசிங்டனில் செய்த அறிவிப்பு, ஹிலாரி வட்டாரத்தை அதிர்ச்சிக்கும், ஒபாமா வட்டாரத்தை ஆச்சரியத்துக்கும் ஆளாக்கியது.

அவர் சொன்னார்: "அமெரிக்காவில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 1968 இல், தேர்தல் களத்தில், ராபர்ட் கென்னடி போட்டியிடத் தயாரான காலத்துக்குப் பின்னர், இத்தனை ஆண்டுக்காலமும் நான் பார்த்திராத, ஒருவிதமான பேரார்வம், ஒருவிதமான இயக்கம், ஒருவிதமான உள்ளுணர்ச்சி, அமெரிக்க மக்களின் எண்ணங்களில், இதயங்களில், ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியலில், ஒரு புதிய விடியலை மக்கள் தேடுகிறார்கள். அந்த மாற்றத்தின் அடையாளமாகவே, செனட்டர் பாரக் ஒபாமாவை அவர்கள் காண்பதாக நான் கருதுகிறேன். அதனால், நானும் பாரக் ஒபாமாவையே ஆதரிக்கிறேன்".

ஹிலாரியின் கூடாரத்தில் இருந்தே இப்படி ஒரு அறிவிப்பு வந்ததைக் கண்டு, பாரக் ஒபாமா கூறும்போது, " மனித உரிமை இயக்கத்தில் மாபெரும் தலைவரான ஜான் லீவிஸ், அமெரிக்க மக்களால் போற்றப்படுபவர். அவரது ஆதரவு மூலம் எனக்கு மிகப்பெரும் கௌரவத்தைத் தந்து உள்ளார்" என்று குறிப்பிட்டார்.

சூடும் சுவையும் நிறைந்த விவாதப் போட்டி, ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் இடையில், மிக விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆனால், பிப்ரவரி தொடங்கியதற்குப்பின், களத்தில் தான் மோதப் போவது, பாரக் ஒபாமாவுடன்தான் என்று, ஜான் மெக்கெய்ன் முடிவு செய்துவிட்டார் போலும். அதனால், பாரக் ஒபாமா மீதே கணைகளைத் தொடுக்கிறார். விமர்சனங்களை வீசுகிறார். ஹிலாரி கிளிண்டனைப் பற்றிப் பேச்சே இல்லை.

ஈராக் பிரச்சினை குறித்து, ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை, அங்கே அமெரிக்க வீரர்கள் உயிர்ப்பலி ஆவதை, உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து சூழ்வதைக் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கும் பாரக் ஒபாமா, தான் அதிபர் ஆனால், அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து, முதல் வேலையாகத் திரும்பப் பெறுவேன் எனக் கூறி வருகிறார்.

அண்மையில், ஒரு விவாத மேடையில், "ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள், செயல்பட்டால், என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஈராக்கில் அல் கொய்தா தளம் அமைந்தால், அதை நசுக்க அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவேன் என்றார்.

இந்த பதிலுக்கு, விமர்சனமாக ஜான் மெக்கெய்ன், "ஒபாமாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். ஈராக்கில் அல் கொய்தா இருக்கிறது. நாம் வெளியேறினால், அவர்கள் தளம் மட்டும் அமைக்க மாட்டார்கள். அவர்கள் அந்த நாட்டையே கைப்பற்றிக் கொள்வார்கள். அல் கொய்தாவிடம், ஈராக்கை ஒப்படைக்க விரும்புகிறார் ஒபாமா" என்றார்.

மெக்கெய்ன் சொன்ன சில மணி நேரத்துக்கு உள்ளாக, பதிலடியாக, பாரக் ஒபாமா கூறுகையில், "ஜான் மெக்கெய்னுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். ஜார்ஜ் புசும், ஜான் மெக்கெய்னும் ஈராக்கில் படையெடுப்பதற்கு முன்பு அங்கு அல் கொய்தா கிடையாது. ஆபத்தை விதைத்ததே இவர்கள்தாம்" என்றார்.

அமெரிக்க இதயங்களையும், ஊடகங்களையும், வேகமாகப் பற்றிப் படர்ந்துவரும் பாரக் ஒபாமாவுக்குத் திரண்டு வரும் ஆதரவு, மந்திரமா? மாயாஜாலமா? காரணம் தேட முடியாத அற்புதமா? பெரும் புதிராக இருக்கிறார். எப்படிப் பெருகியது இந்த ஆதரவு? எவ்விதம் நாலுகால் பாய்ச்சலில் தாவி வளருகிறது? என்பதைக் கணக்கில் எடுப்போம்.

இந்த ஆண்டு, ஜனவரி மூன்றாம் நாள்தான் முதன்முதலாக அயோவா மாநிலத்தில், வேட்பாளருக்கான தேர்தல் நடந்தது. கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் அன்றி, மற்றவர்களும் வாக்கு அளிக்கின்ற காகஸ் (Caucus) தேர்தலில், பாரக் ஒபாமாவுக்கு 38 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஹிலாரி கிளிண்டனுக்கு 29 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. இதனைப் பெரிதாகக் கணக்கில் கொள்ளாத ஹிலாரி முகாம், அலட்சியம் செய்தது. ஐந்து நாட்கள் கழித்து, நியூ ஹேம்ப்சயர் மாநிலத்தில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் பிரைமரி தேர்தலில் , ஒபாமாவுக்கு 37, ஹிலாரிக்கு 39 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

ஜனவரி 19 ஆம் நாள் நெவேடா மாநில காகஸ் வாக்குப்பதிவில், ஒபாமாவுக்கு 45, ஹிலாரிக்கு 51 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. ஆனால், ஜனவரி 26 ஆம் நாள், தெற்கு கரோலினா மாநில பிரைமரி தேர்தல், ஹிலாரிக்குப் பலத்த அதிர்ச்சியைத் தந்தது. இங்கு பாரக் ஒபாமா பிரைமரி தேர்தலில் 2,95,091 வாக்குகளும், 55 விழுக்காடு ஆதரவும் பெற்றார். ஹிலாரிக்கு 1,41,128 வாக்குகளும், 27 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பிரதிநிதிகள் கணக்கில், ஒபாமாவுக்கு 25 பிரதிநிதிகளும், ஹிலாரிக்கு 12 பிரதிநிதிகளும் ஆதரவு அளித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவுதான்ன், அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பாரக் ஒபாமாவுக்கு, தெற்கு கரோலினா மாநிலத்தில், அமோகமான ஆதரவு கிடைத்ததை ஏளனம் செய்தும், கிண்டலாகவும், எகத்தாளமாக பில் கிளிண்டன், "இப்படித்தான் இங்கே ஒரு கருப்பு இளைஞன் ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஒருமுறை பிரைமரி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றார். கடைசியில் என்ன ஆனார்? அதுபோலத்தான் இப்போதும் என்று, கருப்பர்கள் அதிகம் வாக்கு அளித்து விட்டார்கள் என்ற பரிகாசத்தின் தொனிதான், மொத்தத்தில் இத்தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

'கருப்பர் இனத்தைப் பாகுபடுத்தி, கொச்சை மொழியில், பில் கிளிண்டன் புண்படுத்திவிட்டார்', என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் கருப்பர்கள் அல்ல; ஜனநாயகக் கட்சியில் உள்ள வெள்ளை இனத்தவர். அதிலும், கட்சியின் முன்னணித் தலைவர்கள் வெகுண்டனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் பலமான தூணான எட்வர்டு கென்னடி, இதன் காரணமாகவே பகிரங்கமாக, தான் பாரக் ஒபாமாவை ஆதரிப்பதாக அறிவித்தார். சொற்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.

அதனாšதான், "வார்த்தைகளை அளந்து பேசு; சொற்களைச் சிதறி விடாதே, பிறகு அள்ள முடியாது; வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் என்ன?" என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.

ஒருகாலத்தில், நாய்களை விட, பன்றிகளை விட கருப்பர்கள் இழிவாக நடத்தப்பட்ட அமெரிக்காவில், இன்று எத்தகைய தலைகீழ் மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை, கடந்த 150 ஆண்டுகளில், மனங்களை உலுக்கிய இரண்டு நூல்களைப் பற்றியும், உரிமைக்குப் போராடிய மாமனிதர் மார்ட்டின் லுhதர் கிங் பற்றியும், கண்ணின்மணிகளே, நான் உங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற கடிதங்களில், கருத்து ஓட்டத்தின் உட்பொருளையும், இதிலிருந்தே நீங்கள் உணரலாம்.

கருப்பர் இனம் என்று வேறுபடுத்தும் விதத்தில் ஏளனமாகச் சொன்னதால், வெள்ளை இனத்துக் கட்சித் தலைவர்கள் அதனை வெறுமனே கண்டிக்காமல், ஒபாமாவுக்கு ஆதரவாகக் களத்திலேயே குதித்து விட்டார்கள். அதனால்தான், ‘நடப்பது தலைகீழ் மாற்றம்’ என்றேன்.

திடுக்கிடும் திருப்பமாக, பாரக் ஒபாமாவுக்கு ஆதரவு அலை வீச ஆரம்பித்தது. இது ‘ஒபாமா அலை’ (Obama Wave), என்பதே எங்கும் பேச்சு. ஓங்கி எழும் சாதாரண அலை வீச்சுத்தானா? அல்லது மண்டிலங்களைப் புரட்டிப்போடும் ஆழிப் பேரலையா? என்ற பேச்சும் ஆங்காங்கே ஆரம்பமாயிற்று. பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, வெறும் செவ்வாய்க்கிழமை அல்ல - தேர்தல் கள வேட்பாளரைத் தீர்மானிக்கப் போகும் ‘பெரிய செவ்வாய்க்கிழமை’ அன்று என்ன நடக்கும்? அன்று தான் 22 மாநிலங்கள், யாருக்கு ஆதரவு? யார் எங்கள் வேட்பாளர்? என்று வாக்கு அளிக்கிற தேர்தல். இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளும், ஊடகங்களில் முதன்மையான இடம் பெற்றன.

இதில், ஹில்லாரி கிளிண்டன், செனட்டராக உள்ள மாநிலம் நியூ யார்க். அதிக வாக்காளர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட மாநிலம். இங்கே அவருக்கு 57 விழுக்காடு ஆதரவும், 137 பிரதிநிதிகளின் வாக்குகளும் கிடைத்தன. ஒபாமாவுக்கு, 93 வாக்குகளும், 40 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பெரிய மாநிலங்களுள் ஒன்றான கலிபோர்னியாவில், ஹில்லாரிக்கு 50 விழுக்காடு வாக்குகளும், 203 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்கு 43 விழுக்காடு வாக்குகளும், 165 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இதைவிடப் பெருமளவில் ஹில்லாரிக்கு இங்கு வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. 92, 96 ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இங்கு வசிக்கும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ வம்சத்தினர் முழுக்கவும் பில் கிளிண்டனின் ஆதரவாளர்கள்.

பாரக் ஒபாமாவுக்கு எட்வர்டு கென்னடி ஆதரவு தந்த நிலையிலும்கூட, அவரது மாநிலமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில், ஹில்லாரி கிளிண்டனுக்கே 56 விழுக்காடு வாக்குகளும், 55 பிரதிநிதிகள் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்குக் கிடைத்தது. 41 விழுக்காடு வாக்குகளும், 38 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தன. நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, அர்கன்சாஸ், அரிசோனா, ஒக்லகாமா, டென்னஸ்ஸி ஆகிய மாநிலங்களில், ஹில்லாரி கிளிண்டனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.

பிரதிநிதிகள் ஆதரவில் ஹில்லாரி கிளிண்டன் முந்தினாலும்கூட, அலபாமா, அலாஸ்கா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஜார்ஜியா, இடாகோ, இல்லினாய், கான்சாஸ், மின்னசோட்டா, மிசௌரி, வடக்கு டகோடா, உடா ஆகிய 13 மாநிலங்களில் பாரக் ஒபாமா அதிக வாக்குகளைப் பெற்றது, பந்தயத்தில் பாரக் ஒபாமா இறுதியில் வெல்வார் என்ற எண்ணத்தையே வெகுவாக உருவாக்கிற்று.

இதன் பின்னர், பிப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில், லூஸியானா, வாசிங்டன், விர்ஜின் தீவுகள், நெப்ராஸ்கா ஆகிய நான்கு மாநிலங்களிலும், 10 ஆம் தேதி தேர்தலில் மெயின் மாநிலத்திலும், பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலில் கொலம்பியா மாவட்டத்திலும், மேரிலாண்ட், விர்ஜீனியா மாநிலங்களிலும் ஒபாமாவே வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு அடிமேல் அடியாக, பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலில், அவாய் தீவு மாநிலத்திலும், விஸ்கான்சின் மாநிலத்திலும் ஒபாமாவே வெற்றி பெற்றார்.

இந்தத் தொடர் வெற்றிகள், ஹில்லாரி முகாமை நிலைகுலையச் செய்தன. இனி அடுத்து, மார்ச் 4 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று, டெக்சாஸ், ஒஹையோ மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்தான் மிக முக்கியமானதாகும். ஒபாமாவா? அல்லது ஹில்லாரியா? என்பதைத் தீர்மானிக்க வழிவகுக்கும். இரண்டும் பெரிய மாநிலங்கள். இவ்விரு மாநிலங்களிலும், பிப்ரவரி முதல் வாரம் வரையிலும் அமோகமான ஆதரவு ஹில்லாரி கிளிண்டனுக்கே இருந்தது. ஆனால், பல மாநிலங்களில், பெருமளவில் முதலில் ஹில்லாரிக்கு இருந்த ஆதரவு, ஓரிரு வாரங்களில் சடசடவெனச் சரிந்து, ஒபாமா முந்தியது மலைக்க வைக்கிறது, திகைக்கச் செய்கிறது, பிரமிப்பு ஊட்டுகிறது. அதுபோன்ற நிலைமை டெக்சாசிலும், ஒஹையோவிலும் ஏற்படுமா? அல்லது ஹில்லாரியே பெரும் ஆதரவைப் பெறுவாரா? என்ற சர்ச்சை நடந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து, பில்கிளிண்டன் சொல்லுகையில், “இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால்தான், இந்தப் போட்டியில் ஹில்லாரி நீடிக்க முடியும். இல்லையேல், மூட்டை கட்ட வேண்டியதுதான்" என்றார்.

இவ்விரு மாநிலங்களிலும் ஹில்லாரி சற்று முந்தினாலும்கூட, இறுதியில் பாரக் ஒபாமா வெல்வார் என்றும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவார் என்றும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முன்பு எதிர்பார்த்த வெற்றி ஒருவேளை கிடைக்காமல் போகும் என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதால்தான், ஹில்லாரி கிளிண்டன் கடைசியாகக் கூறுகையில், இவ்விரு மாநிலங்களிலும் எனக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஓட்டுக் குறைந்தாலும், எப்படியும் இன்னும் ஓட்டுப் போட வேண்டியவர்களின் ஆதரவை நான் பெற முடியும்’ என்றார்.

ஒபாமாவுக்குக் கிடைத்து வரும் ஆதரவும் செல்வாக்கும் கண்டு பொறுக்காமல், ஹில்லாரி கிளிண்டன் பொருமுகிறார், நிந்திக்கிறார், பழிக்கிறார். அதுவும் அவருக்குப் பாதகம் ஆகிறது. மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்புவரை, இருவருக்கும் கிடைத்த ஓட்டு நிலவரம்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலைத் தீர்மானிக்கும் மொத்த வாக்குகள் 4049 ஆகும். இதில், சிறப்புப் பிரதிநிதிகளின் 796 வாக்குகளும் அடங்கும். 2025 வாக்குகள் பெறுகிறவரே அதிபர் வேட்பாளர் ஆவார். சிறப்புப் பிரதிநிதிகளுள் சிலர், தங்கள் வாக்கு யாருக்கு என்பதை இப்போதே அறிவித்து விட்டனர். அந்த வாக்குகளையும் சேர்த்து, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், காகஸ் வாக்காளர்களும், பிரைமரி வாக்காளர்களும், சில சிறப்புப் பிரதிநிதிகள் தந்த வாக்குகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், பாரக் ஒபாமாவுக்கு இதுவரை கிடைத்து உள்ள வாக்குள் 1375. ஹில்லாரி கிளிண்டனுக்கு 1277. பாரக் ஒபாமா 95 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.

மார்ச் 4 ஆம் நாள் டெக்சாஸ்ச், ஒஹையோ ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும், ரோட்ஸ் தீவுகள், வெர்மாண்ட் ஆகிய இரண்டு சிறிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டெக்சாஸ், ஒஹையோ, ரோட்ஸ் தீவுகளில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்று இருக்கிறார். வெர்மாண்ட் மாநிலத்தில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார்.

வாக்கு விவரம்:
டெக்சாஸ்:
ஹில்லாரி 51%
ஒபாமா 47

ஒஹையோ:
ஹில்லாரி 54%
ஒபாமா 44%

ரோடஸ் தீவுகள்:
ஹில்லாரி 58%
ஒபாமா 40%

வெர்மாண்ட்:
ஒபாமா 60%
ஹில்லாரி 34%

மூன்று மாநிலங்களில் ஹில்லாரி வெற்றி பெற்றாலும் கூட, தற்போதும், ஒபாமாதான் ஒட்டு மொத்தத்தில் கூடுதலாக 86 பிரதிநிதிகள் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார். தற்போதைய நிலவரம் இதுதான்:

பாரக் ஒபாமா 1477
ஹில்லாரி 1391

‘ஒஹையோவின் தீர்ப்புதான் அமெரிக்காவின் தீர்ப்பு’ என்றும், ஒஹையோவில் வெற்றி பெற்றவர்தான் கட்சியின் வேட்பாளராக கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும், அதனால் அதிபர் தேர்தலில் தானே கட்சி வேட்பாளர் ஆவேன் என்றும் ஹில்லாரி கிளிண்டன் எக்காளமிட்டுச் சொல்கிறார். ஆனால், இன்னமும் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் நிற்கும் பாரக் ஒபாமா, நிச்சயமாக வெல்வேன் - ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவேன் என்று அழுத்தமான நம்பிக்கையுடன் கூறுகிறார். போட்டி பலமாகி விட்டது, பரபரப்பு மிகுந்து விட்டது, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில். இதுவரை எக்காலமும் ஏற்பட்டு இராத, போட்டியும், உலகளாவிய முக்கியத்துவமும் ஏற்பட்டு விட்டது. இதேவேளையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெடீநுன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டார்.

புவியெங்கும் உள்ள கோடானுகோடிப் பேர் இதயங்களில் அதிர்வு அலைகளை எழுப்புகிற பாரக் ஒபாமாவின் பிறப்பு, வளர்ப்புப் பின்னணியை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்....

Monday, June 2, 2008

Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-1


பாரக் ஒபாமா!
வட துருவமாம் அலாஸ்காவில் தொடங்கி, மேற்கே பசிபிக் கடற்கரையில் இருந்து, கிழக்கில் அட்லாண்டிக் கடல் ஓரம் வரை - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும் சொற்கள் ‘‘ஆம்; நம்மால் முடியும் - Yes; We Can" ஒரு பிரளயத்தின் ஆவேசத்தை உள்ளடக்கிய சொற்கள் அவை! அனைத்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும் காந்தக் கல்லாகிய சொற்கள்.




‘முடியாது என்ற சொல்லுக்கு என் அகராதியில் இடம் இல்லை’ என முழங்கிய மாவீரன் நெப்போலியன்கூட, செயிண்ட் எலினாவில் முடங்கிப் போனான். கற்பனைக்கும் எட்டாத சாதனைகளைத் தங்கள் பெருமுயற்சியால் சாதித்துக் காட்டியோர் பலர் சரிதத்தில் உண்டு. ஆனால், அரசியல் அரங்கத்தில் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத அதிசயம் ஒன்று அரங்கேறிக் கொண்டு இருக்கிறது, அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில்!

நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட சிந்தனை அரண்களைத் தகர்த்து, மாற்றத்துக்கு முடிசூடுவதுதான் புரட்சி. போர்பூமிகளில் - இரத்த ஆறுகளின் கரைகளில் - அத்தகைய புரட்சிகள் - பிரெஞ்சு நாட்டில், பின்னர் சோவியத் ரஷ்யாவில், செஞ்சீனத்தில், இப்படிப் பலப்பல!
ஆனால், அமெரிக்காவில் இன்று நடப்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வக் காட்சி! ஒருக்காலும் எது நடக்காது, ஒருபோதும் எது நடவாது என உலகம் நினைத்ததோ, அது நடக்கிறது அங்கே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏன் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இப்பொழுது அமெரிக்காவில் அரங்கேறும் காட்சிகள் நடப்பதாக ஒருவன் சொன்னால், கைகொட்டி நகைத்து இருப்பர்.

சூரியன் மேற்கில் உதிக்கிறான்; வடதுருவமும், தென்துருவமும், தழுவிச் சங்கமித்தன; எருக்கஞ்செடியில் முல்லை பூக்கிறது; கடல்நீர் தித்திக்கிறது; இதைக்கூட நம்புவோம். ஆனால், வெள்ளை மாளிகையில் - அதிபர் நாற்காலியில், ஒரு கருப்பு மனிதனா? கனவிலும் நடவாது - கற்பனையிலும் கூடாது; இப்படித்தான் கூறி இருப்பர். ஆனால், கனவுக்கும், கற்பனைக்கும் எட்டாத அரசியல் அதிசயம் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது.

இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின், கென்யா நாட்டின், கருப்பு நீக்ரோவின் மகன் - அமெரிக்க மண்ணின் மைந்தனாகவே பிறக்கிறான் ஆனலூலுவில். அக்கருப்பு நித்திலம், உலகுக்குக் கிடைத்த நாள் 1961 ஆகஸ்ட் 4. மனிதகுலம் எத்தனையோ விசித்திரங்களைத் தன் பயணத்தில் சந்திக்கிறது. அப்படி ஓர் அடையாளம்தான் இந்த மனிதனும். காலத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறான். அப்படித்தான் அவன் பெயரும் அமைந்து உள்ளது. இன்றைக்கு உலகில் அதிக உதடுகள உச்சரிக்கும் பெயர் - ‘‘பாரக் ஒபாமா’’ ‘பாரக்’ என்ற சொல்லின் எபிரேய வேர்ச்சொல்லுக்கு - ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று பொருள்.

யார் இந்த பாரக் ஒபாமா?

அவர்தான் 2008 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் நடைபெற இருக்கின்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட, உட்கட்சித் தேர்தல் களத்தில் நிற்கிறார். பிரமிப்பு - பரபரப்பு - திகைப்பு - மலைப்பு - வியப்பு - எதிர்பார்ப்பு - இத்தனையும் அவர் பெயரைச் சுற்றியே சுழல்கின்றன - அமெரிக்கா முழுமையும்!

வெள்ளை மாளிகையிலா? அங்கே மகுடபதியாக ஒரு கருப்பரா? மேற்கில் தோன்றும் உதயம் அன்றோ என நான் எழுதிடக் காரணம் நிறையவே உண்டு.
ஸ்பெயின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட கொலம்பஸ், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ‘இங்கே ஓர் புதிய உலகம்’ இருக்கிறது என வட, தென் அமெரிக்கக் கண்டங்களை அடையாளம் காட்டியபின், காலனி வேட்டைக்குப் புறப்பட்ட ஐரோப்பியர்கள், அங்கே குடியேறினார்கள். பல்வேறு காரணங்களால், பல இனத்தவரும் அங்கே சென்றனர். உருளைக்கிழங்குப் பஞ்சத்தில் அடிபட்ட அயர்லாந்தவர், பிழைப்புத் தேடிச் சென்றனர். அப்படிக் குடியேறியவர்கள், ஆடு மாடுகளைக் கொண்டு போவது போல், ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பர்களை இறக்குமதி செய்தனர். பண்ட பாத்திரங்களைவிட இழிவாக இக்கருப்பர்கள் நடத்தப்பட்டதால்தான் ‘இறக்குமதி’ என்றேன். பிலடெல்பியாவில் செய்யப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில், ‘‘அனைத்து மனிதர்களும் சமம்’’ என்ற கோட்பாட்டை வெளியிட்டார்கள்.

ஆனால், மனிதர்கள் என்பதற்கான இலக்கணத்தில், கருப்பர்கள் இணைக்கப்படவே இல்லை. அக்கருப்பு இன மக்கள் பட்ட அவதி, இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரிக்க இயலாது. இலாயத்தில் பூட்டப்பட்ட குதிரைகளைவிட, தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளைவிட, பண்ணைகளில் அடைக்கப்பட்ட பன்றிகளைவிட, வீடுகளுக்கு உள்ளே உலவிய நாய்களைவிட மோசமாக வதைக்கப்பட்டனர். திராவிட பூமியில் ஊடுருவிய வருணாசிரமமும், மனுதருமமும் இழைத்த கொடுமைகளைவிடக் கொடூரமானவை அங்கு நடந்தவை.

நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது? தமிழகத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது? பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது? தூர தேசங்களில் நடப்பது என்ன? எங்கே கலகம் விளைகிறது? எங்கே புரட்சி கருக்கொள்கிறது? எங்கே மாற்றம் விளைகிறது? என்ற அனைத்து உலகச் செய்திகளை எல்லாம், தன் பேனாவைத் தகவல் களஞ்சியமாக ஆக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா.

தரணியில் நடப்பதையெல்லாம் தம்பிகளுக்குச் சொன்னார். உலகத்துச் செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ளும், கணிப்பொறி அன்று இல்லை; இணையதளம் அன்று இல்லை; ஏன், இன்றைய நுட்பமான தொலைக்காட்சியும் இல்லை. எனினும், கானா நாட்டைப் படம்பிடித்தார், என்க்ருமாவைச் சித்தரித்தார், ஜோமோ கென்யாட்டாவைச் சொல்லி மகிழ்ந்தார். இரும்புத்திரையின் சட்டாம்பிள்ளைக்கு மார்ஸல் டிட்டோ சட்டை செய்யவில்லை என்பதை, பிரெஞ்சு நாட்டின் டிகால், கனடாவின் கியூபெக்கில் முழங்கியதை, அயர்லாந்து விடுதலை நாயகன் டிவேலராவை, துருக்கியின் கமால் பாட்சாவைக் கண்முன்னால் நிறுத்தினார். மலாயாக் காடுகளில், இலங்கையின் தோட்டங்களில், பர்மா ரங்கூன் வீதிகளில் அல்லல்படும் தமிழனின் துன்பம் தீராதோ? அவலம் நீங்காதோ? எனும் உணர்ச்சியை ஊட்டினார்.

தோழர்களே!

இதோ பிப்ரவரி 20 ஆம் நாள், கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ பதவியைத் துறந்ததும், ‘இலட்சியங்களின் சிப்பாயாகத் தொடர்வேன்’ என உரைத்ததும், சிலிர்க்க வைக்கும் செய்தி! 1959 இல் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் இராணுவத்தை முறியடித்து, .....வானா வீதியில் வெற்றிக்கொடியுடன், புரட்சிப்படையுடன், பிடல் காஸ்ட்ரோ வலம் வந்த வரலாற்றுத் திருப்பத்தை, அன்று தம்பிக்கு மடலாகவரைந்ததும் அண்ணாதான்!

உலகப் பூந்தோட்டத்தில் ஒரு புதிய மலர்க்கொடி பூக்கிறது. அகிலத்தின் வரைபடத்தில் ஒரு புதிய தேசம் பிறக்கிறது. ஆம்; செர்பிய ஆதிக்கத்தில் இருந்து முழு விடுதலை பெற்று, இருபது இலட்சம் அல்பேனிய இன மக்களைக் கொண்ட ‘கொசோவா’ சுதந்திர இறையாண்மையுள்ள நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துவிட்டது. பிப்ரவரி 17 ஆம் நாள், நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் மகிழ்ந்து பூரிக்கும் நாள்! ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து விட்டது. நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரவு அளிக்கின்றன. அடிமைச்சவுக்கை வீசிய செர்பியா கொதிக்கிறது. தேசிய இனங்களைக் காலடியிலே போட்டு நசுக்க முயன்றதால், தனது வல்லரசு மண்டலம் துண்டுதுண்டான பின்பும் பாடம் கற்றுக்கொள்ளாத ரஷ்யா, கோபத்தால் மிரட்டுகிறது. கொலைவெறி ஆட்டம் போடும் சிங்கள இனவாத அரசு, ‘ஐயோ, இது அடுக்குமா?’ என ஊளையிடுகிறது.

தோள்தட்டி வரவேற்போம் - கொசோவாவின் விடுதலையை! பல்லாண்டு பாடுவோம் அச்சுதந்திரப் பிரகடனத்துக்கு! இனக்கொலை புரியும் எதேச்சதிகார அரசுகள், வரலாற்றின் புதைகுழிக்குப் போவது, தடுக்க முடியாத சம்பவத் தொகுப்பு ஆகும். சாத்தியமே இல்லை என்று சொல்லப்படுபவை நடப்பதுதான் மனிதகுல வரலாறு. அப்படி இடம் பெறுகிற ஒரு மாற்றம்தான், அமெரிக்க அரசியல் விதானத்தில்தோன்றும் காட்சி.

எங்கள் அண்ணனே! மணலுக்குள் தவம் கொள்ளும் எங்கள் தங்கமே! நீ புவியில் உதித்து நூறு ஆண்டுகள். உன் எண்ணமும், சிந்தனையும் ஆகாயம் அளாவியவை. மிசிசிப்பி நதிக்கரையில், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட கருப்பு மனிதர்களுக்காக, உனது உறங்காத உள்ளம் அன்று அழுதது. அதனால்தான், ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பில், 1966 ஆம் ஆண்டு, தம்பிக்கு மடல் தீட்டினாய். ஒன்றல்ல - இரண்டல்ல, பத்து மடல்கள். ஏறத்தாழ இரண்டரை மாதம்.

நம் தமிழகமோ அடுத்த பத்து மாதங்களில் சந்திக்கப் போகும் சரித்திர மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தது. ஆம்; அண்ணன் உருவாக்கிய கழகம். 1967 பொதுத் தேர்தலுக்குத் தன் முழு பலத்தையும் திரட்டி ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நேரம். ஆனால், அதைப்பற்றி எழுதுவார் அண்ணா என தம்பியர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நேரத்தில், அண்ணா அவர்கள், இந்த இரண்டரை மாத காலம் எதைப்பற்றி எழுதினார்?

இன்று நடப்பதைப் போல அன்று அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஒரு கருப்பர் இனத்தவன் வேட்பாளர் ஆகி விட்டானா? இல்லை. இர்விங் வாலஸ் என்ற ஒரு நாவல் ஆசிரியர் எழுதிய ‘தி மேன்’ என்ற தலைப்பிட்ட புதினத்தில் வரும் கற்பனைச் சம்பவங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

அறிஞர் அண்ணாஅவர்கள் திராவிட நாடு ஏட்டிலும், காஞ்சி ஏட்டிலும், தம்பிக்கு எழுதிய கடிதங்கள், அழியாத இலக்கியம் - சரித்திரப் பெட்டகம். பண்டித நேருவின் உலக சரித்திரக் கடிதங்களை நிகர்த்தவை. வியப்பு ஊட்டும் செய்தி யாதெனில், ஒரே பொருளைப் பற்றி அவர் அதிகக் கடிதங்கள் தம்பிக்கு எழுதியது, 'கைதி எண் 6342' எனும் தலைப்பில். அதற்கு அடுத்து, அவர் அதிக அளவில் பத்து வாரங்கள் ஒரே பொருளைப் பற்றி தம்பிக்கு எழுதிய கடிதங்கள்தாம் ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பிலான மடல்கள் ஆகும். அவரது உள்ளம் என்பது அடக்குமுறையை எதிர்ககும் எரிமலை அன்றோ! அதன் விளைவுதானே, அவர் தீட்டிய ‘ஆரிய மாயை’.
சனாதனத்தின் கொடுமை, அவர் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்ததால்தானே, அவர் கருஞ்சட்டைப் படையில் உலவியதும், தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டதும், ராபின்சன் பூங்காவில் தனது இயக்கத்தைத் தொடங்கியதும், அனைத்துக்கும் அதுதானே அடிப்படைக் காரணம். மனிதனை மனிதன், பிறப்பின் பெயரால் பேதப்படுத்தி வதைப்பதும், சுரண்டுவதும், அழிக்கப்பட வேண்டிய அநீதி என்பதால்தானே, வாலிப மனங்களில் கருத்துப் புரட்சியை விதைத்தார். அவரது சிந்தையும், செயலும் ஒன்றாக இருந்ததால்தான், இர்விங் வாலஸின் புதினம், அவர் மனதில் எழுப்பிய கனவு மாளிகையைத் தம்பியின் மடலில், ஓர் இலக்கியச் சித்திரம் ஆக்கினார்.

இதோ, அண்ணனின் சொற்களையே தருகிறேன்: காஞ்சி கடிதம் - வெள்ளை மாளிகையில் - 1

“தம்பி, வெள்ளை மாளிகை சென்றிடலாம், வருகிறாயா?

அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு ‘‘வெள்ளை மாளிகை’’ என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன?

மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை, அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.

வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; ‘மனிதன்’ என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்றே தலைப்பிட்டுள்ளார்.

அந்த ‘மனிதனை’க் காண்பதற்காகவே உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன். அந்த வெள்ளை மாளிகையில், ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார். ‘மனிதன்’ எனும் ஏடு எழுதி உள்ள இர்விங் வாலஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, எனக்கு ஒரே ஆவல், அதை உன்னிடம் கூற வேண்டும் என்று.

ஒரு கருப்பு மனிதர் வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து, ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்? துணிந்து, ஆனால் தூய நோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கேகூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள் நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல், ஒரு கருப்பரை குடி அரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.

‘நீக்ரோக்கள்’ மனித இனத்திலே தாடிநந்தவர்கள்; அமெரிக்கர்களை விட மட்டம்; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர், அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை!

‘நீக்ரோக்கள்’ அமெரிக்கரின் உடைமைகள்’; எனவே, அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை. சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா? என்ற பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா!

‘என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பைமேட்டிலும் வீசுவேன். இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!’’ என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்கிரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா?

அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமை பெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்த நிலை இருந்தது. தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல நுhல்களில் ஒன்று, ‘டிரம்’ (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது!

‘டிரம்’ என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் அரசாளும் உரிமை பெற்ற மரபினன்கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள், அமெரிக்கப் பண்ணையாருக்கு! அமெரிக்காவில் பருத்தி, கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும், கண்ணீரும்கூடத்தான்.

அப்படி ஒரு பண்ணையில் ‘டிரம்’ பாடுபட்ட சோகக் காதைதானே இது என்று எண்ணுகிறாயா தம்பி? அதுதான் இல்லை. இந்த ‘டிரம்’ வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில். விளங்கினாலோ, வேதனை உணர்ச்சி அடங்க நெடுநேரம் பிடிக்கும்.

ஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து, அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள். கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம். அப்போது அவர்கள் வியாபாரிகள். கடலிலே வலைவீசி மீன்பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லையா, மான்களையும், காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.

விலை கொடுத்து வாங்கிய அடிமை, உழைத்து உழைத்து ஓடாகி உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்துபோய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாக ஆக, இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டு வந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது. புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாக ஆக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்துகொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்துகொண்டே வந்தது.

அதிகச் செலவு, வலிவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவில இருந்து புதிது புதிதாக, தொகைதொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, அமெரிக்காவிலே இடம் பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? "அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே ‘பிறப்பு’ அதிகமானால், புதியபுதிய அடிமைகள் கிடைப்பார்கள் அல்லவா?" என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, ‘நீக்ரோ உற்பத்திப் பண்ணை’ அமைத்தான்.

கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள், தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும், தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதைவிட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படிச் செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.

நீக்ரோப் பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல், வேளா வேளைக்கு உணவு அளித்துத் தனி விடுதிகளில் இருந்திடச்செய்து, அதுபோன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்திரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையானால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிறவரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது, குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது, இப்படி ஒரு பண்ணையை நடத்தினான் அந்தப் பாதகன்.

கணவன்-மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய்-மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்பட விடுவதில்லை. ஆண்-பெண்-குழந்தை என்ற ஒரு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட அடிமை என்றால், கிராக்கி அதிகம். பேசிக்கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழையகோட்டைக் காளை, மூரா எருமை என்று ‘ரகம்’ பற்றி. அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!

இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி, ‘முரசு’ என்ற நீக்ரோ வாலிபன், அடிமைச் சந்தைக்கு ஆட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக! அவன் பட்டபாடு, அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டு இருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை. நீக்ரோக்கள் விசயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக்காட்ட மட்டுமே டிரம் பற்றிய நூலினைக் குறிப்பிட்டுக் காட்டினேன்.

அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா? ‘மனிதன்’ எனும் நூல் அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும், ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

”தொலைநோக்குச் சிந்தனையும், வரும்பொருள் உரைக்கும் வல்லமையும், புதுயுகத்தில் விளைய வேண்டிய மாற்றம் பற்றிய வேட்கையும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சின் அலைகளைத்தான், தம்பிக்குத் தந்த மடலில் கண்டீர்கள். அவரது கருத்துகள், நம் இதயச் சுவர்களில் கல்வெட்டுகள் அன்றோ!

அண்ணா அன்று சொன்னதும், இன்று நடப்பதும், வெள்ளை மாளிகையில் மணிமகுடத்தில் ஒரு கருப்பு வைரம் ஒளிவீசும் நிலை மலர்வதும், நம் சிந்தனைச் சமவெளியில் பாயும் தேனாறு! சந்தன வாசம் வாரி வரும் பூந்தென்றல்! தழுவிடும் தென்றலில் திளைப்போம்!

உலகத்தின் கவனத்தை ஒருசேர ஈர்த்து இருக்கின்ற இன்றைய பாரக் ஒபாமா தேர்தல்களம் குறித்தும், கண்ணீர்க் காவியமான அன்றைய கருப்பர்களின் வாழ்வு குறித்தும் தொடர்ந்து உங்களுக்கு மடலாகத் தருவேன்.

தொடரும்...

Tuesday, January 29, 2008

வைகோ உயிரை ராஜீவ் காந்தி காத்தாரா?

திங்கள்கிழமை, ஜனவரி 28, 2008

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.

இன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

வைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

அவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2008/01/28/tn-vaiko-owes-his-life-to-rajiv-gandhi-congress.html

Tuesday, August 28, 2007

மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்

திருநெல்வேலி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது.
(http://thatstamil.oneindia.in/news/2007/08/17/vaiko.html). அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


"உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல" என நெல்லையில் வைகோ பேசினார். தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர. இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.
உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம் அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.

உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,தூரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான்.

எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது. இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.

செய்தி:
http://dinamalar.com/2007aug27/political_tn1.asp

Monday, August 20, 2007

கல்கி புகழ் விழா! வைகோ

தேனில் தோய்த்த பலாவாக, ஆகஸ்ட் 11, தலைநகர் சென்னையில், அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஏற்பாடு செய்த, கல்கி புகழ் விழா அமைந்தது. தியாகராய நகரில் விஜய மகாலில், மாலை சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது. கல்கி அவர்களின் புதல்வர் கி.இராஜேந்திரன் அவர்களும், கல்கி குடும்பத்தினரும் வந்து இருந்தனர். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாகக் கலந்துகொண்டனர். எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு, கல்கி விருது வழங்கினேன்.

எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள், கல்கியின் ‘தியாகபூமி’ நாவல் குறித்தும், பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள் கல்கியின் ‘அலை ஓசை’ நாவல் குறித்தும் உரையாற்றியபின்பு, கல்கியின் 'சிவகாமியின் சபதம்’ எனும்தலைப்பில் என் உரை அமைந்தது.

விழாத் தலைவர் விக்கிரமன் அவர்களின் பெருமுயற்சியில் நடந்தது இந்த விழா. இதற்கு உறுதுணையாக உழைத்தவர், ஆருயிர் இளவல் தஞ்சை உதயகுமார் ஆவார். தமிழ் சரித்திரநாவல்களைத் தீட்டியவர்களின் வரிசையில், முதல் இடம் பெறும். ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நாவலை எழுதிய வடலூர் வள்ளலார் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியோர் பெயர்கள் அனைத்தையும், இங்கிலாந்தின் வால்டர் ஸ்காட் உள்ளிட்ட மேலைநாட்டுச் சரித்திர நாவல் ஆசிரியர்கள் குறித்தும் முகப்பு உரையாகச் சொல்லி, விடுதலைப் போரில் மூன்று முறை சிறை சென்ற கல்கி அவர்கள், கால்களில் விலங்குக் காப்பும், சங்கிலியும் கட்டப்பட்டு, 14 நாள்கள் சிறையில் அடைபட்ட கொடுமையையும் சொன்னேன்.

கதர் இயக்கத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் மிக்கஈடுபாடு கொண்டு இருந்த கல்கி அவர்கள், 1947 இல் அன்றைய காலகட்டத்தில் அரசியலில், சமயங்களில் அவரது கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டு இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் படைப்பைக் குறித்து எவ்வளவு உயர்ந்த மதிப்புக் கொண்டு இருந்தார் என்பது, கல்கிக்குப் புகழ் மகுடம் சூட்டுவது ஆகும். இதோ, அண்ணா அவர்களைப் பற்றிக் கல்கி 1947 டிசம்பரில் கல்கி இதழில் கீழ்கண்டவாறு எழுதினார்.

‘தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட்ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒருகுரல் அழுவது வழக்கம். ‘நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு பெர்னார்ட்ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கேபோவது? திருடப் போக வேண்டியதுதான்’ என்றுசொல்வார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம். தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ஓர் இரவு எனும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. (திருச்சி இரத்தினவேல் தேவர் மண்டபத்தில், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி நாடகக்குழுவினர், அறிஞர் அண்ணாவின் ஓர் இரவுநாடகத்தை நடத்தினர். 15.11.1947 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குக் கல்கி தலைமைஏற்றார்.) பார்த்ததன் பயனாக, இதோ ஒரு பெர்னார்ட்ஷா தமிடிநநாட்டில் இருக்கிறார். கிப்சனும் இருக்கிறார். இன்னும் கால்ஸ் வொர்த்தியும்கூட இருக்கிறார் என்று தோன்றியது. நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிகவும் அரியது. அந்த ஆற்றல், திரு. அண்ணாத்துரையிடம் பூரணமாக அமைந்து இருக்கிறது என்பதை ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்.’’ என்று எழுதினார்.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ எனக்கூறிய அண்ணா அவர்கள், கல்கி அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'சரித்திர நவீனங்களின்பால், சமையல்கட்டுகளும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்’ என்றார்.

1932 ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை நேரத்தில் மாமல்லபுரத்துக் கடற்கரையில், அமர்ந்து இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி. அவர்கள், ‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்ட குறை வந்து தொட்டாச்சு’ எனக் கூறிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் கவிதை வரிகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 1300 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மாமல்லபுரத்தில், அற்புதமான சிலைகள் வடிக்கப்பட்ட காலமும், மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் பற்றிய எண்ணமும், அதனால் என் மனதில் எழுந்தகனவுகளும், 12 ஆண்டுகள் கழித்து ‘சிவகாமியின் சபத’மாக உருப்பெற்றது எனத் தெரிவித்த கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம், காதலும் வீரமும் தமிழர் மானமும், கலையும், சிகரத்தின் உச்சியில் ஒளிதந்த காட்சிகளின் உயிர் ஓவியம்தான் என்பதை இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சிக்கு வந்தோரில் பெரும்பாலோர், நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள். கடைசிவரை ஒருவர்கூட அசையவில்லை. ஈடுபாட்டுடன் கேட்டனர் என்பது பெருமிதம் அளிக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ உரையையும், ‘சிவகாமியின்சபதம்’ உரையையும் ஒரு நூலாக ஆக்கிட எண்ணிஉள்ளேன்.

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள்வளரட்டும்!

பாசமுடன்

வைகோ

இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி ஈழம் மலர்ந்திருக்கும்: வைகோ

செஞ்சி, ஆக.21: இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வைகோ பேசியது:

18 ஆண்டுகளுக்கு முன் வவுனியா காட்டில் கரும்புலிகளின் பயிற்சிக் கூடத்தில் மத்தியில் அமர்ந்திருந்தேன். இப்போது இங்கே கருப்புச் சட்டை அணிந்திருக்கும் பகுத்தறிவு இளைஞர்களின் மத்தியிலே அமர்ந்திருப்பது பழைய நினைவை எனக்கு ஏற்படுத்துகிறது.

30 ஆண்டுகளாக திமுகவை காத்து வளர்த்து வந்தேன். என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டது. இச்செய்தி அறிந்ததும் ஆயிரம் பாம்பு கடித்தது போலவும், ஒரு லட்சம் தேள் கொட்டியது போலவும் துடித்தேன்.

ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயுதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு முயல்கிறது.

தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன் சிங் அரசு. தமிழ் ஈழம் மலர்வதை உலகில் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தமிழர்களுக்கு தனி நாடு தர முடியுமா? என்று ஆலோசனை செய்து வருகிறேன் என்று இந்திரா பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது நமக்கு துரதிர்ஷ்டமாகப் போய் விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்நதால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்றார் வைகோ.

விழாவுக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மா.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர் மு.சுப்பிரமணி வரவேற்றார். தலைமைத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார்.

மாவட்டப் பொருளர் மா.சுப்பிரமணி, மாநிலக் கொள்கை விளக்கச் செயலர் மு.குமார், பேராசிரியர் அ.பெரியார், பாடகர் நா.காத்தவராயன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.ஏழுமலை உள்ளிட்ட மதிமுகவினர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டச் செயலர் டாக்டர்.இரா.மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.
---------------------------------------------------------------
நன்றி: தினமணி நாளிதழ் (21.08.2007)

Sunday, August 19, 2007

இலக்கியங்களில் மனித உரிமைகள்: வைகோ

நண்பர்களே! ‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரியில் ஆற்றிய உரை பற்றி சங்கொலி 24.08.2007 இதழில் வைகோ எழுதிய கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வைகோவின் கடிதத்திலிருந்து.....
இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் நான் உரை ஆற்ற வேண்டும் என பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் என்.ராஜகுமார் அழைப்பு விடுத்து இருந்தார். ‘நடை பயிலும் முன்பே கொடை பயிலும் கொங்கு நாடு’ என்ற பெருமைக்கு உரிய அப்பகுதியின் சீர்மிகு நல்லமுத்துக் கவுண்டர்அவர்களும், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் தந்தையார் திரு.நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் அருந்துணையுடன், 1957 இல் தொடங்கிய இக்கல்லூரியின் பொன்விழாவின் நுழைவாயில்நிகழ்வாகக் கல்லூரித்தமிழ்த் துறையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் நான் பங்கு ஏற்றதாகும்.

ஆகஸ்ட் 7 ஆம் நாள் அன்று, காலையில் கோவை சென்ற நான், கோவை மருத்துவ மையம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வருகின்ற கழகப் பொருளாளர் ஆருயிர் அண்ணன் கண்ணப்பன் அவர்களைச் சந்தித்து அளவளாவிவிட்டு, பொள்ளாச்சி சென்றேன்

இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் பயிலும் இக்கல்லூரியில், அன்பு காட்டி ஆர்வத்துடன் கல்லூரிச் செயலர் எஸ்.கே.கல்யாணசுந்தரம் அவர்களும், முதல்வர் என்.ராஜகுமார் அவர்களும், பேராசிரியர்களும் என்னை வரவேற்க, நிகழ்ச்சி சரியாக பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியது. சிந்தனைக்குக் கிளர்ச்சி ஊட்டும் தலைப்பு. உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவதற்கு இடமும், அடிப்படை உரிமைகளாக உத்தரவாதம் ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படைக் கோட்பாடு அமைத்தவன் தமிழன். அதனால்தான்,
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்
என மிக அழுத்தமாகச் சொன்ன திருவள்ளுவரைச் சுட்டிக்காட்டி, காணார், கேளார், கால் முடமானோர், பேணா மாக்கள், பேசார், பிணித்தோர், பசி நோய் உற்றோர் அனைவரும் வருக’ என, துன்புறும் மக்களுக்கு அருமருந்தாக அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையை நினைவூட்டி, மணிமுடிவேந்தனை நோக்கி, ‘தேரா மன்னா’ என எரிமலையாய்ச் சீறி நீதி கேட்ட தென்தமிழ்ப் பாவை கண்ணகியின் புகழ் விளித்து, ‘நமனையும் அஞ்சேன்’ என்ற நாவுக்கரசரின் உரிமை முழக்கத்தை, எடுத்து இயம்பினேன்.

மனித உரிமைகளை நிலைநாட்ட எழுந்தவைதான், வரலாற்றின் மைல் கற்களான புரட்சிகள். ஒவ்வொரு புரட்சிக்கும், அந்த எரிமலையின் நெருப்புக் கர்ப்பத்தில் கனன்றவை இலக்கியங்கள்தாம்.

பிரெஞ்சுப் புரட்சி 1789:
கிரேக்கத்தில் சிந்தனைப் புரட்சியைத் தொடுத்தசாக்ரடீசின் வாழ்க்கையை அரியதோர் நாடகம் ஆக்கினான் வால்டேர்.

‘மனிதன் சுதந்திரமாகவே பிறக்கிறான். ஆனால், எங்கும் அவன் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான்’ என்ற ரூசோவும், வால்டேரும் தீட்டிய இலக்கியங்களான கதைகளில், நாடகங்களில் மனித உரிமைகளை நிலைநாட்ட ஊட்டப்பட்ட உணர்ச்சியைப் பட்டியல் இட்டேன். அந்தப் பிரெஞ்சுப் புரட்சியை ஓர் சரித்திர நாவல் இலக்கியமாகத் தந்தவன், இங்கிலாந்தின் கார்லைல்.

முதல் மனித உரிமைப் பிரகடனம் 1812:

அடக்குமுறைக்கு ஆளாகி, இரத்தம் சிந்தி உயிர்ப்பலியான, தொழிலாளர்களுக்காக, ஆவேசம்கொண்டு கவிஞன் ஷெல்லி தீட்டிய நெருப்புக்கவிதைதான் ‘அராஜகத்தின் முகமூடி’ (Mask of anarchy). நீங்கள் விதைக்கிறீர்கள்; எவனோ அறுக்கிறான், நீங்கள் செல்வத்தைத் தேடுகிறீர்கள்; எவனோ குவிக்கிறான், நீங்கள் நெய்கிறீர்கள்; எவனோ அணிகிறான். நீங்கள் வார்ப்பிக்கிறீர்கள்; அந்த ஆயுதங்களை எவனோ ஏந்துகிறான்.

இனிமேல், நீங்கள் விதையுங்கள்; எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள். செல்வத்தைத் தேடுங்கள்; எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்கவிடாதீர்கள், ஆடைகளை நெய்யுங்கள்; எந்தச் சோம்பேறியையும் உடுத்த விடாதீர்கள்.ஆயுதங்களை வார்ப்பியுங்கள்; நீங்களே ஏந்துவதற்காக! கவிஞன் ஷெல்லி, 1812 இல் எழுதியதுதான் ‘மனித உரிமைப் பிரகடனம்’ நீட்டியவாள் முனைக்கு அஞ்சி, மன்னன் ஜான் கையெழுத்து இட்ட மேக்னா கார்ட்டா (Magna Carta) மனித உரிமைச் சாசனம் வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உதித்ததுதான் ஷெல்லியின் பிரகடனம். அப்பிரகடனத்தை எழுதியதாள்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நீரோடைகளிலும், நதிகளிலும் வீசப்பட்டன. பலூன்களில் கட்டி அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் வெளியான பிரகடனம்தான், 1948 டிசம்பர் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம்.

ஷெல்லியின் பிரகடனத்தின் உட்பிரிவுகள் 31. ஐ.நா. பிரகடனத்தின் உட்பிரிவுகள் 30. இக்கவிஞனின்குரல் பட்டுத் தெறித்த இன்னொரு பிரகடனம்தான், மார்க்சும், எங்கெல்சும், 1848 இல் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’. ‘உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழக்கப் போவது எதுவும் இல்லை, விலங்குகளைத் தவிர’ என்று எழுந்தது அந்த முழக்கம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அமெரிக்க நாட்டில், அடிமை காரிருளில் தவித்த கருப்பு இன நீக்ரோக்கள், மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்ட காலம் அது. சகிக்கவே முடியாத இக்கொடுமையைக் கண்டு மனம் குமுறிய பெண்மணிதான் உலகப் பிரசித்திபெற்ற,
Uncle Tom’s Cabin எனும் அற்புதமான கண்ணீர்க்காவியம் தீட்டிய ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ இந்த நூலை எழுதிய ஆண்டு 1852. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1862 இல், அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், இந்த மனித உரிமை இலக்கியப்படைப்பாளியைப் பார்த்து, ‘நீங்கள்தானா அந்தப்பெண்மணி? இப்பொழுது நடக்கின்ற அமெரிக்க உள்நாட்டுப் போரே உங்களால்தானே’ என்றாராம். ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு செய்தி என்னதெரியுமா? அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இந்தப் புத்தகம், இங்கிலாந்துநாட்டில் அதிகப் பிரதிகள் விற்பனையான இந்தப் புத்தகம், இதைப்படிக்க நேர்ந்த வாசகர்களின் கண்களை அருவியாக ஆக்கிய இந்தப் புத்தகம், ‘நீக்ரோக்களின் அடிமை விலங்கை உடைப்பேன்’ என ஆபிரகாம் லிங்கன் சபதம் செய்யக் காரணமான இந்தப் புத்தகம், வழக்கமான எழுத்தாளர்கள் எழுதும் முறையில், முதல் அத்தியாயத்தில் தொடங்கி எழுதப்படவில்லை. இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைத்தான் ஹேரியட் அம்மையார் முதன் முதலில் எழுதினார். எழுதிவிட்டுத் தன்பிள்ளைகளிடம் வாசித்துக் காண்பித்தார். அதைக் கேட்டுப் பிள்ளைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.


ருஷ்யப் புரட்சி:
மாமேதை லெனினை மிகவும் கவர்ந்தது, ‘26 பேரும்அந்த இள நங்கையும்’ என்ற மாக்சிம் கார்க்கியின் நூல் ஆகும் என்று லெனினின் துணைவியார் குருப்ஸ்காயா குறிப்பிட்டு உள்ளார். ஈர நிலவறையில் நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய 26தொழிலாளர்களின் அவலத்தில் பங்கு ஏற்ற 16 வயது நங்கை தானியா கதைதான் அது. ருஷ்யப் புரட்சிக்குக் கருவாக அமைந்த இலக்கியங்களை விவரித்தேன்.

சீனப்புரட்சி:

‘நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முகிழ்க்கட்டும்’ என்ற கவிஞன் மாவோ, நடத்திய சீனப் புரட்சிக்குத் துணை நின்ற படைப்புகளைச் சுட்டிக்காட்டிய நான், நிகழ்கால அதிசயமாய் இன்னும் தலை தாழாமல் கம்பீரக் குரல் கொடுக்கும் ஃபிடல்காஸ்ட்ரோவின் மனம் கவர்ந்த இலக்கியங்களைச் சொன்னேன். அமெரிக்க ஏகாதிபத்தியக் கழுகை விரட்டிய வியட்நாம் விடுதலை வேந்தன், ஹோ-சிமின் காலத்துப் படைப்புகளைச் சொன்ன நான், மனித உரிமைகளுக்காக 27 ஆண்டுகள் ரோபென் தீவுச் சிறையில் வாடிய நெல்சன் மாண்டேலாவுக்கு உணர்ச்சி ஊட்டிய நூல்தான் ரஸ்கின் எழுதிய ‘Unto this last’ (கடையனின் கடைத்தேற்றம்) என்பதைக் கூறியதற்குக் காரணமே, இதே புத்தகம்தான் என்வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்று, 1942 இல் அண்ணல் காந்தியார் கூறியது, சிந்தனைக்கு விருந்து அன்றோ?
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட இந்தியாவில், வடபுலத்தில் எழுந்த இலக்கியங்களில், நாவல் ஆசிரியர் பிரேம்சந்தின் ‘ரங்கபூமி’யைக் குறிப்பிட்டேன். ஏழை, எளியோரின், சிறிது அளவுநிலங்களையும், பண முதலைகள் கபளீகரம் செய்வதும், நிராதரவாக ஆக்கப்பட்ட அந்த ஏழைகள் செத்து மடிவதும் இன்றுவரை நீடிக்கிறதே, அதனைத்தான் பிரேம்சந்த் படம்பிடித்து உள்ளார்.
எங்கே அச்சம் என்பது இல்லையோ, எங்கே அறிவுதலை நிமிர்ந்து நிற்கிறதோ, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில் என் தாயகம் விழித்து எழட்டும் எனும் உயிர்க் கவிதைகளைத் தந்த கவியரசர் தாகூரின் கவிதைகள், மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் நாவல்கள், ‘பாகிஸ்தான்’ எனும் பிரிவினைக் குரல்எழுவதற்கு முன்னர், கவிஞன் அல்லாமா இக்பால் தீட்டிய கவிதைகள் என வரிசைப்படுத்திய நான், தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமைக் கொடுமைபோல், அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபோல், நம் நாட்டில், மனு தர்மத்தால், வருணாசிரமத்தால், வைதீகக் கொடுமையால் உருவாக்கப்பட்ட அக்கிரமமான அநீதியை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்ட திராவிட இயக்கத்தில், மனித உரிமைகளுக்காக அறிஞர் அண்ணா தீட்டிய எழுத்து ஓவியங்களைச் சொன்னேன்.
வாள் பிடித்துப் பகைக் கூட்டங்களை வென்ற மாவீரன் சிவாஜி, காகபட்டரின் தாள்பிடிக்கும் இழிநிலையா? என்ற கேள்வி எழுப்பிய அவரது ‘சந்திரமோகன்’ நாடகம் உள்ளிட்ட புரட்சி இலக்கியங்களைச் சொன்னேன். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என்று குமுறிய பாரதியை, ‘கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல்அறவே’ எனும் போர்க்குரல் எழுப்பிய பாவேந்தர் தந்தகவிதை இலக்கியங்களை என் உரையில் வைத்தேன்.
என் உரையின் உச்சகட்டமாக அமைந்ததுதான், தமிழ்ஈழத்தில் மனித உரிமைகளுக்காகத் தணலாக எழுந்த கவிதைகள் ஆகும். தமிழ் ஈழத்தில் உரிமை உள்ள மனிதர்களாக வாழ்வதற்காக மரண பூமியில் போராடும் தமிழ் மக்களின் உரிமைப்போரை விவரித்தது ஆகும். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்ததையும், கண்கலங்கியதையும் கண்டபோது, தமிழ் இனம்காக்கும் உணர்வு, நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இந்த நெருப்பை எந்தச் சக்தியாலும் அணைக்க முடியாது என்ற உறுதி எற்பட்டது.
நான் பேசி முடித்தவுடன், அந்த அரங்கத்தில் இருந்த மாணவ மாணவியரும் பேராசியர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கையொலி எழுப்பிப் பாராட்டியபோது, எனக்கே கூச்சம் ஏற்பட்டது.

Saturday, August 18, 2007

இலக்கியத்தில் இளைப்பாறி...

‘‘தாவி வரும் கடல் அலைகளை எண்ணிவிடலாம்; நட்சத்திரங்களை எண்ணிவிடலாம்; கடற்கரை மணலைக்கூட எண்ணிவிடலாம்; கடலுக்குள் துள்ளிக் குதிக்கும் மீன்களின் எண்ணிக்கையைக்கூடச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த திருத்தொண்டர் புராணத்தின் பெருமையை சேக்கிழார் தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது!’’

அக்னி வெயிலாகத் தகிக்கும் அரசியலுக்கு நடுவே, கலைஞருக்கு மட்டுமல்ல... வைகோவுக்கும் இலக்கியம்தான் இளைப்பாறல்! சமீபத்தில் சிதம்பரத்தில் வைகோ ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு ஆச்சர்யப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. திருத்தொண்டர் புராணத்தைப் பற்றிய அவரது பேரருவிப் பேச்சில் இருந்து ஒரு சாம்பிள் இங்கே...

‘‘தொல்காப்பியத்தில், திருக்குறளில், கம்பன் காவியத்தில், வளையாபதியில், திருமுருகாற்றுப்படையில் எல்லாம் உலகம் என்ற சொல்லை முன்வைத்து தான் தொடங்கி இருக்கிறார்கள் தமிழர்கள். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்...’ என்றுதான் தொடங்குகிறார் சேக்கிழாரும்! முடிக்கும் போதும், ‘உலகெலாம்’ என்று முடிக்கிறார். ‘உலகெலாம்...’ எனத் தொடங்கினாலும், தன் தாய் மண்ணின் பெருமையைச் சொல்ல மறக்கவில்லை சேக்கிழார்.

இமயத்தின் உச்சியிலேயே புலிக் கொடியைப் பதித்த சோழ நாட்டின் பெருமையை ‘நீர் நாடு’ என்கிறார். அதாவது, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நாடு என்று அர்த்தம். அடுத்து, திருவாரூர் நகரத்தின் பெருமையையும், தமிழர்கள் போற்றி வளர்த்த பண்பாட்டு நெறியையும், பசுவுக் காக தன் ஒரே பிள்ளையைப் பலிகொடுத்த மனுநீதியின் வாழ்க்கையையும் சொல்கிறார். அனைவரும் சட்டத்துக்கு முன் சமம் என்று ஜனநாயகத்தை உலகத்துக்கு அளித்த சமூக நீதியைச் சொல்கிறார்.

பெரிய புராணத்தின் மையமாக விளங்குபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தமிழுக்குத் தொண்டு செய்ய வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அகவியலை சேக்கிழார் அவ்வளவாக எழுதவில்லை. ஆனால், ஆலயத்தில் நுழைகிற வேளையில் பரவையர் பார்வையில்பட்ட பிறகு, சுந்தரமூர்த்தியின் இதயத்தில் எழுகின்ற உணர்வுகளை சேக்கிழார் சித்திரிக்கும் விதம் கவிதை நயம்’’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றை சிம்மக் குரலில் சொல்லிச் சிலிர்க்கிறார் வைகோ.

‘‘சேக்கிழார் பற்றிப் பேசுகிறேனே, ஆன் மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுவிட் டேனோ என எண்ண வேண்டாம். தமிழை உயிராக நேசிக்கிறோம்; தமிழைப் பெருமைப்படுத்தியவர்களை நேசிக்கிறோம். அதனால், சேக்கிழாரையும் நேசிக்கிறேன்’’ என்று சொல்லிக் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார் வைகோ.

அரசியலோ, இலக்கியமோ... கறுப்புத் துண்டைத் தோளில் முறுக்கிக்கொண்டு நெருப்பாகப் பொறியும் வைகோவுக்கு பேச் சிலும் மூச்சிலும் துளியும் குறையவில்லை நம்பிக்கை!

--------------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன் (15.08.2007 இதழ்)