Friday, June 20, 2008

மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு

சென்னையில் சூன் 18ம் தேதியன்று சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 3ம் மண்டல மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு முன்பு கோவை (16.03.2007), விழுப்புரம் (30.06.20087), ஆகிய நகரங்களில் இரண்டு மண்டல மாநாடுகள் நடைபெற்றுள்ளன.


மதிமுக முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற தொண்டர்படையின் அணிவகுப்போடு மாநாடு தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை 3 மணியளவில் தொடங்கிய தொண்டகளின் அணிவகுப்பு தீவுத் திடலை அடைந்தவுடன் 4 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது.

மாநாடு குறித்து நாளிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வந்த செய்திகள்:

தினமணி செய்தி:

தி.மு.க.வைத் தோற்கடிக்க மக்கள் சக்தியைத் திரட்டுவோம்

சென்னை, ஜூன் 18 : நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க, அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று ம.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை தீவுத் திடலில் ம.தி.மு.க. சென்னை மண்டல மாநாடு புதன்கிழமை மாலை பேரணியுடன் தொடங்கியது.

பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். மாலை 4 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் தொடங்கியது. ம.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டுத் தீர்மானங்கள்: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது. முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில் பக்கத்து மாநிலங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு செய்யும் விதத்தில் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனை காவு கொடுத்து துரோகம் இழைத்து விட்டது.

கண்துடைப்பு நாடகம்: பன்னாட்டு நிறுவனங்களின் யூக பேர வணிகம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் இரண்டு சதவீதம் விற்பனை வரியை குறைத்தது கண்துடைப்பு நாடகம்.

நாடாளுமன்ற, சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்காண பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.

தமிழ் இனத்துக்கு துரோகம்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்கு கொலை செய்யும் கொடுமை ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகி காவல்துறையின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவிகள் செய்வது தமிழ் இனத்துக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேறியது.

சென்னைத் தீவுத்திடலில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டில் "நாடாளுமன்றத்தில்அண்ணா-வைகோ" நூல் வெளியீடு நடைபெற்றது.

(இடமிருந்து) முன்னாள் அமைச்சர் தம்பிதுரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைப்புலி தாணு, பொருளாளர் மு. கண்ணப்பன், செந்தில் அதிபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன், செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

தினதந்தி செய்தி:
விலைவாசி உயர்வு பிரச்சினை: கம்யூனிஸ்டு கட்சிகள் நாடகமாடுகின்றனசென்னை மாநாட்டில் வைகோ பேச்சு:

சென்னை, ஜுன்.19- விலைவாசி உயர்வு பிரச்சினையில் கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகின்றன என்று வைகோ குற்றம் சாட்டினார்.

மாநாடு: ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் மாநில துணை செயலாளர் நாசரேத் துரை தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் மு.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், தீக்குளித்த தியாகிகள் திருவுருவப்படத்தை திருவள்ளூர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் திறந்து வைத்தார். அதே போல் திராவிட இயக்க தலைவர்கள் படத்தை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு திறந்தார்.

நிகழ்ச்சியின் போது, தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் 141 பவுன் தங்க வாள் கட்சியின் பொதுசெயலாளர் வைகோவுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் கட்சி நிதியாக ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது.

மாநாட்டில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது:-

ஆட்சி அதிகாரம்:

இங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இருக்கிறோம். அமெரிக்காவில் நீக்ரோ இனத்தவர் வெள்ளைமாளிகையின் ஜனாதிபதியாக வருவார் என்று காஞ்சி இதழில் 11 வாரங்களாக அண்ணா எழுதினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தேர்தல் மாநாட்டுக்கு செல்ல முடியாமல் வெளியே கிடந்தார் ஒபாமா. ஆகஸ்டு 28-ந் தேதி அதிகாரப்பூர்வ வேட்பாளராக பேச இருக்கிறார். 6 வருடங்களுக்கு முன்பு அவர் கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு 4 பேர் கூட வரவில்லை. இன்று உலகம் முழுவதும் அவர் உதடு அசைவதற்காக காத்து கிடக்கிறார்கள்.

நாமும் சாதிக்க முடியும். உண்மையான திராவிட இயக்கம் என்று பதிவு செய்ய முடியும். ஈழத்தமிழர்களை விடுதலை அடைய செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூட்டை தடுக்க முடியும். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நதிகளை இணைக்க முடியும். உழவர்கள் கண்ணீர் சிந்தாமல் தடுக்க முடியும்.

கம்ïனிஸ்டு கட்சிகள் நாடகம்: விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதில்லை. இந்த மாநாட்டின் மூலமாக விவசாயிகளுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன். என்ன விலைக்கு கேட்டாலும், உங்கள் விவசாய நிலத்தை விற்று விடாதீர்கள். 5 லட்ச ரூபாய்க்கு கேட்டால் கூட கொடுக்காதீர்கள்.

விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. விலைவாசியை உயர்த்தினால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கம்ïனிஸ்டு கட்சிகள் ஏன் சொல்லவில்லை. ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருந்தால் விலைவாசி உயர்ந்திருக்காது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருக்க மாட்டார்கள். கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும். திருச்சியில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.

விழாவில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரையும் பேசினார்.

தீர்மானங்கள்: மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் 2 விழுக்காடு விற்பனை வரியை குறைத்தது வெறும் கண்துடைப்பு ஆகும்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.

இலங்கை பிரச்சினை: சிங்கள அரசு நடத்தும் இனப்படுகொலைக்கு உடந்தையாக விமான படைக்கு ரேடார்களையும் கொடுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி வருவதோடு, பிற நாடுகளிலிருந்து இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவும் நோக்கத்தில் 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலர் இந்திய அரசு, இலங்கை ராணுவத்துக்கு வழங்கியிருப்பது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோழமையும், நல்லுறவும் கொண்டுள்ள அ.தி.மு.க.வுடன் தோள் சேர்ந்து மக்கள் சக்தியை திரட்டுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ம.தி.மு.க. பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் எம்.பி. இரா.செழியன், துணைபொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில்சமëபத், தலைமைக்கழக செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைப்புலி தாணு, இயக்குனர் சுந்தரராஜன், வெளியீட்டுக்கழக செயலாளர் கவிஞர் தமிழ்மாறன், மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், மனோகரன், ஜீவன், பாலவாக்கம் சோமு, மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார், செய்தி தொடர்பாளர் நன்மாறன், சீமாபஷீர், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி: முன்னதாக நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து சீருடை அணிந்த ம.தி.மு.க. தொண்டர் படையினரின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த அணிவகுப்பு அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக மாநாடு நடைபெறும் தீவுத்திடலுக்கு சென்றது. இந்த பேரணியை தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்ட தனி மேடையில் இருந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

தினமலர் செய்தி:
சென்னை: "தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது,என்று வைகோ ஆரூடம் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க. மண்டல மாநாட்டில் வைகோ பேசியதாவது:

ம.தி.மு.க.,வை அழிக்க முதல்வர் கருணாநிதி போட்ட திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விட்டது. பலம் பொருந்திய உங்களுடன் மோதி வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அண்ணாதுரை உருவாக்கிய பாசத்துடிப்பு, தி.மு.க.,வில் அடங்கிப் போயுள்ளது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய பரிமாணமாக ம.தி.மு.க., உள்ளது. கோட்டையில், குடும்பத்தில், கூட்டணியில் குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், முதல்வர் கருணாநிதி இப்போது பலவீனமாக உள்ளார். அவர் பலவீனமாக இருக்கும் போது அவர் மீது கடுமை யான கணைகளை தொடுக்க விரும்பவில்லை. குடும்பத்தினருக்காக திராவிட இயக்கத் தலைவர்களை கருணாநிதி மறந்து வருகிறார்.

நிர்வாக சீர்கேடு காரணமாக ஏற்கனவே மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலை யில், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் விதத்தில் திருட்டு மின்சாரம் மூலம் கடலூரில் தி.மு.க., மாநாடு நடந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியை மக்கள் தூக்கி எறிவர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.
நான்கு ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள் இப்போது தவறான பொருளா தாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் திட்டமிட்ட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழக்கப் போகின்றனர். குத்துச் சண்டையில் மொத்தம் 16 ரவுண்டுகள் உள்ளன. அதுபோல், நாங்கள் இப்போது 15வது ரவுண்டில் உள்ளோம். சினிமாவில் ஹீரோ கடைசியில் ஜெயிப்பது போல் ம.தி.மு.க., ஜெயிக்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.

தி ஹிந்து செய்தி:

UPA, DMK regimes have failed on all fronts, says MDMK

CHENNAI: Accusing the Congress-led UPA at the Centre and the DMK government in Tamil Nadu of failing on all fronts, the Marumalarchi Dravida Munnetra Kazhagam on Wednesday vowed to mobilise people, along with the AIADMK, against both the governments in the coming Lok Sabha elections.

A resolution adopted at the MDMK’s Chennai zonal conference stated that the UPA government could not even fulfil the promises made in the Common Minimum Programme. “It has also failed to prevent the neighbouring States from acting against the integrity of the nation through their refusal to acknowledge the rights of Tamil Nadu in the Cauvery water dispute, the Mullaperiyar dam issue, the Hogenakkal drinking water project and other issues. The DMK government has betrayed the interests of Tamil Nadu,” it said.

Addressing the conference, party general secretary Vaiko alleged that Chief Minster M. Karunanidhi had converted the DMK into a family property.

“The MDMK will capture political power in the State. We will put an end to the sufferings of the Eelam Tamils. We can stop the killing of Tamil fishermen by the Sri Lankan Navy,” he said.

AIADMK general secretary Jayalalithaa sent greetings for the conference. It was read out by MDMK propaganda secretary M. Thambidurai.

MDMK legislature party leader M. Kannappan demanded that the ban on the Liberation Tigers of Tamil Eelam be lifted.

சிஃபி செய்தி:

மதிமுக மாநாட்டுத் தீர்மானம்

சென்னை: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் மதிமுக சென்னை மண்டல மாநாடு, ஜூன் 18 அன்று பேரணியுடன் தொடங்கியது. பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். பொதுக்கூட்டம் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கியது. மதிமுகவின் முன்னணித் தலைவர்களும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்து துரோகம் இழைத்துவிட்டது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்கான பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்குக் கொலை செய்யும் அநிறைவேற்றப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தட்ஸ்தமிழ் செய்தி:

காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது-வைகோ

சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது என்றார் வைகோ.

மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 141 பவுன் தங்க வாள் வைகோவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

மாநாட்டில் வைகோ பேசியதாவது:

இன்றைக்கு சொல்ல முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏன் சொல்ல முடியவில்லை.

எது எதற்கோ அரசை மிரட்டிக் காரியம் சாதிக்கும் இவர்கள், அத்தியாவசியமான இந்த பிரச்சினைக்காக ஒரு முறை அரசை மிரட்டியிருக்கலாமே... அப்படிச் செய்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருக்காது. எல்லோரும் திட்டமிட்டு நாடகம் ஆடுகிறார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படப் போகிறது. அப்போதுதான் இவர்கள் தங்களின் தவறுகளைப் புரிந்து கொள்வார்கள்.

விளை நிலங்களைப் பாதுகாப்போம்:

இன்றைக்கு நம் விவசாயத்தை அச்சுறுத்தும் பிரச்சினை மழையோ, தண்ணீரோ அல்ல. உழுவதற்கு நிலங்கள் இல்லாத நிலைதான். நகரங்களை ஒட்டி இன்று கிராமங்களோ வயல் வெளிகளோ இல்லை. அப்புறம் எப்படி விவசாயம் இருக்கும்?

விவசாயிகளே... உர விலை, விதைகளின் விலைகளை அரசு உயர்த்தி, உங்களை விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப் பார்க்கிறது. அப்போதுதானே வெறுத்துப் போய் விவசாயத்துக் கைவிட்டு நிலத்தை விற்பீர்கள்... அப்போதுதானே இங்கு தொழிற்சாலை கட்டிவிட்டு, வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்ய முடியும்...! இது எத்தனை பெரிய சதி தெரியுமா?

நண்பர்களே... எவ்வளவு விலை கொடுத்தாலும் உங்களை நிலங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்றார் வைகோ.

அதிமுக சார்பில் அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். முன்னாள் எம்.பி. இரா. செழியன், மதிமுக துணைப் பொதுச் செயளர் மல்லை சத்யா, கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.

ஏனைய செய்திகள்:

1 comment:

Kotticode said...

Dear Annan Vaiko
Udanukudan ungal news vanthaal innum nalla irukkum
Anpudan
T.Suresh Kumar
Kotticode